tag:blogger.com,1999:blog-53818151496841779022024-03-13T16:24:19.331-07:00நான் விரும்பி படித்த புத்தகங்கள்நான் படித்த புத்தகங்களையும், எழுத்தாளர்கள்,சிற்றிதழ்கள், பதிப்பகங்கள் பற்றியும் உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.குகன்http://www.blogger.com/profile/04496532260803041131noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-5381815149684177902.post-15248045017195994042009-01-25T17:22:00.000-08:002009-01-25T17:25:33.953-08:00லக்கிலுக்கின் 'சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்'பதிவர்கள் மத்தியில் பிரபலமான லக்கிலுக் எழுதிய முதல் நூல் இது. ( உண்மையான பெயர் 'யுவகிருஷ்ணா' )<br /><br />சினிமாவில் நடிக்க நினைப்பவர்கள் விளம்பர துறை 'பை பாஸ்' வழி என்றாகி விட்டது. யார் வேண்டுமானும் சினிமாவில் நடிப்பது போல் விளம்பரத்தில் நடிக்க முடியாது. நல்ல அழகு , உடல் தோற்றம், கான்ஸப்ட் தகுந்த வயது என்று பல விஷயங்களை பற்றி யோசிக்க வேண்டும். இருபது நோடியில் கவர்வது போல் கதை தயார் செய்து, மக்கள் விரும்புவது போல் விளம்பரம் செய்ய வேண்டும் என்றால் மாதக்கணக்கில் ஆராய்ச்சி செய்ய வேண்டும். பல பேர் உடல் வருத்தி உழைத்த விளம்பரத்திற்கு உண்மையான வெற்றி அவர்கள் விளம்பரப்படுத்திய பொருளின் விற்பனையில் தான் இருக்கிறது. இரண்டே கால் மணி நேர சினிமா எடுப்பதைவிட, இருபது நொடி விளம்பரம் எடுப்பது மிகவும் கடினம் என்பதை முதல் அத்தியாத்திலேயே நமக்கு சொல்லிவிடுகிறார்.<br /><br />இரண்டாவது அத்தியாயத்தில் விளம்பரம் உலகில் தோன்றிய வரலாறும், முன்றாவது அத்தியாயத்தில் இந்தியாவில் விளம்பரம் தோன்றிய வரலாறும் எழுதியிருக்கிறார். வரலாறு பிடிக்காதவர்களுக்கு கொஞ்சம் அலுப்பு தட்டும். ஆனால், விளம்பரத்தை பற்றி படிக்கும் போது அது உருவான தகவலை தெரிந்துக் கொள்வதில் தவற ஒன்றுமில்லை.<br /><br />பின் வரும் அத்தியாயங்களின் ஒரு விளம்பர நிறுவனம் ஒரு விளம்பரத்தை எப்படி அனுக வேண்டும், க்ளைட் தேவை எப்படி பூர்த்தி செய்ய வேண்டும் என்று எல்லா தகவல்களை எளிய நடையில் சொல்லியிருக்கிறார்.<br /><br />இந்த புத்தகத்தில் எனக்கு பிடித்த ஒரு விஷயத்தை சொல்லியாக வேண்டும். ஒரு இடத்தில், விளம்பரத்துறையில் ஐந்து வருடம் அனுபவம் உள்ளவர்கள் கூட சொந்தமாக விளம்பர நிறுவனம் தொடங்கலாம் என்று குறிப்பிட்டுயிருந்தார். நான்கு வருடங்களுக்கு முன்பு எனக்கு இது தெரிந்திருந்தால் நானும் விளம்பர உலகில் நுழைந்திருப்பேன். ( ஐ.டி துறையில் நுழைந்தவர்கள் பல வருடங்கள் அனுபவம் இருந்தாலும் ஐ.டி நிறுவனத்தை அவ்வளவு எளிதில் தொடங்க முடியாது.)<br /><br />ரொம்பவும் ரசித்த அத்தியாயம் என்றால் 'இருபதாவது' அத்தியாயமான 'எதிர்காலம்' என்ற அத்தியாயம் தான். விளம்பர துறை எப்படி இயங்குகிறது, என்ன செய்ய வேண்டும் என்று சொன்னதோடு இல்லாமல் எதிர்காலம் விளம்பரங்கள் எப்படி இருக்க போகிறது என்பதை சொல்லியிருக்கிறார். தொலைக்காட்சியில் விளம்பர தோன்றும் போதே விரும்பமுள்ளவர்கள் கம்ப்யூட்டரில் கிளிக் செய்து வாங்குவது போல் பொருட்கள் வாங்கும் காலம் வரலாம் என்கிறார். இதனால், கூட்ட நெரிசல்கள் சென்று ஷாப்பிங் செய்ய வேண்டியதில்லை என்பதை ரசிக்கும் படி சொல்லியிருக்கிறார். என்.எஸ்.கேவின் 'விஞ்ஞானத்த வளர்க்க போரேன்டி' பாட்டில் சொல்லும் விஷயங்கள் போல் இந்த அத்தியாயத்தில் குறிப்பிட்டுகிறார். நிச்சயமாக இப்படி ஒரு வளர்ச்சி விளம்பர துறை அடையும் என்பது எந்த ஒரு சந்தேகமும் இல்லை.<br /><br />இவ்வளவு நாள் தேவையில்லாத பல மொக்கை பதிவுகளால் லக்கிலுக் தன் நேரத்தை வீண்ணடித்திருக்கிறார். எழுத்துலகில் அவரை கொண்டு வந்த பா.ராவுக்கு இந்த இடத்தில் நன்றி சொல்லியாக வேண்டும்.<br /><br />லக்கிலுக்கு இப்படி ஒரு முகம் இருப்பது மிகவும் வியப்பாக இருக்கிறது. மேலும் இது போல பல படைப்புகள் படைக்க வேண்டும் பதிவு வாசகர்களாக நாம் வாழ்த்துவோம். (‘யுவகிருஷ்ணா’ என்பதை விட ‘லக்கிலுக்’ தான் நன்றாக இருக்கிறது. இந்த பெயரிலே அடுத்த நூல் வெளியிடுங்கள்.)<br /><br />பக்கங்கள் : 152 , <br />விலை : 70.<br />கிழக்கு பதிப்பகம்குகன்http://www.blogger.com/profile/04496532260803041131noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5381815149684177902.post-57936873834607459812009-01-25T04:19:00.000-08:002009-01-25T04:22:50.850-08:00சிலப்பதிகாரம் : உலக நன்நெறி நூல்( உலக நன்நெறி நூல்களில் சிறந்தது எது ? திருக்குறளா ? சிலப்பதிகாரமா ? அல்லது 'கம்பராமாயணமா' என்ற தலைப்பில் 'சிலப்பதிகாரத்திற்கு ஆதரவாக நான் பேசியது.)<br /><br />உலக நீதி போதனை சொல்லும் நூல் திருக்குறள். 'இராமர்' என்ற வீரரின் வீரத்தை அதிகமான சொல்லும் காவியம் தான் 'கம்பராமாயணம்'. ஆனால், 'சிலப்பதிகாரம்' அப்படி இல்லை. ஒரு பெண் அன்றாட வாழ்க்கை சந்திக்கும் துன்பங்கள், துயரங்கள் பற்றி விபரிக்கும் காவியம். திருக்குறளை எல்லோரும் பின்பற்றியிருந்தால் உலகில் பிரச்சனைகளே இருக்காது. நடைமுறையில் சாத்தியம் இல்லை என்றே பலர் திருக்குறளை மறந்துவிட்டனர். 'கம்பராமாணத்தில் பல விஷயங்கள் இக்கால கட்டத்தில் பொருந்தாது. அதில் கடவுள் வந்து உதவுவது போல் கடவுள் நேரில் வருவதில்லை. ஆனால், 'சிலப்பதிகாரம்' இக்கால கட்டத்தில் மட்டும் அல்ல.... எக்கால கட்டத்தில் பொருந்தும். குறிப்பாக பெண்களுக்கு பொருந்தும். எந்த துன்பம் வந்தாலும் நாம் எதிர் கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துகிறது ?<br /><br />ஆண்களை மையமாக வைத்து காவியம் எழுதியவர்கள் மத்தியில் பெண்களை மையமாக வைத்து அவளுடைய அன்பு, அறவனிப்பு, பொறுமை, கருணை, கோபம் என்று விளக்கும் நூல் தான் 'சிலப்பதிகாரம்'. வெறும் அறிவுரை விரும்பாதவர்கள் கூட கதையோடு அறிவுரை கூறினால் காது கொடுத்து கேட்பார்கள்.அந்த வகையில் சிலப்பதிகாரம் என்று நிலைத்து நிற்க்கும். பெண்ணுரிமை பற்றி பாரதிக்கு முன் குரல் கொடுத்தவர் இளங்கோவடிகள் என்று 'சிலப்பதிகாரம்' உதராணமாக வைத்து சொல்லலாம். அந்த அளவிற்கு பெண்கள் இக்காலத்தில் கூட சந்திக்கும் பிரச்சனைகளை பற்றி இளங்கோவடிகள் அன்றே எழுதியிருக்கிறார்.<br /><br />சிலப்பதிகாரத்தில் நன்நெறி எங்கே இருக்கிறது ?? மணந்த கன்னகியை விட்டு கோவலன் மாதவியிடத்தில் சென்றானே, அந்தப்புரத்தில் செல்லும் அவசரத்தில் கோப்பெருஞ் சோழன் தவறாக கூறிய வார்த்தை ஒரு உயிரை கொன்று விட்டதே... இதில் நன்நெறி எங்கே உள்ளது என்று கேள்வி எழும். பல கேள்விகளில் வேள்வி நடத்தியதால் தான் இன்று வரையிலும் ‘சிலப்பதிகாரம்’ வாழ்ந்துக் கொண்டு இருக்கிறது.<br /><br />கணவன் தவறு செய்து வந்தால் மனமுவர்ந்து ஏற்றுக் கொள்ளும் மனம் பல பெண்களிடம் இன்று இல்லாமல் போனது. வியாபாரத்தில் தோல்வி, வேலையில் சோர்வு, பொது இடத்தில் ஏதாவது ஒரு பிரச்சனை என்று வீட்டுக்கு வரும் ஆண்களை மலர்ந்த முகத்தோடு மனைவி அழைக்க வேண்டும் என்பதை உணர்த்தும் நூல் தான் 'சிலப்பதிகாரம்'. உடனே வேறு பெண்ணிடம் தொடர்பு வைத்திருக்கும் ஆண்களை மனைவி மன்னிக்க வேண்டும் என்ற பொருளில் எடுத்துக் கொள்ள வேண்டாம். வெளியே சென்று வரும் ஆண் எந்த கஷ்டத்தில் வீட்டுக்கு வருகிறார் என்பதை பெண் புரிந்துக் கொண்டால், அந்த ஆண் தன் வாழ்நாள் இறுதி வரை அந்த பெண்ணுடம் கழிக்க தோன்றும் என்பதை ‘சிலப்பதிகாரம்’ உணர்த்துகிறது.<br /><br />ஆண்களுக்கு மட்டுமே துறவரம் போதுவாக இருந்த காலக்கட்டத்தில், தேவதாசி குடும்பத்தில் பிறந்த மாதவி தன் மகள் மணிமேகலையை கற்பு நெறியோடு துறவரம் மேற்கொள்ள செய்கிறாள். மணிமேகலை கற்பு நெறி மாறாமல் துறவரத்தில் ஈடுபடுகிறாள். அதுவும் புத்த துறவியாக இருப்பது மிக பெரிய காரியம். ஆண்கள் கூட யோசிக்கும் புத்த துறவு வாழ்க்கையை தன் மகள் மேற்கொண்டு வாழ வேண்டும் என்று மாதவி நினைத்தாள். தேவதாசி குலம் தன்னோடு போகவேண்டும் என்று கருதினாள்.<br /><br />ஆண்கள் செய்யும் வேலை பெண்கள் செய்ய வேண்டும் என்று கூறும் லட்ச குரல்கள் இன்று உண்டு. ஆனால், அந்த காலத்தில் பெண்கள் துறவரம் மேற்கொள்ள முடியும், எந்த குடும்பத்தில் பிறந்தாலும் நெறி தவறாமல் வாழ முடியும் என்று உணர்த்தி இன்று பல பெண்களுக்கு உத்வேகமாய் இருப்பது ‘சிலப்பதிகாரம்’ தான்.<br /><br />சிலப்பதிகாரம் அன்பு, பண்பு, கற்பு நெறியை மட்டும் உணர்த்தவில்லை. தவறு செய்தவன் யாராக இருந்தாலும் தைரியமாக கேள்வி கேட்கும் துணிச்சல் பெண்கள் இடம் உண்டு என்பதையும் காட்டுகிறது. தன் கணவரை கொன்ற மன்னரிடம் 'தேரா மன்னா செப்புவ துடையேன்..' என்று கேட்கும் பெண்ணில் மன உறுதியை காட்டுகிறது. இன்று அரசியல் எடுத்துக் கொண்டால், பதவியில் இருக்கும் ஒரு ஆண் செய்யும் தவறை துணிச்சலாக கேட்கும் மனம் பெண்ணுக்கு இருக்கிறது என்றால் ‘சிலப்பதிகாரம்’ காட்டிய வழி தான் என்று சொன்னால் மிகையாகாது.<br /><br />சிலப்பதிகாரம் பெண்களுக்கு மட்டும் தான் நன்நெறி கூறுகிறதா... ஆண்களுக்கு இல்லையா என்று இன்னொரு கேள்வி எழும். வாழ்நாள் முழுக்க தன்னை நம்பி வரும் பெண்ணை கை விட்டு வாழ்ந்தால் பொன், பொருள் இழந்து நாடோடியாக திறிய வேண்டியது தான் என்பதை கோவலன் வாழ்க்கை மூலம் இளங்கோவடிகள் கூறுகிறார். பழி, பாவங்களுக்கு உட்பட்டு ஊழ்வினையால் கொல்லப்படுவான் என்பதற்கு கோவலன் வாழ்க்கை ஆண்களுக்கு முன் உதாரணம்.<br /><br />பதவியில் இருக்கும் ஆண் எந்த நிலையிலும் மனம் தளரக் கூடாது, தீர்ப்பு அளிக்கும் முன் பல முறை யோசிக்க வேண்டும். அனுபவம் உள்ளவர்களிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும். கோப்பெருஞ் சோழன் அவசர தீர்ப்பால் கோவலனை கொன்றதோடு மட்டுமில்லாமல் மதுரை எரிவதற்கு காரணமாகவும் இருந்தது. எந்த விஷயத்தை பேசுவதாக இருந்தாலும், காலம் அறிந்து சொல்ல வேண்டும். அந்தப்புரத்தில் அவசரமாக சென்றுக் கொண்டு இருந்த மன்னனிடம் வழக்கு எடுத்து சென்ற காவலாளி மீதும் தவறு இருக்கிறது. காலம் அறிந்து சொல்ல வேண்டும் என்பதற்கு 'சிலப்பதிகாரம்' நீதி நூலாய் திகழ்கிறது.<br /><br />சந்தர்ப்பம் வந்தால் சாந்தமாக இருந்த கன்னகி கூட கோபம் கொண்டு மதுரை எரிப்பாள். மனம் இருந்தால் எந்த சூழ்நிலையிலும் மாதவிப் போல் 'ஒருவனுக்கு ஒருத்தி' என்று வாழலாம். இரண்டு மனைவி வைத்திருப்பது வீரமாய் சொன்ன காவியங்கள் மத்தியில், இரண்டு மனைவியிடம் வாழ்ந்தால் கோவலன் போல் நாடோடியாக திரிந்து இறக்க வேண்டியது வரும். மன்னர் செய்யும் சிறு தவறு கூட மக்கள் வாழ்க்கையை பாதிக்கும். இப்படி பல நன்நெறிகள் சிலப்பதிகாரத்தில் உண்டு.குகன்http://www.blogger.com/profile/04496532260803041131noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5381815149684177902.post-18510213245347228672009-01-13T05:30:00.000-08:002009-01-13T05:39:58.038-08:00எஸ்.ராமகிருஷ்ணனின் 'நெடுங்குருதி''கள்ளிகாட்டு இதிகாசம்' பிறகு முழுக்க முழுக்க கிராமத்து மண்வாசனை நிறைந்த நாவலை படித்திருக்கிறேன். பெரிய புத்தகம் என்பதால் படித்து முடிக்க இரண்டு வாரம் தேவைப்பட்டது. 'நெடுங்குருதி' தலைப்பை படித்தவுடன் இரத்தம், வன்முறை, கிரோதம் நிறைந்த நாவல் என்று நினைத்தேன். ஆனால், மனிதர்களின் உணர்வுகள் கொல்லப்படுவதும், உணர்ச்சிகள் இறந்து கண்ணீர் போல் வேம்பலை மண்ணை நனைப்பதும் தான் இந்த நாவலின் கரு. <br /><br />வேம்பலை கிராமம் எஸ்.ராமகிருஷ்ணனின் கற்பனை கிராமமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். வேம்பர்கள் களவு தொழிலை முக்கியமாக கொண்டு வாழ்க்கிறார்கள். அந்த கிராமத்தில் வாழும் நாகு என்ற சிறுவனின் குடும்பம் எப்படி கிராமத்தில் வாழ்க்கிறார்கள் என்பதை முதல் பாதியில் விவரிக்கிறார். பணக்காரன் என்று யாரும் அந்த கிராமத்தில் இல்லை. அடிப்படை வசதிகள் இல்லாமல் வாழ்கிறார்கள் என்று சொல்வதை விட, வசதி என்றால் என்னவென்று தெரியாமல் வாழ்க்கிறார்கள். இரண்டாவது பாதியில் வாலிபனாக வளர்ந்த நாகு மல்லிகாவை திருமணம் செய்துக் கொண்டு, அதன் பின் இறந்து போகிறான். கதை நாயகன் 'நாகு' பாதியிலே இறந்து விட யாரை மையமாக வைத்து கதை நகரப்போகிறது என்ற குழப்பம் வருகிறது. மல்லிகாவுக்கு பிறந்த வசந்தா, நாகுவால் ‘வேசி' ரதினாவதிக்கு பிறந்த திருமால் இருவரின் பள்ளிபருவத்தை நோக்கி மூன்றாவது பகுதி கதை செல்கிறது. நான்காவது பகுதியில் திருமால் வேலை தேடி ஊரை விட்டு செல்வதும், வாழ்வதற்காக தன் கணவனோடு வசந்தா வேம்பலை கிராமத்துக்கு வருவதும் என்று கதை முடிகிறது. இப்படி ஒரு பத்தியில் கதையை சொல்லிவிடலாம். ஆனால், இதில் இருக்கும் சோகம், ஏமாற்றம், ரனம் இதை படித்தவர்கள் மனதில் இருந்து மறைய நான்கு நாளாவது ஆகும்.<br /><br />பல இடங்களில் எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துக்கள் நெகிழவைக்கிறது. அதில் குறிப்பாக ஒரு இடத்தில் கள்வன் சிங்கியின் வாலிப பருவத்தை சொல்லும் போது சிறுமி கழுத்தில் இருந்து நகைகளை திருட கூடாது என்ற கொள்கையை விவரிக்கும் போது திகைப்பாக இருக்கிறது. வேம்பலை ஊரில் இன்னொரு பகுதியை இறந்தவர்கள் வாழ்வதற்கான ஊர் என்று ஒரு காதாப்பாத்திரத்தின் வாயிலாக சொல்கிறார். அந்த கதாப்பாத்திரம் "வாழ்ந்து இறந்த பிறகு தான் வீட்டின் மீதும், ஊரின் மீதும் நேசம் அதிகமாகிவிடுகிறது. இறப்பிற்கு பிறகும் மனிதனுக்கு ஏதோ பிடிமானம் தேவைப்படுகிறது. சாவிற்கு பிறகும் கூட ஊரை விலக்கி எளிதாக போய் விட முடியாது" என்று விளக்குகிறார்.<br /><br />இன்னொரு இடத்தில் களவாளிகள் வாழும் ஊரில் மின்சார விளக்கு போடுவது கூட தெய்வகுத்தம் என்று சொல்லும் வரிகள் மிகவும் அழகு. “வேம்பலையில் பள்ளிகளே இல்லையா” என்று மனதை நெருடிய போது எழுபதாவது அத்தியாயத்தில் பள்ளிகளை பற்றி சொல்கிறார். ஒரு கிராமத்தில் குறைந்தது ஆறுமாதமாவது தங்கி வாழ்ந்தால் தான் இது போன்ற நாவலை குறிப்பெடுத்து எழுத முடியும். முழு நேர எழுத்தாளரான எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் அப்படி தான் எழுதியிருப்பார் என்று படிக்கும் போதே உணர முடிகிறது.<br /><br />'சாகித்ய அகாதமி விருது' க்கு முழு தகுதி வாய்ந்த நாவல் என்று சொல்லலாம்.<br /><br />விலை.250. பக்கங்கள் : 472<br />உயிர்மை பதிப்பகம்<br />11/29, சுப்பிரமணியம் தெரு.<br />அபிராமபுரம், சென்னை - 18.குகன்http://www.blogger.com/profile/04496532260803041131noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-5381815149684177902.post-88100531895582447182009-01-09T18:18:00.000-08:002009-01-09T18:24:45.618-08:00சென்னை புத்தகக்கண் காட்சியில் இரண்டாவது நாள்ஐந்து மணிக்கு அலுவலகத்தில் இருந்து புரப்பட வேண்டும் என்று முடிவு செய்து சரியாக 6.15 மணிக்கு அலுவலகத்தில் இருந்து புரப்பட்டேன். ( அப்போது கூட செல்லும் போது ஒரு போன் வந்தது. திங்கள் கிழமை பார்த்துக் கொள்ளலாம் என்ற தைரியத்தில் வந்து விட்டேன்). வண்டியை எடுக்கும் போது தான் தெரியும், என் வண்டியில் பெட்ரோல் சரியாக வீட்டுக்கு வரும் அளிவில் இருந்தது. சென்னையே பெட்ரோல் தட்டுப்பாடில் இருக்கும் போது எனக்கு மட்டும் எங்கு போய் தேடுவது. நாளை எப்படியும் நிலைமை சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் நண்பர் ஒருவர் தன் வண்டியில் இருந்து 300 ml (இலவசமாக) கொடுத்தார்.<br /><br />சரியாக 7.05 மணிக்கு புத்தகக்கண் காட்சிக்கு வந்தேன். கவுண்டரில் டிக்கேட் வாங்கி உள்ளே நுழைந்தவுடன் நேராக ஸ்டால்.330 (அன்னை ராஜேஸ்வரி பதிப்பகத்தின் ஸ்டால்) தேடினேன். இணையத்தில் ஸ்டால் வரிசை பார்த்ததால் ஸ்டால் தேடுவதில் அதிகம் நேரம் எடுத்துக் கொள்ளவில்லை. என் நண்பர் ஒருவரின் சிபாரிசோடு நான் எழுதிய 'நடைபாதை', 'எனது கீதை' நூலை ஐந்து பிரதியை கொடுத்தேன். ( புத்தகம் வாங்க வருபவர்கள் மத்தியில் நான் புத்தகத்தை விற்க சென்றேன். யாராவது ஸ்டால் எண்.330 சென்று வாங்கினால் சந்தோஷம்).<br /><br />என் புத்தகத்தை கொடுத்த பிறகு மற்ற புத்தகங்களை ஒவ்வொரு ஸ்டாலாக சென்று பார்த்தேன். தி.க . ஸ்டாலில் இரண்டு புத்தகமும், நக்கீரன் ஸ்டாலில் ஒரு புத்தகமும், கிழக்கு இலக்கியத்தில் மூன்றும், கிழக்கு ஸ்டாலில் இரண்டு புத்தகமும் வாங்கினேன். எஸ்.ராமகிருஷ்ணனின் 'கதாவிலாசம்' வாங்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டு இருந்தேன். அந்த புத்தகத்தை இன்று தான் வாங்க முடிந்தது. ஞானபாநு ஸ்டாலில் 'ஞாநி' அவர்களை பார்த்ததால் அவர் புத்தகம் வாங்கி அவரிடம் ஆட்டோகிராப் வாங்க வேண்டும் என்று தோன்றியது. ஞாநி எழுதிய 'அறிந்தும் அறியாமலும்' புத்தகம் வாங்கி அவர் கையெழுத்து வாங்கினேன்.<br /><br />" நீங்கள் எழுதிய <a href="http://tamilbookreview.blogspot.com/2008/12/blog-post_17.html"> "நெருப்பு மலர்கள்"</a> நூலை பற்றி என் வலைப்பதிவில் எழுதியிருந்தேன். நீங்கள் கூட ‘நன்றி’ என்று பின்னூட்டம் எழுதி இருந்தீர்கள். ஞாபகம் இருக்கா ஸார்" என்று கேட்டேன். "ஆ... ஞாபகம் இருக்கு. ரொம்ப நல்ல புத்தகம். அம்மா, அக்கா, Girl பிரஸ்ண்ட்ஸ்க்கு பரிசாக கொடுக்கலாம். ரொம்ப பேரு அந்த புக்க மறந்திட்டாங்க. நீங்க ஞாபகம் படுத்திட்டீங்க… ரொம்ப நன்றி" என்றார்.<br /><br />'அறிந்தும் அறியாமலும்' புத்தகத்தில் ஆட்டோகிராப் போடும் போது, " போதுவா நான் யாருக்கும் ஆட்டோகிராப் போட மாட்டேன். புக் ஃபேர்ல மட்டும் என் புக்க வாங்குறவன்களுக்கு ஆட்டோகிராப் போடுவேன். ஒரு வியாபாரியாக..." என்றார்.<br /><br />கிழக்கு இலக்கியம் ஸ்டாலில் 25 சதவீதம் கழிவு விலை என்பதால் தேடி தேடி மூன்று புத்தகங்கள் எடுத்தேன். அப்போது, 'கஜினி' இயக்குநர் முருகதாஸ் வந்திருந்தார். சினிமாக்காரர்களிடம் நான் பேச விரும்பவில்லை. புத்தகங்கள் வாங்கிவிட்டு அந்த ஸ்டால் விட்டு வந்துவிட்டேன். அவரை சுற்றி ஒரு இளைஞர் கூட்டம் நின்றது.<br /><br /> என்னுடைய ஆல் டைம் பேவரிட் ஸ்டால் கிழக்கு பதிப்பகத்திற்குள் நுழைந்தேன். பா.ராவின் 'ஆயில் ரேகை’யும், லக்கிலுக்கின் 'விளம்பர உலகம்' நூலையும் வாங்கினேன். பத்ரி அவர்களிடம் ஆயில் ரேகை புத்தகத்தில் கையெழுத்து வாங்கி விட்டு, ஹரன் பிரசன்னாவிடம் என்னை அறிமுகம் செய்துக் கொண்டேன்.<br /><br />முப்பது ஸ்டால் தான் பார்த்திருப்பேன் அதற்குள் 8.30 மணியாகி விட்டது. நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று வந்துவிட்டேன். இன்று புத்தகக்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்கள்<br /><br />ஜப்பான் - எஸ். சந்திரமௌலி- Prodigy <br />கதாவிலாசம் - எஸ்.ராமகிருஷ்ணன் - விகடன்<br />இத்தாலியின் யுத்தப்பேய் முசோலினி - ஜெகாதா - சாருபிரபா பப்ளிகேஷன்ஸ்<br />ஆயில் ரேகை - பா.ராகவன் - கிழக்கு<br />சுண்டி இழுக்கும் விளம்பர உலகம் - யுவ கிருஷ்ணா - கிழக்கு<br />கடல் புரத்தில் - வண்ணநிலவன் - கிழக்கு<br />ஸ்.... - முகில் - கிழக்கு<br />அமெரிக்காவில் கிச்சா - கிரேஸி மோகன் - கிழக்கு<br />அறிந்தும் அறியாமலும் - ஞாநி - ஞானபாநு<br />சேது சமுத்திரத் திட்டமும் ராமன் பாலமும் - கலைஞர் - தி.க <br />பா.ஜ.க.வும் இந்துத்வாவும் - கி.வீரமணி - தி.க<br /><br />ஒரு சில புத்தகங்கள் முன்பே வாங்க வேண்டும் என்று திர்மானம் செய்ததால் சீக்கிரம் வாங்கிவிட்டேன். இல்லை என்றால் ஒன்றரை மணி நேரத்திற்குள் இத்தனை புத்தகம் என்னால் வாங்கி இருக்க முடியாது.<br /><br />இவ்வளவு சொல்லிவிட்டு என் புத்தகம் கிடைக்கும் ஸ்டால் பற்றி சொல்லவே இல்லை பாருங்கள்....<br /><br /><strong>எனது கீதை</strong> (கட்டுரை). விலை.40<br />அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம் (ஸ்டால். 330)<br /><br /><strong>நடைபாதை</strong> (சிறுகதைகள்). விலை.40 - <br />அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம் (ஸ்டால். 330)<br />வனிதா பதிப்பகம் (ஸ்டால்.132)<br /><br /><strong>கலீலியோ கலிலி </strong>(வாழ்க்கை வரலாறு) - விலை.25<br /><strong>ரைட் சகோதரர்கள்</strong> (வாழ்க்கை வரலாறு) - விலை.25<br />- Prodigy (ஸ்டால். 222 & 223)குகன்http://www.blogger.com/profile/04496532260803041131noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5381815149684177902.post-49029411080801036162009-01-03T17:45:00.000-08:002009-01-03T17:49:54.473-08:00ஜெயமோகன் எழுதிய 'கண்ணீரைப் பின்தொடர்தல்''நான் விரும்பி படித்ததில் பிடித்தது' பதிவு தொடங்கியது முதல் ஒவ்வொரு புத்தகத்தில் இருந்து எனக்கு பிடித்ததை மட்டும் தான் பகிர்ந்துள்ளேன். பிடிக்காததையும் வெளிப்படையாக கூறியிருக்கிறேன். தனிப்பட்டவர்களின் சந்தோஷத்திற்காகவும், விளம்பரத்திற்காகவும் எழுதவில்லை. எத்தனையோ நூல்கள் வாசகர் பார்வைக்கு வராமல் இருக்கிறது. என் பார்வைக்கு வந்த நூலை பகிர்ந்து கொள்ளும் போது, இதை பார்த்து அந்த ஆசிரியரின் இரண்டு நூல் விற்றால் அதுவே எனக்கு சந்தோஷம். எதுக்கு இவ்வளவு பில்டப் கொடுத்து ஆரம்பிக்கிறேன் என்று நினைக்கிறீர்களா ???<br /><br />முதல் முறையாக ‘ஜெயமோகன்’ அவர்களை பற்றி எழுத போகிறேன். ஒரு சில வார்த்தைகள் எனக்கு பிடிக்காதை சொல்லிவிட்டால் ஜெ (ஜெயமோகன்) தரப்பில் இருக்கும் பதிவர்கள் நான் 'சாரு நிவேதா' கட்சியை சேர்ந்தவன் என்று சொல்லுவார்கள். 'சாரு நிவேதா'வை பற்றி எதிராக எழுதினால் ஜெயமோகன் தரப்பு சேர்ந்தவன் என்று சொல்லுவார்கள். ( ஒரு சில சமயத்தில் பதிவர் வட்டம் கூட அரசியல் கட்சி போல் தான் தெரிகிறது). நான் எந்த தரப்பில் சேர்ந்தவன் இல்லை என்பதை கூறுவதற்கு தான் இவ்வளவு பில்டப்பு...!!!<br /><br />ஒரே நூலில் இந்திய மொழியில் இருக்கும் சிறந்த 22 நாவல்கள் படிக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக இந்த புத்தகத்தை வாங்கி படிக்க வேண்டும். ஆங்கில மொழியில் இருக்கும் இலக்கியத்தை பெருமை பேசும் தமிழ் எழுத்தாளர் மத்தியில் புகழ் பெற்ற பிற மொழி இந்திய நாவலை பற்றி ஆய்வுகளை எழுதியிருப்பதை பாராட்டியாக வேண்டும். அவர் நம்மிடம் பகிர்ந்துள்ள நாவல்களில் ஒரு சில நாவல்கள் பேரிலக்கியங்களுக்கு நிகரானவை என்று குறிப்பிட்டு சொல்லியிருக்கிறார். இதை அவர் சொல்லும் போது அந்த நூல்களை வாங்கி படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.<br /><br />ஜெயமோகன் எழுது நடையை பற்றி சொல்லும் அளவிற்கு எனக்கு அனுபவம் இல்லை. அவர் அளவிற்கு திறமையும் இல்லை. ஆனால், வாசகனாக ஒரு சில இடங்களை மேற்கொள் காட்ட விரும்புகிறேன்.<br /><br />இந்த நூலின் இடம் பெற்றுள்ள பெரும்பாலான நாவல்கள் சோகத்தை மையமாக கொண்டுள்ளாது. நல்ல நாவல்கள் என்றால் நம் மனதை நெருடுவதும் அல்லது வாட்டுவது போல் இருந்தால் தான் ஏற்றுக் கொள்கிறார்கள். அது தான் ஏன் என்று புரியவில்லை.<br /><br />தாராசங்கர் பானர்ஜியின் 'ஆரோக்கிய நிதேதனம்' நாவலை பற்றி சொல்லும் போது சுந்திர ராமசாமி அவர்கள் "நீங்கள் எனக்கு இந்நாவலை சிபாரிசு செய்திருக்கக் கூடாது. என்னால் தாங்க முடியாத படைப்பு இது" என்றார். சுந்தர ராமசாமி அவர்கள் தன் இறுதி நாள் வரை ஐரோப்பிய இலக்கிய மீது மிக விரிவாக கவனம் கொண்டிருந்ததையும், அசோகமித்திரன் போன்றவர்கள் இந்த நாவலை சொல்லாததற்கு வருத்தம் படுவது புரிகிறது. ஜெயமோகன் அவர்களின் இந்த ஆதங்கம் நியாயமானது தான். பல வாசகர்கள் படிக்கும் நூலில் அசோகமித்திரன், சுந்திர ராமசாமி பற்றி குறை வெளிப்படையாக சொல்லாமல் இருந்திருக்கலாம்.<br /><br />மைத்ரேயி தேவியின் 'கொல்லப்படுவதில்லை' (வங்கம்) என்ற நாவலை சொல்லும் போது அதை வாங்கி படிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது. நிஜ காதலர்கள் மிர்சா, மைத்ரேயி தேவி அவர்கள் பிரிந்து பிறகு மிர்சா 'மைத்ரேயி' என்ற நாவலில் மைத்ரேயியை பற்றி தவறாக எழுதியிருந்தார். அவரின் நாவலுக்கு பதில் சொல்லும் விதமாக மைத்ரேயி அவர்கள் 'கொல்லப்படுவதல்லை' என்ற நாவலை எழுதியினார். கிட்டதட்ட இந்த நாவல் சுயசரிதை அந்தஸ்த்தை பெருகிறது. இரண்டு எழுத்தாளர்கள் நடுவில் இருக்கும் மனச்சிதைவை ஜெயமோகன் அவர்கள் சொல்லும் போது இதுவே நாவல் போல் இருந்தது. தத்துவ எழுத்தாளர் தாஸ்குப்தாவின் மகள் தான் மைத்ரேயி என்பது இன்னொரு தகவல்.<br /><br />எஸ். ராமகிருஷ்ணன் புத்தகங்களை படிக்கும் போது 'தஸ்தயேவ்ஸ்கி' பற்றி குறிப்பிடுவார். அதே போல் 'நீலகண்டப் பறவையைத் தேடி' நாவலை பற்றி சொல்லும் போது ஜெயமோகன் அவர்கள் 'தஸ்த்யேவ்ஸ்கி'யை மேற்கொள் காட்டுகிறார். ('தஸ்த்யேவ்ஸ்கி' எழுதிய நூல்களை படிக்க வேண்டும் என்ற ஆவல் அதிகமாகிறது.)<br /><br />ஸ்ரீ லால சுக்லவின் 'தர்பாரி ராகம்' (இந்தி) நாவல் பிரஹசனம் ( கேலி கூத்து - வகை சேர்ந்த நாவல்).ஜெயமோகன் எழுதிய 22 நாவல் ஆயுவு கட்டுரையில் இதில் மட்டும் தான் சோகமே இல்லை. இந்த நாவலை பற்றி ஜெ சொல்லும் போது நான் ரசித்த வரிகள்…<br />- "கடவுளும் கவர்மெண்டும் ஒன்று. அதைத் தூற்றாதே. பழி சேரும் உனக்கு' என்று தொடங்கும் கி.கஸ்தூரிரங்கனின் புகழ்பெற்ற கவிதை 'கவர்மெண்டைப் பழிக்காதே. மேலும் கவர்மெண்ட் தான் வந்து சேரும்" என்று முடியும்.<br />- "கோர்ட்டுக்குப் போவது நல்லது. அங்கே போனால் ஒரு திருடன் இன்னொரு திருடனை நடத்துவது போலவே அதிகாரிகளும் பிறரும் நம்மிடம் நடந்துக் கொள்வார்கள்."<br />- "அறிவுக்கு மதிப்பு உள்ளது போலவே முட்டாள் தனத்திற்கும் ஒரு மதிப்பு உண்டு'<br /><br />சிவராம காரத்தின் 'மண்ணும் மனிதரும்' என்ற நாவலை சொல்லும் போது அந்த கிராமத்தில் வறுமையால் பிராமணர்களும், பெண்களும் கூட மண்ணில் இறங்கி கடுமையாக உழைத்தேயாக வேண்டும் என்பதை கூறிப்பிட்டுயிருக்கிறார்.<br />லௌகீகத்தில் ஈடுபட்ட எவருமே மனமே நிறைந்து சாகவில்லை.<br /><br />தகழி சிவசங்கரப்பிள்ளையின் 'ஏணிப்படிகள்' நாவலில் 'கேசவபிள்ளை கதர் உடுத்து தேச விடுதலைக் கொண்டாட்டங்கள் கொண்டாடுகிறார். அதிகார அமைப்பு என்பது ஒர் இயந்திரம். அது பாரபட்ச மற்றது. நேத்து அவர்களுக்காக உழைத்தோம், இனி உங்களுக்காக. இதை பாலமாக வைக்காவிட்டால் நாடு சிதறிப்போகும் என்கிறார் காங்கிரஸ்காரர்களிடம். அதை காங்கிரஸ் ஆமோதிக்கிறது. எண்பது இறுதியில், சிவகுமார் நடித்த 'இனி ஒரு சுதந்திரம்' என்ற ஒரு படம் வெளிவந்தது வந்தது. அதில், சத்யராஜ் கூட கௌரவ தோற்றத்தில் வருவார். அந்த படத்தில் முதல் காட்சியில் ரிட்ஷா ஓட்டும் ராஜா, குறுக்கு வழியில் முன்னேறி இறுதியில் மாவட்ட ஆட்சியாளராக வருவார். 'கேசவபிள்ளை' பற்றி சொல்லும் போது ‘ராஜா’ பாத்திரம் தான் ஞாபகம் எனக்கு வந்தது.<br /><br />வி.எஸ். காண்டேகரின் 'யயாதி' சொல்லும் போது மகாபாரத்தை மையமாக வைத்து 300 நாவல்கள் மேல் வந்துவிட்டதை சொல்லுகிறார். ( மஹாபாரத்தை மையமாக கொண்டு எழுதியவரை பிரஹசனம் செய்கிறாரோ...!)<br /><br />குர்துல் ஜன் ஹைதரின் 'அக்னி நதி' நாவலில் ரொம்ப விரும்பி திரும்ப திரும்ப படித்த வரிகள்…<br /><strong>மனிதர் மறக்க விரும்பும் அனைத்தையும்<br />நினைக்க வைக்கும் தேவதை அவள்.</strong><br /><br />பிற மொழி நூல்களை படிக்க விரும்பமுள்ளவர்கள், இந்திய நாவலை பற்றி தெரிந்துக் கொள்ள நினைப்பவர்கள், ஆய்வு செய்ய நினைப்பவர்கள் கண்டிப்பாக இந்த நூல் படிக்க வேண்டும். பிற மொழி நாவல்களை நமக்கு அறிமுகம் செய்து வைத்த ஜெயமோகன் அவர்களுக்கு நன்றி சொல்லியாக வேண்டும்.<br /><br />முகவரி<br /><br />உயிர்மை பதிப்பகம்<br />11/29, சுப்பிரமணியம் தெரு. <br />அபிராமபுரம், சென்னை – 18குகன்http://www.blogger.com/profile/04496532260803041131noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5381815149684177902.post-32040886044490355312008-12-31T06:42:00.000-08:002008-12-31T06:46:12.058-08:00இந்த வருடம் நான் உருப்படியாய் செய்ததுஎந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம் அதிகம் புத்தகம் படித்தேன். இந்த வருடத்தில் நான் படித்த புத்தகங்கள்.<br /><br />சுஜாதா -<br />- ஆ...<br />- விஞ்ஞான சிறுகதைகள்<br />- விபரீத கோட்பாடு<br />- பாரதி இருந்த வீடு<br />- 24 ரூபாய் தீவு<br /><strong>- நேனோ டெக்னாலஜி</strong><br /><br />பாக்கியம் ராமசாமியின்<br />- 'நகைச்சுவை சிறுகதைகள்'<br />- கமான் அப்புசாமி கமான் !<br /><br />எஸ்.ராமகிருஷ்ணனின்<br />- அரவான்<br /><strong>-துணையெழுத்து</strong><br />- நெடுங்குருதி<br /><br />முகில் <br /><strong>- லொள்ளு தர்பார்<br />- லொள்ளு காப்பியம்<br />- யூதர்கள்<br />- அக்பர் <br />- ஔரங்கசீப்</strong><br /><br />மருதன்<br />- லெனின் : முதல் காம்ரேட்<br />- மோதிப் பார் ! : ஹியூகோ சாவேஸ்<br /><strong>- விடுதலை புலிகள்<br />- திப்பு சுல்தான்<br />- பவுத்த மதம்</strong><br /><br />'சோலை' தமிழினியன் <br /><strong>- கதைசோலை<br />- காதல் சொல்ல வந்தேன்<br />- அன்புள்ள அப்பா ( முதல் பாகம்)</strong><br /><br />'கலைமாமனி' விக்கிரமன் <br />- சிறுகதை களஞ்சியம் (5வது தொகுதி)<br />- சோமதேவரின் உயில்<br /><br />சுப்பிரமனியன் சந்திரன் <br /><strong>- அசரீரி </strong><br /><br />பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தின் ‘அறிவியல் அறிஞர்’<br /><strong>- ஆல்ப்ரெட் நோபல்<br />- சர் வாட்ஸன் வாட்<br />- மைக்கேல் ஃபாரடே</strong><br /><br />ஞாநி - ‘நெருப்பு மலர்கள்’ <br />ஜெயமோகன் - கண்ணீரை பின் தொடர்தல்<br />சாரு நிவேதா - ஸீரோ டிகிரி<br />சா. கந்தசாமி - 'விசாரணைக் கமிஷன்' <br />நாகூர் ரூமி - HIV : கொல்லப் பிறந்த கொடுங்கோலன் <br /><strong>அருமையார் - திராவிடம் கண்ட தேய்பிறை</strong><br />பி.எஸ்.ஆர்.ராவ் - கோர்ட் மார்ஷியல் <br />'முனைவர்' கு. ஞானசம்ந்தன் - பரபரப்பு... சிரிசிரிப்பு... <br />பா.ராகவன் - என் பெயர் எஸ்கோபர்<br /><strong>'மயிலாடுதுறை' இளையபாரதி - அரங்க மின்னல்கள் </strong><br />என்.சொக்கன் - அஸிம் கம்ப்யூட்டர்ஜி <br />ஜி.எஸ்.எஸ் - என் நாடு, என் மக்கள், உன் ரத்தம் !<br /><strong>அ.கருணாந்தன் - வரலாறு என்றால் என்ன ? <br />சிபி கே. சாலமன். - 6 (சிக்ஸ்) சிக்மா <br />வெ.சாமிநாத சர்மா - முசோலினி <br />'லிவிங் ஸ்மைல்' வித்யா - நான் வித்யா <br />அக்னிஹோத்ரம் ராமானிஜ தாத்தாச்சாரியர் - சடங்குகளின் கதை </strong><br />பாலு சத்யா - மேரி க்யூரி<br /><strong>க.குணசேகரன் - இருளர்கள்:ஒர் அறிமுகம்<br />எம்.ஜி.ஆர். முத்து - வள்ளல் எம்.ஜி.ஆர் வரலாறு</strong><br />நல்லமூர் கோவி.பழனி - அறிவியல் கணித அறிஞர்கள்<br />ஷேக்ஸ்பியர் – ஒதெல்லோ (தமிழ்)<br />சிவன் - ஹோமரின் இலியட் (தமிழ்)<br /><strong>சிங்காரவேலு – டால்ஸ்டாய்</strong><br /><br />சிறு புத்தகங்கள்<br /><br /><strong><br />தாய் வீட்டில் கலைஞர் - தி.க வெளியீடு<br />நான் நாத்திகன் ஏன் - பகத்சிங்<br />ஜாதி ஒழிய வேண்டும் ஏன் ? - 'தந்தை' பெரியார்<br />இது தான் மகாமகம் - 'தந்தை' பெரியார்<br /><br /><br />Why I do not belive in God – K.Veermani<br />Harry Potter and the Deathly Hallows (7th part) - J.K.Rowling<br />True Story of Jesus</strong><br /><br />(Bold இருப்பது வாங்கிய புத்தங்கள்<br />மற்றவை இரவல் மற்றும் நூலகத்தில் வாங்கி படித்த புத்தகங்கள்)<br /><br />‘மனசாட்சி சொன்னது' (சிறுகதை) - நம் உரத்தசிந்தனை போட்டியில் வெற்றி பெற்றது.<br /><br />புத்தக வாசகர்களுக்காக உருப்படியான ‘Tamibookreview.blogspot.com’ - ஒரு வலைப்பதிவை தொடங்கினேன். <br /><br />வலைப்பதிவை நல்ல முறையில் பயன் படுத்தி 'குண்டக்க மண்டக்க' என்ற நகைச்சுவை தொடரை எழுதினேன்.என் நகைச்சுவைக்கு வரவேற்பு உள்ளதை பின்னூட்டத்தில் மூலம் உணர முடிந்தது.<br /><br />‘நடைபாதை’ (சிறுகதை) நூலை வனிதா பதிப்பகம் மூலம் வெளியிட்டேன்.<br /><br />கலீலியோ கலிலி, ரைட் சகோதரர்கள், இலங்கை - மூன்று சிறு நூல்களை எழுதி முடித்தேன்.<br /><br />'எழுதி முடித்துவிட்டேன்' என்று நினைத்த நூல்களை, தகவல் குறைவாக இருப்பதால் மீண்டும் எழுதிக் கொண்டு இருக்கிறேன்.<br /><br />எட்டையப்புரத்தில் நடந்த இலக்கிய சந்திப்பும், நடேசன் பார்க்கில் பதிவர் சந்திப்பும், கிழக்கு பதிப்பகத்தின் மொட்டை மாடி கூட்டம் போன்ற நிகழ்ச்சிகள் என்னால் மறக்க முடியாதவை.<br /><br />மறக்க நினைக்கும் நிகழ்ச்சிகளை பதிவில் போட்டு ஞாபகத்தில் வைத்துக் கொள்ள விரும்பவில்லை.<br /><br />அடுத்த வருடம் ஆங்கில புத்தகங்களும் அதிகமாக படிக்க வேண்டும் என்று முடிவு எடுத்திருக்கிறேன். நல்ல படைப்புகளை படைக்க வேண்டும், குறிப்பாக நகைச்சுவை கட்டுரையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பத்திரிக்கையில் எழுதும் வாய்ப்பை தேட வேண்டும். இது தான் என் புது வருடத்தின் முயற்சி...<br /><br />அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !!குகன்http://www.blogger.com/profile/04496532260803041131noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5381815149684177902.post-70748587063991163272008-12-28T23:54:00.000-08:002008-12-28T23:56:07.264-08:00ஷேக்ஸ்பியரின் 'ஒதெல்லோ'தமிழில் : வை. சண்முகசுந்தரம் M.A.,B.L<br /><br />ஆங்கில நாடக இலக்கியங்களில் மறக்க முடியாத முக்கிய நபர் ஷேக்ஸ்பியர். இன்று வரை , ஆங்கில நாடக இலக்கியங்கள் எடுத்துக் கொண்டால் ‘ஷேக்ஸ்பியர்’ போன்ற எழுத்தாளரை நாம் தேடிக் கொண்டு இருக்கிறோம். அவர் எழுதிய நாடக கதாப்பாத்திரங்கள் காலம் கடந்து வாழ்ந்துக் கொண்டு இருக்கிறார்கள். ரோமியோ, ஜூலியட், ஹெம்லெட், ஒதெல்லோ போன்ற கதாப்பாத்திரங்கள் இன்று வரை வாழ்கிறார்கள். இன்னும் எத்தனை நூற்றாண்டானாலும் ‘ஷேக்ஸ்பியர்’ தன் கதாப்பாத்திரங்கள் உருவத்தில் வாழ்வார்.<br /><br />ஷேக்ஸ்பியரின் 'ஒதெல்லோ' வும் காதல் கதை தான். படிக்காத பாமரன் கூட ரோமியோ, ஜூலியட் கதாப்பாத்திரங்கள் பற்றி சொல்லுவான். இந்த இரண்டு கதாபாத்திரங்களும் மிக பிரபலம். அந்த அளவிற்கு 'ஒதெல்லோ' கதை பெரும்பாலனவர்களிடம் சென்று அடையவில்லை. இரண்டு கதைகளிலும் காதலர்கள் இறந்து விடுகிறார்கள். மற்றப்படி இந்த இரண்டு கதைகளிலும் எந்த வித ஒற்றுமையும் இல்லை. <br /><br />நீக்ரோ கதாப்பாத்திரத்தை கதாநாயகனாக ஷேக்ஸ்பியர் அவர்கள் எழுதியிருக்கிறார். கருப்பு, வெள்ளை நிற பிரச்சனை இக்காலாத்தில் இருக்கும் போது அப்போது நீக்ரோவை கதாநாயகனாக வைத்து எழுதியிருக்கிறார். ( அவர்க்கு எத்தனை மிரட்டல் வந்ததோ யாருக்கு தெரியும்). இந்த துணிச்சல் தான் பல நூற்றாண்டுகள் கடந்தும் அவர் புகழ் உள்ளது.<br /><br />'ஒதெல்லோ' நாடகம் வெனிஸ் நகரம், சைப்ரஸ் தீவை சுற்றி கதை நடக்கிறது. துருக்கியர்களுடன் போரில் வெற்றி பெற்று, யுத்த கலைப்பாற தன் காதல் மனைவி டெஸ்டிமோனாவுடன் சைப்ரஸ் தீவில் ஒதெல்லோ தங்கிறார். துணை படைத்தலைவன் கேஸ்ஸியோ மற்றும் அவர் அடுத்த பதவியில் உள்ள இயாகோ ஒதெல்லோவுக்கு உதவியாக தங்கிறார்கள். கேஸ்ஸியோ பதவியை அடைய நினைக்கும் இயாகோ டெஸ்டிமோவுக்கும், கேஸ்ஸியோவுக்கும் கள்ள தொடர்ப்பு இருப்பதாக ஒதெல்லோவிடம் கூறுகிறான். முதலில் நம்ப மறுக்கும் ஒதெல்லோ சிறுக சிறுக இயாகோ வார்த்தை வலையில் விழுகிறான். ஒதெல்லோ பரிசாக கொடுத்த கை குட்டையை டெஸ்டிமோனா தவறுதலாக தொலைத்து விட அதை கேஸ்ஸியோ அறையில் போடுகிறான். ஒதெல்லோவுக்கு மேலும் சந்தேகம் ஏற்படுகிறது.<br /><br />சந்தேகத்தின் உச்சத்தை தொட்ட ஒத்தெல்லோ தனது காதல் மனைவி டெஸ்டிமோனாவை கொலை செய்து விடுகிறான். கேஸ்ஸியோ மூலம் இயாகோவின் சூழ்ச்சி தெரிய வர தன் மனைவி கொன்ற பாவத்திற்கு தன் உயிரை மாய்த்துக் கொள்கிறான்.<br /><br />ஷேக்ஸ்பியர் பெரும்பாலான நாடகங்கள் சோகத்தில் முடிவது போல் இந்த நாடகமும் சோகத்தில் தான் முடிகிறது. காலத்தால் அழியாத 'ஒதெல்லோ' நாடகத்தை வை. சண்முகசுந்தரம் அவர்கள் நன்றாக மொழிபெயர்த்துள்ளார். 'தையல் வெளியீடு' இந்த நூலை வெளியிட்டுள்ளது. பல உலக இலக்கிய நூல்களை 'தையல் வெளியீடு' தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருவது குறிப்பிடதக்கது.<br /><br />முகவரி :<br /><br />தையல் வெளியீடு<br />E- 4, முதல் தளம், <br />252, செல்லப்பா தெரு,<br />குயப்பேட்டை, சென்னை - 12.<br />தலைப்பேசி : 98414 49529 / 93826 77312குகன்http://www.blogger.com/profile/04496532260803041131noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5381815149684177902.post-65556702390829034002008-12-27T09:04:00.000-08:002008-12-27T17:23:25.723-08:00நடேசன் பார்க்கில் பதிவர்கள் சந்திப்புஇன்றைய 'வலைப்பதிவர்கள் சந்திப்பு' நன்றாக நடந்தது.<br /><br />இது என்னுடைய முதல் பதிவர் சந்திப்பு என்பதால் இன்று தான் எல்லோரையும் பார்த்தேன். கேபிள் சங்கர், அக்னி பார்வை, லக்கி லுக், டோண்டு, முரளி, ஜியோவ்ராம் சுந்தர் , 'பாலம்' பாலா, மதுரை கணேஷ், அதிஷா என்று ஒரு பெரும் பட்டியலே உண்டு. (எல்லோருடைய பெயரும் என்னால் நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லை).<br /><br />முரளி அவர்கள் தன் முதலில் பேசி சந்திப்பை தொடங்கி வைத்தார். முரளி பேசும் போது அதிஷா தன் கையை அசைத்து அவர் பேச கூடாது என்பது போல் சைகை காட்டினார். பிறகு தான் தெரிந்தது அவர் கொசுவை விரட்டுகிறார் என்று...! பலர் இன்று பேசியதை விட கொசுவை விரட்டியது தான் அதிகம். (நான் பதினைந்து கொசுவை கொன்றேன்)<br /><br />'திருமணம் ஆனவர்கள் படும் கஷ்டங்கள்' என்று முதல் அரை மணி நேரத்துக்கு மொக்கை போட்டோம். இதில் திருமணம் ஆகாதவர்கள் வாய்யை திரக்கவில்லை. 'பாலம்' பாலா, முரளி, கேபிள் சங்கர், மதுரை கணேஷ் போன்றவர்கள் தங்கள் கருத்துக்களை சொன்னார்கள்.( ஒரு சில கருத்தில் நண்பர்கள் அனுபவம் என்று தங்கள் சொந்த அனுபவத்தை பேசியது போல் இருந்தது). <br /><br />அடுத்த தலைப்பு...'அரசியல்'. தி.மு.க, அ..தி.மு.க, பா.ஜ.க, காங்கிரஸ் என்று எல்லா கட்சிகளின் இன்றைய நிலவரத்தை பற்றி பேசினோம். கலைஞர், ஈழ தமிழம் பற்றி பேசும் போது ஒருவர் எங்களையே பார்த்துக் கொண்டு இருந்தார். ( யாராவது புலிகளுக்கு ஆதரவாக பேசி விடுவார்களோ !, உள்ளே சென்று விடுவோமா ! என்ற பயம் உள்ளூர இருந்தது.)<br /><br />சில வருடங்களுக்கு முன்பு 'அந்த' மாதிரி புத்தங்கள் தேவி தியேட்டர் வெளியே விற்பதை பற்றி லக்கி லுக் கூறினார்.இப்போது 'அந்த' புத்தங்கள் அதிகம் விற்க்கப்படவில்லை என்பதை மன வருத்ததுடன் சொன்னார். தன்னிடம் பித்தியேக கலேக்ஷனாக 20,25 புத்தகங்கள் இருப்பதாக பேசினார். ( நம் வலைப்பதிவர் நலனுக்காக தன் பதிவில் பொடுவார் என்று எதிர்பார்க்கலாம்.) அதே போல், அதிஷா அவர்கள் தன் செல்போனில் இருக்கும் தத்துவ பாடலையும் வலைப்பதிவில் போடுவதாக சொன்னார். (மிக விரைவில் தமிழ்நாடே உச்சரிக்க போகும் பாடல் அதுவாக தான் இருக்கும்.)<br /><br />ஒரு தியாகி ( முரளி கண்ணன் என்று நினைக்கிறேன்) புன்னியத்தில் எல்லோரும் தேநீர் அருந்தினோம். லக்கி லுக், ஜியோவ்ராம் சுந்தர் வழக்கம் போல் 'சாரு நிவேதா' பற்றி பேச தொடங்கினர். கேபிள் சங்கர், மதுரை கணேஷ் தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்கள். எல்லோரிடமும் கை குழுக்கியப்படி விடைப்பெற்றுக் கொண்டேன்.<br /><br />முகம் தெரியாமல் பின்னூட்டம் எழுதுவர்களையும், பதிவர்களையும் நேரில் பார்க்கும் போது வித்தியாசமான அனுபவமாக தான் இருந்தது. இது போன்ற சந்திப்பு குறைந்தது மூன்று மாதம் ஒரு முறையாவது நடக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.<br /><br />பெயர் விடுப்பட்ட நண்பர்கள் என்னை மன்னிக்கவும்...!குகன்http://www.blogger.com/profile/04496532260803041131noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-5381815149684177902.post-67428613660998976232008-12-22T08:33:00.000-08:002008-12-22T08:39:03.559-08:00'கவிஞர்களின் பார்வையில் அண்ணா' நூல் வெளியீடுசோலை பதிப்பகம்<br /><br />சோலை தமிழினியன் தொகுத்த<br /><br />'கவிஞர்களின் பார்வையில் அண்ணா'<br />(100 கவிஞர்கள் பங்கேற்கும் சிறப்பு கவிதை தொகுப்பு)<br /><br />வெளியீட்டு விழா அழைப்பிதழ் !!!!<br /><br />நாள் : 28 - 12 - ௧2௨008<br />மாலை சரியாக 5.30 மணிக்கு<br />இடம் : இக்சா மையம் (ICSA)<br />107, பாந்தியன் சாலை,<br />எழும்பூர், சென்னை - 8<br /><br />தலைமை :<br /><br />தமிழ்த்திரு கயல் தினகரன் அவர்கள்<br />( சேர்மன், சென்னை மாவட்ட நூலகம்)<br /><br />கவிவேந்தர் கா. வேழவேந்தன்<br />(முன்னாள் அமைச்சர்)<br /><br />திரு. மாம்பலம் சந்திரசேகர்<br />(அதிபர், சந்திரசேகர் பில்டர்ஸ்)<br /><br />எழுத்தாளர் 'அமுதா' பாலகிருஷ்ணன்<br />சிறப்பு கவியரங்கில் பங்கேற்போருக்கு பரிசு வழங்கி பாராட்டுரை :<br /><br />கவிஞர். சுடர். முருகையா<br />(பொதுச்செயலாளர், அ.இ.த.எ.ச)<br /><br />சிறப்புக் கவியரங்கம் : 'வருக 2009'<br />சிறந்த மூன்று கவிதைகளுக்கு தலா ரூ.100 பரிசு.குகன்http://www.blogger.com/profile/04496532260803041131noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5381815149684177902.post-9258498519310921902008-12-21T08:46:00.000-08:002008-12-21T08:48:06.300-08:00பாக்கியம் ராமசாமியின் 'நகைச்சுவை சிறுகதைகள்'விலை.65, பக்கங்கள். 208<br /><br />ஒவ்வொரு வாசகனுக்கும் தான் படிக்கும் நூலில் தேவையான செய்திகள், குறிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்த்து தான் படிக்கிறான். பிடித்த எழுத்தாளர் புத்தகம் படிக்கும் போது தனக்கு பிடித்த எழுத்தாளரின் ஒவ்வொரு எழுத்துக்களையும் ரசிக்கிறான். ஆனால், இந்த இரண்டு கருத்துக்களுக்கும் நகைச்சுவை புத்தகங்களுக்கு பொருந்தாது. நகைச்சுவை நூல்களில் இருந்து செய்தியோ அல்லது குறிப்புகளோ யாரும் எதிர்பார்க்க முடியாது. பிடித்த எழுத்தாளரே நகைச்சுவை கதையை எழுதியிருந்தாலும் சிரிப்பு வரவில்லை என்பதை வாசகன் உண்மையை ஒப்புக் கொள்வான். மற்ற தலைப்பில் எழுதிய புத்தகங்களை பற்றி கடுமையாக பேசினால், அவரவர் ரசனை விவாதமாக மாறிவிடும். எழுதியது எதிரியாக இருந்தாலும் நம்மை சிரிக்க வைத்தவர்களை பாராட்டாமல் இருக்க முடியாது. சிரிக்கும் படி எழுதாமல் 'நகைச்சுவை கதை' என்று சொன்னால், நண்பராக இருந்தாலும் கருத்தை கூறாமல் இருக்க முடியாது. அப்படி ஒரு பெருமை நகைச்சுவை நூல்களுக்கு உண்டு<br /><br />பாக்கியம் ராமசாமி அவர்கள் நகைச்சுவை கதைகள் எழுதுவதில் பெயர் போனவர். ( நல்ல பெயர் எடுத்தவர் என்று சொல்ல வந்தேன்.... வேறு மாதிரி யோசிக்க வேண்டாம்.). தான் எழுதிய நகைச்சுவை கதைகளை தொகுப்பு நூலாக தொகுத்துள்ளார். ஒரு சில கதைகள் வித்தியாசமாக நடையில் எழுதியிருக்கிறார். உதாரணத்திற்கு, முதல் கதை பாதிக்கும் மேல் கடித போக்குவரத்து மூலம் கதையை சொல்லியிருக்கிறார். அதே போல் 'காண்ட்டீன் கிராஜூவேட்' (தமிழ் தலைப்புக்கு பஞ்சமோ எண்ணவோ) முழுக்க முழுக்க கடிதத்தின் மூலமாகவே முழுக்கதையும் சொல்லியிருக்கிறார். இந்த இரண்டு கதைகளும் நகைச்சுவை கதைகள் என்று மட்டும் சொல்லாமல், வித்தியாசமான நடையைக் கொண்ட கதை என்று சொல்லலாம்.<br /><br />'பரபரப்பு' மிகவும் ஸ்வாரஸ்யமான கதை. ப்ளாட்டில் நடக்கும் ஒரு நகைச்சுவை சம்பத்தை சொல்லும் போது தொலைக்காட்சி தொடரைப் பார்த்தது போல் இருந்தது. 'ஐந்து பேர் கெடுத்த அற்புதக் கதை' கண்டிப்பாக குறிப்பிட்டு சொல்ல வேண்டும். அதன் எழுத்து நடையே சிரிப்பை வரவழைக்கிறது. பேராசிரியர், நாட்டியக்காரி, சிறுவன், தையல்காரன், விஞ்ஞானி என்று ஐந்து பேர்கள் ஒரு கதையை எழுதிகிறார்கள். ஐவரும் தங்கள் வர்ணனை சொல்லும் போதும், அவர்வர் துறையை சார்ந்த வார்த்தைகளை பயண்ப்படித்தை போதும் நம்மால் ரசிக்க முடிகிறது.<br /><br />இந்த நூலில் பாக்கியம் ராமசாமியின் எழுதிய எல்லா கதைகளும் நகைச்சுவை கதை என்று பொய் சொல்ல விரும்பவில்லை. ஒரு சில கதைகள் தவறி போய் பாக்கியம் ராமசாமியின் நகைச்சுவை நூலில் சேர்க்கப்பட்டுள்ளது. 'வெங்காய வடைமேல் காதல்', 'அனுவின் அடிச்சுவட்டில்' போன்ற கதைகள் ஏன் இந்த நூலில் சேர்த்தாளர்கள் என்று புரியவில்லை. அதுவும் 'வெங்காய வடைமேல் காதல்' நகைச்சுவை கதை என்பதை விட கணவன், மனைவிக்கும் இருக்கும் அன்பை உணர்த்தும் கதையாக தான் தெரிகிறது.<br /><br />இந்த நூல் 2006 பதிப்பித்தாலும், பெரும்பாலான கதைகள் பல வருடங்கள் முன் எழுதியது என்பதை உணர முடிகிறது. உதாரணத்திற்கு ‘ஒரு கை பார்ப்போம்’ கதையில், கணேஷ் கதாப்பாத்திரம் "ஏழாயிரம் பெறுமானமுள்ள வீட்டை மூவாயிரத்துக்கு விற்றேனே" என்று சொல்லும் போதே தெரிகிறது. இந்த காலத்தில் ஏழாயிரத்துக்கு வாடைக்கு வீடு கிடைக்கும். அடையார், டி.நகர் போன்ற இடங்களில் இது கூட சாத்தியமில்லை. நகைச்சுவையான சம்பவங்கள் இருக்கும் அளவிற்கு சில இடங்கள் உரையாடல் நகைச்சுவையாக இல்லை என்று தான் தோன்றுகிறது.<br /><br />இந்த புத்தகம் படித்து முடிந்த பிறகு நீங்கள் வயறு வலிக்க சிரித்திருப்பீர்கள் என்று உறுதியாக சொல்ல முடியாது. (திரைப்படத்தில் வரும் பல நகைச்சுவை காட்சிகளே அப்படி தான் இருக்கிறது). ஆனால், நகைச்சுவை எழுத்தாளர்களில் மிக முக்கியமாக கருதப்படும் பாக்கியம் ராமசாமியின் ஆரம்ப கால நூல் என்ற வகையில் கண்டிப்பாக படிக்க வேண்டும்.<br /><br />முகவரி<br /><br />பூம்புகார் பதிப்பகம்<br />127 ( ப.எண்.63), பிரகாசம் சாலை, (பிராட்வே)<br />சென்னை - 600 108<br />தொலைபேசி - 2526 7543குகன்http://www.blogger.com/profile/04496532260803041131noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5381815149684177902.post-1192454556200171832008-12-18T03:34:00.000-08:002008-12-18T03:37:31.159-08:00என்ன செய்யலாம்? - தமிழ்வணிகத்தின் கட்டுரைப்போட்டிவிஷூவல் மீடியா குழுமத்தால் நிர்வகிக்கப்படும் வணிகத் தகவல்களின் பெட்டகம் "தமிழ் வணிகம்" இணையத் தளம். வர்த்தகம் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் தங்கத் தமிழில் தடையில்லாமல் பரப்புவது எங்களின் முதன்மை நோக்கம். மென்பொருட்கள் உருவாக்கம், இணையத் தள வடிவமைப்பு, பயன்தரும் நட்புத் தளங்களைத் உலகளாவிய தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்வது என "தமிழ் வணிகத்தின்" பணிகள் பரந்து விரிந்துள்ளன. இதோ இப்போது, மற்றொரு புதிய முயற்சியாக இப்போது கட்டுரைப் போட்டியை அறிவிக்கிறது "தமிழ் வணிகம்".<br /><br />இன்றைய உலகத்தை அச்சுறுத்தி வருகிறது பொருளாதார மந்த நிலை. அன்றாடம், உலகின் பல நாடுகளில் மக்கள் தங்கள் வாழ்வதாரத்தின் ஆணிவேரான வேலையை இழந்து வருகின்றனர். வாழும் வழி தெரியாமல் சிலர் தங்கள் வாழ்க்கையையே மாய்த்துக் கொள்கின்றனர். இத்தகைய சூழலில், எந்தத் தொழில் செய்தால் ஜெயம் பெறலாம்? அதற்குரிய எளிய வழிகள் என்னென்ன? யாரை? எங்கு? எப்படி? அணுக வேண்டும். குறைந்த முதலீட்டில் நிறைந்த இலாபம் சம்பாதிப்பது எப்படி? இப்படி இயல்பாகப் நம்முள் எழும் கேள்விகள் ஏராளம். அவற்றுக்கான விடைகள் உங்கள் மனச் சுரங்கத்தில் மண்டிக்கிடக்கலாம். தொடர்ந்து யோசித்துக் கொண்டே இருப்பதை விட நாலு பேருக்கு வழி காட்டுவது கூடுதல் புண்ணியம். எனவே தயங்க வேண்டாம். சட்டென எழுதத் தொடங்குங்கள் போட்டிக் கட்டுரையை.<br /><br />பெருகிவரும் தொழில் போட்டியில் வாடிக்கையாளர்களைத் தன் பக்கம் ஈர்க்க, அல்லது தனது வலையில் விழவைக்க நினைத்துப் பெரிய பெரிய நிறுவனங்கள் சலுகைகளை அள்ளி வழங்கின. ஆனால், அந்தச் சலுகைகள் சில நிறுவனங்களின் அஸ்திவாரத்தையே ஆட்டங்காண வைத்து விட்டன. தமது தொழில் எல்லையை விரிவுபடுத்த எண்ணி நிறுவனத்தையே தள்ளாட வைக்கும் நிலைக்கு ஆளாகி விட்டனர் பலர். எந்தத் துறையிலும் கரை கண்டவர்கள் யாரும் இல்லை. சில நமக்குத் தெரிந்திருக்கலாம். பல நாம் அறியாமல் இருக்கலாம். அதே சமயம் அவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளுக்குள் ஊறிக் கொண்டே இருக்கும்.<br /><br />எனவே தொழில் முறைகள் பற்றி உங்களுக்கு தெரிந்ததைத் தொகுத்துக் கட்டுரையாக்கி எங்களுக்கு அனுப்புங்கள். உங்கள் படைப்புக்கள் ஆசிரியர் குழுவின் அனுமதியோடு "தமிழ் வணிகம்" இணையத் தளத்தின் முகப்புப் பக்கத்தில் சிறப்புச் செய்தியாக வெளியிடப்படும்.<br /><br />இப்போட்டிக்கான கட்டுரைகள் சுய தொழிலில் ஈடுபட நினைப்பவர்களுக்கு ஊக்க மருந்தாக அமைய வேண்டும் என்பது எங்கள் விருப்பம். உங்களின் படைப்புக்கள் சிலருடைய வாழ்க்கையைப் புரட்டிப் போடும் நெம்புகோலாக அமையலாம்.<br /><br />இன்னும் என்ன யோசனை? எடுங்கள் பேனாவை. வெளிப்படுத்துங்கள் உங்கள் படைப்பாற்றலை. <br /><br />விதிமுறைகள் மற்றும் ஆசிரியர் குழு, அனுப்ப வேண்டி கடைசி தேதி மற்றும் முகவரி நாளை தமிழ் வணிகம் செய்தி தளத்தில் தெரியப்படுத்தப்படும்.<br /><br />புதுமைகளை வரவேற்கும் வாஞ்சையான நெஞ்சத்துக்குச் சொந்தக்காரர்கள் நீங்கள். தமிழ் வணிகத்தின் இந்தப் புதிய முயற்சியை இன்னும் செழுமையாக்கும் யோசனைகளையும் மறக்காமல் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.<br /><br />இப்படிக்கு,<br /><br />தமிழ் வணிகம்<br />http://www.tamilvanigam.in/குகன்http://www.blogger.com/profile/04496532260803041131noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5381815149684177902.post-60115299382207077232008-12-17T03:50:00.000-08:002009-01-25T04:36:34.258-08:00ஞாநியின் ‘நெருப்பு மலர்கள்’விலை.55, பக்கங்கள். 144<br />விகடன் பிரசுரம், சென்னை - 2<br /><br />ஞாநி அவர்களின் பேட்டியை கேட்ட அளவிற்கு அவருடைய எழுத்துக்கள் எனக்கு அதிகம் பரிச்சயமில்லை. அவருடைய சில தொலைக்காட்சி தொடர்களை பார்த்து இருக்கிறேன். நான் வாசித்த ஞாநியின் முதல் நூல் என்றால் அது ‘நெருப்பு மலர்கள்’ தான். அடிக்கடி கலைஞரை தாக்கி பேசுவதாலு ஞாநி மீது அந்த அளவிற்கு ஈடுபாடு வந்ததில்லை. ( எத்தனை பேர் தான் ஆளும் கட்சியை திட்டுவார்கள்). ஆனால், ஒரு பெண்ணியவாதியாக எனக்கு ஞாநியை பிடிக்கும். 'நெருப்பு மலர்கள்' புத்தகத்தை படித்து முடித்த பிறகு ஞாநி எப்பேர் பட்ட பெண்ணியம் சிந்தனை கொண்டவர் என்பதை உணர முடிந்தது.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjn4ED7wOn74_hyphenhyphen7tBRuUKgXzpC8gYPViqa6tjEABEtcaUdPwVG2YY5aJUXJ3WoUxkk4wU20pO1x6Xbq_hGvxg15N5dBacHMhJIotn_WIz_slO9G6R_jLV7b2gJFKuaav7zdGQGK2xiQC1k/s1600-h/neruppu_book.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 210px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjn4ED7wOn74_hyphenhyphen7tBRuUKgXzpC8gYPViqa6tjEABEtcaUdPwVG2YY5aJUXJ3WoUxkk4wU20pO1x6Xbq_hGvxg15N5dBacHMhJIotn_WIz_slO9G6R_jLV7b2gJFKuaav7zdGQGK2xiQC1k/s320/neruppu_book.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5284380601717156626" /></a><br /><br />“ஆங்கிலத்தில் வரலாற்றை குறிக்கும் சொல்லான ' History ' என்பது His Story '. அவன் கதை என்பதியிலிருந்து உருவானது. வரலாற்றில் ‘Her Story’ களுக்கு இடமில்லை.” முன்னுரையில் முதல் வாக்கியத்திலே அசத்திவிட்டார்.<br /><br />நம் சரித்திர பக்கங்கள் பெண்களுக்கு இடம் அளிக்காமல் மறைந்து, மறந்து போன பெண்களை ‘நெருப்பு மலர்கள்’ நூலின் மூலம் அவர்களை பதிவு செய்தியிருக்கிறார். அவர் இதில் எழுதிய எழுதிய (சொல்லிய) பதினான்கும் கதைகள் அல்ல. உண்மையாக நடந்த நிகழ்வுகள்.<br /><br />விடுதலை புரட்சி இயக்கங்கள் போராளிகளுக்கு சமைத்துப் போடுவதே பெண்களின் வேலையாக காலத்தில், அதை மாற்றி கையில் தூப்பாக்கி ஏந்தி போராடிய ப்ரீதி, பீனா அவர்கள் குறிப்பிட வேண்டியவர்கள். அதுவும் ப்ரீதி நமது துணை கண்டத்தின் முதல் 'சயனைட்' பெண் என்ற பெயரிலாவது விடுதலை போராட்டங்களில் குறிப்பிட மறந்துவிட்டோம்.<br /><br />முவலூர் ராமாமிர்தம் அம்மையார் அவர்கள் தாசி குலத்தில் பிறந்து, தேவதாசி முறையை ஒழித்ததை படிக்கும் மெய் சிலிர்க்க வைக்கிறது. ஒரு இடத்தில் புகழ் பெற்ற காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, 'தேவதாசி முறையை ஒழித்தால் கலையும், சங்கீதமும் அழிந்துவிடும்' என்று வாதாடினார். 'தேவதாசியாக இருப்பதற்காக அந்த பெண்கள் பெருமைப்பட வேண்டும்' என்றார். ( அப்போதே காங்கிரஸ் இப்படி தான் யோசிக்கும் போல). அதற்கு முத்துலட்சுமி 'எங்கள் குலத்துப் பெண்கள் இத்தனை காலமாக தேவதாசிகளாக இருந்து அலுத்துப் போய்விட்டார்கள். கனம் உறுப்பினர் வேண்டுமானால் அவர் குலத்துப் பெண்களை இனி இந்தக் கௌரவமான பணியில் ஈடுபடுத்திக் கொள்ளட்டும். எனக்கு ஆட்சேபனை இல்லை' என்று ஒரு போடு போட்டார்.<br /><br />நம் இந்திய சிவில் சட்டத்தை மாற்றிய ருக்மாவின் திருமணம், வேதம் ஓதிய ராமாபாய், பாலுணர்ச்சியை பற்றி எழுதிய முத்துப்பழநி என்று பல வித்தியாசமான, சரித்திரத்தில் நாம் கேள்வி படாத பெண்களை 'நெருப்பு மலர்கள்' புத்தகத்தில் ஞாநி பதிவு செய்கிறார்.<br /><br />விஜசாந்தி, ரோஜா வடிவில் தெலுங்கு படத்தில் பார்த்த 'தெலுங்கானா போராட்டத்தை' தனது இறுதி அத்தியாயத்தில் எழுதியிருக்கிறார். தெலுங்கு படத்தை பார்க்கும் போது அவர்களது போராட்டம் எரிச்சலாக இருந்தது. ஆனால், படிக்கும் போது இன்னும் ஆந்திராவில் இப்படி நடக்கிறதா என்று நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. தெலுங்கானா போராட்டத்தை பற்றி தனி புத்தகமே எழுத வேண்டும் என்று நினைக்கிறேன்.<br /><br />பின்னைரையில் 'வாசலில் போடப்பட்டிருக்கும் பால் பையை எடுத்து போய் அம்மாவிடமும், செய்திதாளை அப்பாவிடமும் கொடுக்கக் குழந்தைக்கு யார் கற்றுக் கொடுத்தார்கள்.' என்று கவிஞர் வெண்ணிலாவின் கவிதை வரிகளை மேற்க்கொள் காட்டியிருப்பது நல்ல அழகு.<br /><br />'நெருப்பு மலர்' படித்த பிறகு நான் விரும்பி படிக்கும் எழுத்தாளர்களில் 'ஞாநி'யும் இருக்கிறார்.குகன்http://www.blogger.com/profile/04496532260803041131noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5381815149684177902.post-46272603284571149942008-12-13T16:42:00.000-08:002008-12-13T16:57:53.380-08:00எஸ்.ராமகிருஷ்ணனின் 'அரவான்'விலை.90. பக்கங்கள் -166<br /><br />‘அரவான்’ - தமிழக அரசு விருது பெற்ற நூல்.<br /><br />எஸ்.ராமகிருஷ்ணனின் 'துணையெழுத்து' படித்ததில் இருந்து நான் அவருடைய தீவிர வாசகனாகிவிட்டேன். அவருடைய எழுத்துக்களும், போதை மருந்தும் ஒரே மாதிரி தானோ !! அவருடைய ஒரு புத்தகம் படித்த பிறகு அவருடைய பல புத்தகங்களை தேடி படித்து வருகிறேன். ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று முறையாவது அவருடைய வலைப்பதிவுக்கு சென்று வருகிறேன். அவருடைய எழுத்துக்களை படிக்க படிக்க அவரையும் சேர்ந்து படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. சரி ! இந்த நூலுக்கு வருவோம்.<br /><br /> 'அரவான்' நூல் எஸ்.ராமகிருஷ்ணனின் நாடகத்துறையில் அவர் எழுதிய நாடக கதையை நூலாக தொகுத்துள்ளார். தொலைக்காட்சி ஊடகங்களில் தங்களை தொலைத்து கொண்டவர்கள் மத்தியில், தன்னுடைய அழகான ஒன்பது நாடகங்களை புத்தகமாக எழுதியிருக்கிறார். ஒவ்வொரு நாடகமும் குறும்படமாக எடுத்தாலும் தவறில்லை. ஒவ்வொரு நாடகம் வித்தியாசமான கதை அம்சம் கொண்டது.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxtYFgCxFWexGXhkIH3D9r3bx6FJravf3LZUwJMvOOS72yTbE9v9OlRhAcAyyRW7nnJPt9DrP2eF-83lKgzq9SLdkx64JBL03LfhZHGdDCOkF_1ywb5Mj6lo1-nsb6SoG8fTgSaqqON6fR/s1600-h/Book_7.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 216px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxtYFgCxFWexGXhkIH3D9r3bx6FJravf3LZUwJMvOOS72yTbE9v9OlRhAcAyyRW7nnJPt9DrP2eF-83lKgzq9SLdkx64JBL03LfhZHGdDCOkF_1ywb5Mj6lo1-nsb6SoG8fTgSaqqON6fR/s320/Book_7.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5279443568146354386" /></a><br /><br />புத்தக தலைப்புக் கொண்ட முதல் நாடகம் 'அரவான்'. ஒருவன் மட்டும் நடிக்கும் நாடகம். நம் அன்றாட வாழ்வில் பல மனிதர்கள் தனக்குள்ளே பேசிக்கொள்கிறான். அதை மையமாக வைத்து பாரதத்தில் வரும் அரவான் கதாப்பாத்திரத்தை நாடகமாக உருவாக்கியிருக்கிறார். இறக்கும் முன் 'அரவான்' பாத்திரம் எப்படி எல்லாம் மனதில் புலம்பிருக்கும் என்று பாரதக்கதை சொல்ல மறந்ததை எஸ்.ராமகிருஷ்ணன் 'அரவான்' நாடகம் மூலம் பதிவு செய்திருக்கிறார்.<br /> "கண்களைக் கட்டிக் கொண்ட பிறகு உலகம் காணாமல் போய்விடுகிறது. ஆனால் மனது திறந்துக்கொள்கிறே!"<br />கண்களை கட்டிக் கொண்டால் மற்றவர்களைக் காண வேண்டியிருக்காது. எல்லா நேரமும் நம்மை நாமே பார்த்துக் கொண்டே இருக்கலாம்" போன்ற வசனங்கள் மிகவும் அழகு.<br /><br />"பிறந்ததில் இருந்தே கசப்பை எனக்குப் பருகக் கொடுத்த பாண்டவர்களுக்கு விசுவாசத்தைத் திரும்பித் தர வேண்டியிருக்கிறது." என்று அரவான் தனக்குள்ளே பேசிக்கொள்ளும் விரக்தியின் உச்சம். இறந்த அரவான் பேசும் போது தன் உடல் அருகே பெண் அழுவதை பார்க்கிறான். அப்போது, " இந்த தேசம் உடலை அடையாளமாக கொண்டய்து. என் உடல் விலக்கப்பட்டவனின் உடல். அது அணைத்துக் கொள்ளப்பட முடியாதது." என்று சொல்லும் போது தன்னை போல் உலகில் இருக்கும் எல்லா அரவான் நிலைகளையும் சொல்கிறான்.<br /><br />அடிமைகள், காவலர்கள் கதாப்பாத்திரம் கொண்ட 'உருளும் பாறைகள்', கதையே வந்து கதை சொல்லும் 'உதிர்காலம்', 'தஸ்தாயெவ்ஸ்கியின் சங்கீதம்' என்ற நாடகத்தில் தஸ்தாயெவ்ஸ்கியின் காதல் அனுபவம், தஸ்தாயெவ்ஸ்கி எழுதியா நாவல் மையமாக கொண்ட 'மரணா வீட்டின் குறிப்புகள்'கலைப் பொருள் சேகரிப்பவனின் கனவான 'உருப்பளிங்கு', நதியின் அலரல் சத்தமான 'நதி அறியாது, இரவு அறியாத ஒரு கிராமத்தின் கதையான 'சூரியனின் அறுபட்ட சிறகுகள்' என்று ஒவ்வொரு நாடகமும் ஒரு விதம். எஸ்.ராமகிருஷணன் இப்படி தான் இருக்கும் என்று முடிவுக்கு வரமுடியவில்லை.<br /><br />சிரிக்க தெரியாதவர்கள் கூட 'உற்று நோக்கு' நாடகத்தை பார்த்தால் சிரித்து விடுவார்கள். அபத்தமான நாடகமாக இருந்தாலும், ரசிக்கப்பட வேண்டிய நகைச்சுவை. ஆண், பெண் இருவர் காதல் செய்யும் போது சமூகம் அவர்களுக்கு தொந்தரவு கொடுக்கிறது. அதை தொடர்ந்து நான்கு பேர் வந்து நல்லது, கேட்டது சொல்கிறார்கள். இந்த நாடகத்தை எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் அனுமதிக் கொடுத்தால் என் அலுவலக நிகழ்ச்சியில் மீண்டும் ஒரு முறை மேடை ஏற்றிவிடுவேன்.<br /><br />எஸ்.ராமகிருஷ்ணனின் ஒவ்வொரு புத்தகங்களை படிக்கும் போது அவர் எழுத்துக்கள் மீது உள்ள மதிப்பு கூடிக்கொண்டே இருக்கிறது. இறுதியாக நாடகத்துறையில் தனது அனுபவத்தை சொல்லும் போது நாடகத்தை மக்கள் மறந்துக் கொண்டு இருப்பதை உணர்த்துகிறது. எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துக்கள் இருக்கும் வரை இதுப் போன்ற நல்ல நாடகங்கள் வாழ்ந்துக் கொண்டு தான் இருக்கும்.<br /><br />முகவரி :<br /><br />உயிர்மை பதிப்பகம்<br />11/29, சுப்பிரமணியம் தெரு.<br />அபிராமபுரம், சென்னை - 18.குகன்http://www.blogger.com/profile/04496532260803041131noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5381815149684177902.post-84304184993692801902008-12-08T04:29:00.000-08:002008-12-13T16:56:46.564-08:00எஸ்.ராமகிருஷ்ணனின் 'துணையெழுத்து'ஒவ்வொரு புத்தகமும் ஒரு நண்பனுக்கு சமம் என்பார்கள். ஆனால், எஸ். ராமகிருஷ்ணனின் 'துணையெழுத்து' பல நண்பர்களுக்கு சமமான நூல் என்று தான் சொல்ல வேண்டும். தன் தேடல் பயணத்தில் சந்தித்த பல நண்பர்களையும், இலக்கியவாதிகளையும் கட்டுரை வழியாக சொல்லும் போது உணர்வு பூர்வமான சிறுகதை படித்த திருப்தி இருந்தது. ஒரே புத்தகத்தில் வாசகர்களை பல மனிதர்களை சந்திக்க வைத்திருக்கிறார். மனிதனின் பல நிறங்களை புரிய வைத்திருக்கிறார். நகரத்தில் வாழ்ந்தவர்கள் இந்த நூலை படித்து முடித்த பிறகு இந்த நூலில் சொல்லும் இடங்களை பார்க்க வேண்டும் என்ற ஆசை கண்டிப்பாக வரும். பல புத்தகங்களை படித்து எழுதுவதை விட ஒவ்வொரு மனிதனையும், ஊரையும் படித்து எழுதியதால் அவர் எழுத்துக்களில் அதிக ஜீவன் இருக்கிறது.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgKvbnrmmn-dZCUxSZo8-qvWqo_9U8AE4lZU9l4iMu-T-Zoos_gdN1E0WxppxqOuWct4b5gtZHaxmGIgZDgWyvzggY1-vFmP_Iiy8aGD9o-e52WE32K6SVavsHqhwgrOm71bLA-whJi-1PR/s1600-h/Book_18.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 216px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgKvbnrmmn-dZCUxSZo8-qvWqo_9U8AE4lZU9l4iMu-T-Zoos_gdN1E0WxppxqOuWct4b5gtZHaxmGIgZDgWyvzggY1-vFmP_Iiy8aGD9o-e52WE32K6SVavsHqhwgrOm71bLA-whJi-1PR/s320/Book_18.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5279443262803630354" /></a><br /><br />'தலையறு பட்டுப்போன குழந்தையின் விளையாட்டு பொம்மையை ஒரு நாள் பார்த்த போது தான் குழந்தையிலிருந்து எவ்வளவு தூரம் பயணம் செய்து வளர்ந்து விட்டேன் என்பது புரிந்தது" என்ற வரிகள் நெகிழவைக்கிறது. " நிறமில்லாதொரு குடும்பம்", " ஹிரண்ய ஸ்நேகம்", "அன்பின் விதைகள்" போன்ற கட்டுரைகள் என் மனதை மிகவும் பாதித்தது. குறிப்பாக 'அன்பின் விதைகள்' கட்டுரையில் படித்தால் என்னை நினைத்து நானே வெட்கப்பட்டு கொண்டேன். சாதாரன வாட்ச்மென் பூமிநாதன் தன் மாத சம்பளத்தில் நூறு ரூபாய் மற்றவர்களுக்காக ஒதுக்கும் போது நம்மால் ஏன் செய்ய முடியவில்லை என்று எனக்குள்ளே கேள்வி எழுந்தது.<br /><br />உறுபசி கட்டுரையில் ' வித்த முயற்சிக்கும் போது புத்தகத்தை வாங்குவது எளிது, விற்பது கடினம் என்று புரிந்தது' என்ற வரிகள் மிகவும் அருமை. பல பத்திப்பகங்களுக்கும் இதே நிலை தான். நல்ல புத்தகம் சிலபமாக போட்டு விடுகிறார்கள், ஆனால் வாங்கவோ, லைப்பரி ஆர்டர் கொடுக்கவோ ஆட்கள் தான் இல்லை.<br /><br />இந்த நூலில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள்..<br /><br />காய்ச்சல் ஒரு நோயல்ல. உடல் எடுத்துக் கொள்ளும் ஓய்வு என்று தோன்றுகிறது.<br /><br />"எண்ணும் எழுத்தும்" கட்டுரையில் ' நாம் இன்னமும் நம்மை மட்டும் விற்பதற்கு விலை பேசாமல் இருக்கிறோம். சந்தர்ப்பம் இல்லாமலா அல்லது விலை நிர்ணயிக்க முடியாமலா என்று மட்டும் தான் தெரியவில்லை;<br /><br />"மனக்குகையில்" கட்டுரையில் ' அவமானமும், அலைச்சலும், கசப்பும் தான் எழுத்தாளனின் சமையல் பொருட்கள் என்று தோன்றியது.<br /><br />எஸ். ராமகிருஷ்ணனின் 'துணையெழுத்து' நூல் படித்து முடித்தவுடன் நான் அவருடை வாசகனாகவே மாறிவிட்டேன். அவர் எழுதிய 'நெடுங்குருதி' படிக்க தொடங்கியிருக்கிறேன். 'நெடுங்குருதி' நூலை பற்றி இந்த வலைப்பதிவில் விரைவில் எதிர்பாருங்கள்.<br /><br />முகவரி<br /><br />விகடன் பிரசுரம், விலை.110<br />757, அண்ணா சாலை,<br />சென்னை - 2குகன்http://www.blogger.com/profile/04496532260803041131noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5381815149684177902.post-87846637126865577612008-12-02T23:00:00.000-08:002008-12-03T09:14:57.940-08:00சா. கந்தசாமி எழுதிய 'விசாரணைக் கமிஷன்'விலை.75, பக்கங்கள். 208<br /><br />'விசாரணை கமிஷன்' - சாகித்ய அகாதமி பரிசு பெற்ற நாவல். இந்த நாவலில் இரண்டு முக்கிய பாத்திரங்கள் நாயகன் - தங்கராசும், நாயகி ருக்குமணியும் தான். தங்கராசு, ருக்குமணி அவர்கள் வாழும் வீடு, தங்கராசு வேலை செய்யும் பஸ் டெப்போ மற்றும் ருக்குமணி வேலை செய்யும் பள்ளிக்கூடம் என்று முக்கால்வாசி கதை இந்த இடத்தை சுற்றி நடக்கிறது.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhizarIYBeSupc4IB3ALLMsj_EyPgFH2wuXBYeWWapt-cturAJaAof1RKSxnZm2dZi1azWFc6pzMHJr_5XWG12zGuFNWKTHH4T9RbL8juZu4I3j0P62AZePZicPyFDMnnIryRcx5NibbelD/s1600-h/10931.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 205px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhizarIYBeSupc4IB3ALLMsj_EyPgFH2wuXBYeWWapt-cturAJaAof1RKSxnZm2dZi1azWFc6pzMHJr_5XWG12zGuFNWKTHH4T9RbL8juZu4I3j0P62AZePZicPyFDMnnIryRcx5NibbelD/s320/10931.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5275613411148357298" /></a><br /><br />அதிகம் வர்ணனையில்லாமல் கதாபாத்திரங்களில் உரையாடல் மூலம் இடத்தை பற்றியும், கதாபாத்திரத்தின் மனநிலை பற்றியும் சா. கந்தசாமி விளக்குகிறார். முதிர் தம்பதிகளான பஸ் கண்டக்டர் தங்கராசு, டீச்சர் ருக்குமணியும் பிள்ளையில்லாத குறை தீர்க்க தங்கள் நாய் டைகர் மீது அதிக பாசம் வைத்திருக்கிறார்கள். தங்கராசு பல கெட்டவார்த்தைகள் பயன் படுத்தினாலும் தன் மனைவியை குழந்தையில்லை என்று ஒரு முறை கூட குறை சொல்லியதில்லை. அவர்கள் இல்லற வாழ்க்கையை இடை இடையே பிண்ணோக்கி சென்று பார்ப்பது போல் அவர்கள் பெண் பார்க்கும் படலம், ருக்குமணி தங்கராசு அம்மாவை அழைத்து வருவது, ருக்குமணி தொண்டை வலிக்கு மருத்துவமனைக்கு அழைத்து செல்வது போன்ற காட்சிகளை சொல்லும் போது அந்த இடத்திற்கு நம்மை அழைத்து செல்கிறார்.<br /><br />தங்கராசு தன்னுடன் வேலை செய்யும் போக்குவரத்து ஊழியர்களிடம் பேசும் உரையாடல்களை படிக்கும் போது அசல் சென்னை பஸ் டெப்போவில் இருப்பது போல் உணர்வு. தங்கராசு என்ற கதாப்பாத்திரத்தை உருவாக்க பல பெரூந்தில் பயணம் செய்திருப்பார் என்று நினைக்கிறேன். டெப்போவில் பேசும் துணை கதாப்பாத்திரங்களும் மிக இயல்பாக உருவாக்கியுள்ளார். 'புடுங்கி', 'மயிறு' போன்ற வார்த்தைகள் போக்குவரத்து ஊழியர்கள் எதார்த்தமாக பயன்படுத்துவதை இந்த நூலில் கந்தசாமி அவர்கள் கூறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல், எந்த காலத்தில் இருக்கிறோம் என்பதை கதாபாத்திரங்கள் வாயிலாகவே கூறியிருக்கிறார். உதாரணத்திற்கு, பாரதிவாணன் ருக்குமணி டீச்சரை பாராட்டும் போது 'உங்க கலை திறமை வச்சு தான் அறிஞர் அண்ணா கிட்ட கையெழுத்து வாங்க போறேன்’ என்பதும், டெப்போவில் இரண்டு போக்குவரத்து ஊழியர்கள் "எம்.ஜி.ஆர கட்சிய விட்டு நீக்கிட்டாங்க" என்பதும், 'இந்திர காந்தியை சுட்டு கொன்னுடாங்க' என்று சரோஜா டீச்சர் ருக்குமணியிடம் தெரிவிப்பதும், இறுதியில் கட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது ' ராஜீவ் காந்திக்கு ஆதரவு தாரீர்' என்று பேசுவது எந்த காலக்கட்டத்தில் கதை நடக்கிறது என்பதை உணர்த்துகிறார்.<br />ஒரு சில இடங்களில் கதை எந்த காலக்கட்டத்தில் நகர்கிறது என்று குழப்பமாக இருக்கிறது. மிகவும் சிரமப்பட்டு எந்த காலத்தில் கதை நகர்கிறது என்று புரிந்துக் கொள்ள வேண்டியதாக உள்ளது. வாசகர்களை சிரமப்படமால் பார்த்திருக்கலாம்.<br /><br />படிப்பறிவு கம்மியான தங்கராசும், படித்த டீச்சர் ருக்குமணியும் இல்லற வாழ்க்கையில் சின்ன சண்டைகள் வந்தாலும் சந்தோஷமாக வாழ்கிறார்கள். பல பிரச்சனைகளுக்கு நடுவில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருக்கிறார்கள். வயது ஆக ஆக இவர்களுடைய அன்பு பெருகிக் கொண்டே இருக்கிறது. ருக்குமணி தொண்டை வலியை பற்றி பஸ் டெப்போவில் இருப்பவர்கள் பலர் தங்கராசு விடம் விசாரிப்பதும், அதற்கு வைத்தியம் சொல்வது மிகவும் அருமை. போலீஸ்க்கும், போக்குவரத்து ஊழியர்களுக்கும் நடக்கும் சாதான சண்டை எப்படி பெரிய போராட்டமாக மாறுகிறது, அதனால் தங்கராசு குடும்பம் எப்படி பாதிக்கிறது என்று நாவல் முடிகிறது. அந்த போராட்டத்தில் பலர் இறக்கிறார்கள். அதற்கு மாவட்ட ஆட்சியாளர் 'விசாரணை கமிஷன்' வைக்கிறார். ஒரு சமூக போராட்டம் எப்படி ஒரு குடும்பத்தில் நிம்மதியை கெடுகிறது என்று இறுதியில் சொல்லும் போது எல்லோர் மனதில் சா. கந்தசாமி அவர்கள் நிற்கிறார்.<br /><br />முகவரி :<br /><br />அகரம், சரவணா காம்ப்ளேக்ஸ்<br />15பி-1, வெள்ளப்பண்டாரத் தெரு<br />கும்பகோணம் - 612001குகன்http://www.blogger.com/profile/04496532260803041131noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5381815149684177902.post-91876914522435070862008-11-28T02:27:00.000-08:002008-11-28T02:31:46.846-08:00HIV : கொல்லப் பிறந்த கொடுங்கோலன்நாகூர் ரூமி.<br /><br />எய்ட்ஸ்க்கு இதுவரை மருந்து கண்டு பிடிக்கவில்லை என்பது உலகம் அறிந்த உண்மை.அதை பற்றிய விழிப்புணர்வு வர நமது அரசாங்கம் சுவரொட்டியிலும், தொலைக்காட்சியிலும், வானோலியிலும் பிரசாரம் செய்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இருந்தும், எதுவுமே நமக்கு பலன் அளிக்கவில்லை. இந்தியாவில் அதிக எய்ட்ஸ் நோயாளிகள் இருக்கும் மாநிலம் தமிழ் நாடு தான் (இந்த புத்தகத்தில் கிடைத்த தகவல்). பாலியல் தொழில் சட்டமாக கொண்ட மும்பை மாநகரம் இருக்கும் மஹாராஷ்டா மாநிலம் கூட இரண்டாவது இடத்தில் தான் இருக்கிறது. காண்டம் இருந்தால் கூட, தவறான உடல் உறவால் எய்ட்ஸ் கண்டத்தில் இருந்து தப்பிக்க முடியாது என்பதை தான் காட்டுகிறது.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhk_MG-MyZGbBvxjkmUP6LQbvY1EmjZwrMovDj6vUVAOr62ev4vJwVfpdotz6cC_UTcdtnOsFX05KLgie4q8SoxUfHG4AibDVy7i7n209EcuTy-DJjU9Em-2JLJGSwKC7U8QB6wMj4PZkve/s1600-h/Hiv.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 195px; height: 298px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhk_MG-MyZGbBvxjkmUP6LQbvY1EmjZwrMovDj6vUVAOr62ev4vJwVfpdotz6cC_UTcdtnOsFX05KLgie4q8SoxUfHG4AibDVy7i7n209EcuTy-DJjU9Em-2JLJGSwKC7U8QB6wMj4PZkve/s320/Hiv.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5273653981649556674" /></a><br /><br />தினமும் எதாவது ஒரு தொலைக்காட்சியில் சொல்லும் விஷயமாக எய்ட்ஸ் இருக்க, புதிதாக இந்த நூலில் என்ன இருக்க போகிறது என்று நினைத்தேன். ஆனால், படித்து முடித்த பிறகு எய்ட்ஸ் பற்றி நமக்கு தெரியாத பல விஷயங்கள் இருப்பதை தெரிந்துக் கொண்டேன். இந்த நூல் ஒவ்வொரு இந்திய குடிமகனும், போதை ஊசி மகன்களும் படிக்க வேண்டும்.<br /><br />இந்த நூலை நான் சீக்கிரமாக படித்து முடித்ததற்கு மழைக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். மழையால் எனக்கு கிடைத்த விடுமுறையை இந்த புத்தகத்தை படித்து முடித்து விட்டேன். நாவல், சிறுகதை, கட்டுரை, கவிதை போன்ற நூல்களை படித்து பழக்கப்பட்ட எனக்கு உடல் நோய் சம்மந்தமாக நான் படிக்கும் முதல் நூல் இது தான்.<br /><br />நோய் சம்மந்தமாக அறிகுறிகள், அறிவுறைகள் என்று மட்டும் சொல்லாமல் முதல் மூன்று அத்தியாயத்தில் எய்ட்ஸ் நோய் கண்டுபிடித்த சிறு வரலாற்றையும் நாகூர் ரூமி அவர்கள் எழுதியுள்ளார்.<br /><br />1981 ஆம் ஆண்டு, சாதாரண ‘நிமோனியா’ நோய் என்று தான் எய்ட்ஸ்யை நினைத்தார்கள் தொடர்ந்து மருந்து சாப்பிடுபவர்களுக்கும், நோய் எதிர்ப்புச் சக்தி (இம்யூனிட்டி) குறைந்து போகும் நபர்களுக்கு தான் ‘நிமோனியா’ தாக்கும். ஆனால், உடல் ஆரோக்கியமாக வைத்திருப்பவர்களும் நிமோனியாவல் அவதை பட்டனர். பல மருத்துவர்களுக்கு இந்த நிமோனியா தலைவலியாக இருந்தது. அதன் பிறகு எல்லோருக்கும் ஒரு உண்மை தெரிந்தது. நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருமே ஓரினச்சேர்க்கையாளர்கள். ( பதிவர்களுக்கு விளக்க தேவையில்லை என்று நினைக்கிறேன்). அதன் பிறகு ஆணுக்கு பெண், பெண்ணுக்கு ஆண் என்ற இயற்கை பாலுணர்வுகள் கொண்டவர்களை பாதித்ததை கண்டு பிடித்தனர். இது 'செக்ஸ்' சம்மந்தப்பட்ட நோயாகாத் தான் இருக்க வேண்டும் என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஒரு முடிவுக்கு வந்தனர்.<br /><br />நான்கு ஆண்டுகளாக இந்த வியாதிக்கு பெயர் வைக்காமல் இருந்தனர். 1986 ஆம் ஆண்டு, ஒரு நல்ல கரி நாளில், பல பேர் மரணத்திற்கு பிறகு 'இன்டெர்நேஷனல் கமிட்டி ஃபார் நாமன்கிளேச்சர்' ஒரு தீர்மானத்துக்கு வந்தனர். மனிதனை தாக்கும் இந்த வைரஸ்க்கு 'எச்.ஐ.வி' (Human Immunodeficiency Virus - HIV) என பெயர் வைத்தனர். மனித உடலில் இயற்கையாகவே இருக்கும் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பலவீனப்படுத்துவதால் 'எய்ட்ஸ்' (AIDS - Acquired Immune Deficiency Syndrome) என்று பெயர் வைத்தனர்.<br /><br />இப்புத்தகத்தில் 'AIDS’ பற்றி நமக்கு தெரியாத பல தகவல்கள் உள்ளன. உதாரணத்திற்கு, HIV, HIV II என்று இரண்டு வகையான வைரஸ்கள் இருக்கின்றன என்று கூறப்படுகிறது. இரண்டு வகைகளுமே ஓர் ஆரோக்கியமான உடலில் 'இம்யூனிட்டி'யைப் பாதிப்பதாகவும், கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அடையாளங்களைத் தோற்றுவிப்பதாக இருந்தாலும், இவை இரண்டிற்கும் முக்கியமான சில வேறுபாடுகள் உள்ளன. <br /><br />எய்ட்ஸ் உருவான காரணங்களை நாம் பெரிதாக நம்புவது மூன்று காரணங்கள். தனியாக வாழ்ந்த சில குழுக்களிடம் ஏற்ப்பட்ட நோய் இது என்றும், குரங்கில் இருந்து மனிதனுக்குப் பரவியது என்றும், அமெரிக்க ராணுவத்தினரின் கிருமிப் போர் நடவடிக்கை காரணம் என்று பல கருத்துக்கள் உள்ளது. ஆனால், இதில் எந்த காரணங்களும் நிருப்பிக்கப்படவில்லை என்பதை தெளிவாக இந்த நூல் உணர்த்துகிறது.<br /><br />எய்ட்ஸை தடுப்பு ஊசி மூலம் ஏன் தடுக்க முடியவில்லை என்ற விளக்கம் இந்த நூலில் உண்டு. 'HIV' மனிதன் உடலில் ஒரே மாதிரியாக இருப்பது இல்லை. தனது தன்மையையும், உருவத்தையும் மாற்றிக் கொண்டே இருக்கும். நம் உடலில் இருக்கும் எதிர்ப்பு சக்தி 'HIV' வைரஸை கண்டு பிடித்து அழிக்க முடியாது.அதனால், 'வேக்ஸினேஷன்' (Vaccination) போன்ற தடுப்புசி 'HIV'யை கட்டுப்படுத்த முடியாது. <br /><br /><br />'ஹெச்.ஐ.வியும் சந்தர்ப்பவாத நோய்களும்' என்ற அத்தியாயத்தை படிக்கும் போது 'கிரி' படத்தில் வரும் வடிவேலு நகைச்சுவை ஒன்று நியாபகம் வந்தது. 'மஹாநதி'சங்கர் அவர்கள் போன் போட்டு வடிவேலுவை அடிக்க தன் நண்பர்களை வர சொல்லுவார். ஆட்டோவில் ஏற்றி ஒவ்வொரு சந்தில் அடி வாங்கியதை வடிவேலு விளக்குவார். எய்ட்ஸ் நோயும் அப்படி தான். ஒருவனை எய்ட்ஸ் தாக்கி விட்டால் சாதாரண காய்ச்சல் கூட அவன் உடலில் ரூம் போட்டு தங்கிவிடும். டி.பி, கேன்ஸர் என்று ஒவ்வொரு நோய் வந்து தாக்கிக் கொண்டு இருக்கும். கல்லாய் இருந்த உடம்பு துரும்பாய் இலைத்து இறப்பது தான் இந்த நோயின் உச்சக்கட்டம். இதை பற்றி படிக்கும் போதே கொடுமையாக இருக்கிறது. இந்த நோயை அனுபவிப்பவர்களுக்கு எப்படி இருக்கும் என்று நினைத்து பார்க்கவே முடியவில்லை.<br /><br />'ஆப்பிராக்காவில் எய்ட்ஸ்' என்ற அத்தியாயத்தில் ஆப்பிராக்காவில் மட்டும் ஏன் இவ்வளவு எய்ட்ஸ் நோயாளிகள் இருக்கிறார்கள் என்பதை கூறப்படுகிறது. கிட்ட தட்ட எண்பது லட்சம் மக்கள் வரை ஆப்பிராக்கா கண்டத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதிலும் குழந்தைகள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டிருப்பதை சொல்லும் போது அப்பாவிகளை கூட இந்த எய்ட்ஸ் விட்டு வைக்கவில்லை என்பதை புரியவைக்கிறது. <br /><br /><br />குறை இல்லாத மனிதனே இல்லாத போது ஒரு நூல் மட்டும் எப்படி குறையில்லாமல் இருக்கும். எய்ட்ஸ் நோய் உடலில் வந்ததற்கு அடையாளமாக எடை இழப்பு, தொடர்ந்து வயிற்றுப்போக்கு, இருமல், தொண்டை அரிப்பு என்று நன்றாக தான் விளக்குகிறது. இதே சமயத்தில் மழைக்காலத்தில் அவ்வப்போது தொண்டை வலி வருவதால் படிப்பவர்களுக்கு கண்டிப்பாக பயம் வரும் என்று நினைக்கிறேன். அவ்வளவு தத்துரூபமாக எழுதியிருந்தார். எனக்கு இந்த பயம் வந்ததை ஒப்புக்கொள்கிறேன். ( நான் தவறு செய்யும் ஆள் இல்லைங்க. வருஷத்துக்கு ஒரு தடவ இரத்த தானம் பண்ணுவேன். ஒரு சின்ன பயம் மனசுல இருக்க தானே செய்யுது). இந்திய மூலிகையில் எய்ட்ஸ் நோய்க்கு மருந்து இருப்பதாக ஒரு கருத்து நிலவி வருகிறது. அதை பற்றி இன்னும் விரிவாக விளக்கியிருக்கலாம்.<br /><br />இந்த புத்தகத்தின் கடைசி அத்தியாயத்தில் எய்ட்ஸ் நோய் பற்றிய செய்திகளை தமிழ் நாட்டில் உள்ள அலோசனை மற்றும் பரிசோதனை மையங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. <br /><br />'இஸ்லாம்', 'இலியட்' (தமிழில்) போன்ற நூல்களை எழுதிய நாகூர் ரூமி அவர்கள் இந்த நூலை எழுதியுள்ளார். ஒரு மருத்துவர் கூட இந்த அளவிற்கு தெளிவாக விளக்க முடியாது என்று நினைக்கிறேன். அவ்வளவு எளிமையாக பாமரணுக்கு புரியும் வகையில் நூல் படிக்கும் வாசகர்களுக்கு புரிய வைத்திருக்கிறார். (கல்லூரி பேராசிரியர் என்பதால் எளிமையாக புரியவைத்தார் என்று நினைக்கிறேன்.) இந்த நூலை எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட்வர்களுக்கு சமர்ப்பித்திருப்பதை அவருடைய நல்ல எண்ணத்தை காட்டுகிறது.<br /><br />தீவிரவாதிகளின் இயக்கம், வாழ்க்கை வரலாறு போன்ற நூல்களை வெளியிட்டுள்ள நீயூ ஹாரிசன் மீடியா தன்னுடைய இன்னொரு பிரிவான 'நலம்' வெளியீடு மூலம் இந்த நூலை வெளியிட்டுள்ளார்கள். இவ்வளவு நல்ல எழுத்தாளர்கள் வைத்துக் கொண்டு ஏன் பத்திரிக்கை துறையில் கால் பதிக்கவில்லை என்று தெரியவில்லை. அப்படி அவர்கள் பத்திரிக்கை துறையில் வந்தால் பதிவர்களின் ஆதரவு அவர்களுக்கு கண்டிப்பாக இருக்கும்.<br /><br />'நலம் வெளியீடு' க்கு ஒரு வேண்டுகோள். தயவு செய்து முன் அட்டையை இரண்டாவது பதிப்பில் மாற்றி விடுங்கள். 'எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை' பார்க்கும் போது மெல்லிய மனம் படைத்தவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது. மரண தேதியோடு பிறக்கும் குழந்தைகளை பார்க்கும் சக்தி மருத்துவர்களுக்கு மட்டுமே உள்ளது. மற்றப்படி உங்கள் புத்தக சேவை எங்கள் போல் வாசகர்களுக்கு என்றும் தேவை.<br /><br />இதற்கு மேல் இந்த நூலை பற்றியும், ஆசிரியர் பற்றியும் அதிகம் விமர்சிக்க விரும்பவில்லை. அதிகம் விமர்சித்தால் வாங்கி படிக்கிற எண்ணம் போய்விடும். என்னால் முடிந்த வரை ட்ரெய்லர் ஓட்டிவிட்டேன். முழு படத்தை மன்னிக்கவும் புத்தகத்தை வாங்கி தெரிந்துக் கொள்ளுங்கள்.<br /><br />மேலும் அந்த புத்தகத்தை பற்றிய விபரங்களுக்கு...<br /><br /><a href="http://nhm.in/printedbook/209/HIV%20-%20Kollap%20Pirandha%20Kodungolan">http://nhm.in/printedbook/209/HIV%20-%20Kollap%20Pirandha%20Kodungolan</a><br /><br />விலை.50. <br />பக்கங்கள் : 88<br />நீயூ ஹாரிசன் மீடியா,<br />எண். 33/15, இரண்டாவது மேல் தளம்,<br />எல்டாம்ஸ் ரோடு,<br />ஆழ்வார்பேட்டை, சென்னை - 18குகன்http://www.blogger.com/profile/04496532260803041131noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5381815149684177902.post-15072706612356206172008-11-24T23:58:00.000-08:002008-11-24T23:59:53.067-08:00கோர்ட் மார்ஷியல்பி.எஸ்.ஆர்.ராவ்<br /><br />இராணுவத்தில் உயர் அதிகாரியாக பணிபுரிந்த ‘ராவ்’ அவர்கள் இந்திய இராணுவத்தை மையமாகக் கொண்டு, உணர்வு ததும்பும் எழுதிய புதினம் இது. பாகிஸ்தான் தீவிரவாதிகள், யுத்த களம் என்று அதை பற்றி அதிகம் சொல்லாமல் இராணுவ வீரனின் உணர்வுகளை நமக்கு உணர்த்தியிருக்கிறார். மனைவி, குழந்தை என்று பிரிந்து வாடும் இராணுவ வீரன் மனம் எப்படி பாடுப்படும், அவன் மன நிலை எப்படி இருக்கும் என்று மிக அழகாக கூறியிருக்கிறார். அதே சமயம் இராணுவத்திலும் ஊழல் நடக்கும் என்பதை இந்த புதினம் மூலம் சொல்லியிருக்கிறார். கர்னல் சோப்ரா, அவருக்கு ஜால்ரா அடிக்கும் கேப்டன் டேவிட் கதாப்பரத்திரத்தின் மூலம் இராணுவத்தில் இது போன்ற கருப்பு பூனைகள் இருப்பதை சுட்டி காட்டியுள்ளார். கர்னல் சோப்ரா தன் சுயநலத்துக்காக தன் சிப்பாய்களை பன்றியை கழுவ சொல்வதும், தன் குடும்பத்திற்காக வீடு கட்ட சொல்வதும் அவர்களை அடிமைகள் போல் நடத்துகிறார். சிப்பாய்களுக்கு சிறை தண்டனை கொடுக்க உரிமை கர்னலுக்கு இருப்பதால் அவர்களும் பயந்து வேலை செய்கிறார்கள். தங்கள் வருமானத்தை குடும்பத்திற்கு அனுப்ப எவ்வித தடங்களும் வர கூடாது என்பதில் ஒரு சில சிப்பாய்கள் தன்மானத்தை மறந்து கர்னல் சோப்ராவுக்கு வேலை செய்கிறார்கள்.<br /><br />"கோர்ட் மார்ஷியல்" நாவல் - விரு விருப்போ, திருப்பங்களோ கொண்ட நாவல் இல்லை. இராணுவ வீரரின் உணர்வுகளின் பிரதிபலிப்பு. மேஜர் சங்கர் என்பவர் தன் உயர் அதிகாரி கர்னல் சித்தாத்தின் மகள் வினிதாவை கற்பழித்து விடுகிறார். வினிதா மேஜர் சங்கருக்கு எதிராக இராணுவ கோர்ட்டில் வழக்கு போடுகிறாள். மேஜர் சங்கர் எதிராக ‘கோர்ட் மார்ஷியல்’ விசாரணை நடக்கிறது. அந்த சமயத்தில் சங்கர் எழுதிய டைரியை மேஜர் பிள்ளை என்பவர் வினிதாவிடம் கொடுக்கிறார். அடுத்த நாள் கோர்ட் மார்ஷியலில் சங்கருக்கு எதிராக சாட்சி அளிக்க வேண்டிய வினிதா, சங்கரின் டைரியை படிக்கிறாள். அந்த டைரியை படித்த பிறகு என்ன முடிவு எடுக்கிறாள் ? கோர்ட் மார்ஷியலில் என்ன வாக்குமூலம் கொடுத்தாள் ? என்பது தான் இறுதி அத்தியாயம். <br /><br />இந்த நாவலில் எழுபத்தியைந்து சதவீதம் முழுக்க சங்கரின் டைரி தான். தன் இராணுவ வாழ்க்கையை பற்றியும், அவன் சந்தித்த நபர்கள் பற்றியும், ஒரு பெண்ணை கற்பழிக்கும் அழவிற்கு தன்னை எப்படி மிருகமாக மாற்றியதை பற்றியும் விளக்கியிருக்கிறார். தன் உயர் அதிகாரி கர்னல் சோப்ரா தன்னை கேவலமாக நடத்துவதில் மன வேதனை உள்ளாகிறார். ஒரு முறை சிப்பாய் கோராலால் என்பவர் தன் இரு உயர் அதிகாரிகளை கொன்று விடுகிறான். கர்னல் சோப்ரா சங்கரை அந்த கொலை விசாரணை நடத்தி, பதிவு செய்த 'சம்மரி ஆப் எவிடன்ஸ்' ரிப்போர்டை கொடுக்க சொல்கிறார்.<br /><br />சிப்பாய் கோராலால் தன் குழந்தை பிறந்ததற்கு விடுமுறை கேட்டுயிருக்கிறார். ஆனால், கிடைக்கவில்லை. குழந்தைக்கு உடல்நலம் சரியில்லை என்று விடுமுறை கேட்டார், அதற்கும் கிடக்கவில்லை. இறுதியில், தன் குழந்தை இறந்ததற்கு விடுமுறை கேட்டும் கிடைக்காத போது மனதளவில் பாதிக்கப்படுகிறார். அந்த சமயத்தில் கோராலாலில் உயர் அதிகாரி அவனை வேலையை செய்ய கட்டாயப்படுத்த, அவரின் மனவேதனை வெறியாக மாறி அவரை கொலை செய்து விடுகிறார். கோராலால் ஆதரவாக 'சம்மரி ஆப் எவிடன்ஸ்' ரிப்போர்டை சங்கர் தயார் செய்த போது பாராட்டு பதிலாக சோப்ரா அவரை திட்டுகிறார். இதனால், சங்கர் மேலும் மனவேதனை அடைகிறார்.<br /><br />யுத்தம் இராணுவ வீரனை உடல் அளவில் மட்டுமல்ல மனதளவிலும் பாதிக்கிறது என்பதை இந்த நாவல் உணர்த்துகிறது. <br /><br />யுத்ததில் தான் இறக்கப் போகிறோம் என்ற மனநிலையில் இருந்த போது தான் வினிதாவை கற்பழித்திருகிறார். ஐந்து வருடங்களாக அடக்கி வைத்த ஆண்மை உணர்ச்சியை வினிதாவிடம் தீர்த்துக் கொண்டார். தான் இறக்கும் முன் ஒரு பெண்ணையாவது அனுபவிக்க வேண்டும் என்ற மனநிலை இருந்ததாக எழுதியிருந்தான். சங்கரை காவலில் வைத்திருக்கும் மேஜர் "எத்தனையோ இராணுவ வீரர்கள் பெண்களை கற்பழித்த பிறகு அவர்களை கொலை செய்து விடுகிறார்கள். நீங்கள் வினிதாவை கொலை செய்திருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது " என்று கூறிகிறார். நாட்டை காக்கும் இராணுவ வீரர்களின் மறு உருவத்தை இந்த புதினம் மூலம் சொல்லியிருக்கிறார்.<br /><br />“ இது யுத்தகளம். இங்கு தேவர்களும், தேவதைகளும் உலாவி வருவதில்லை. பேய்களும், பிசாசுகளும் தான் வாந்து வருகின்றன.” - யுத்தக்களத்தை பற்றி நல்ல வர்ணனை வரிகள்.<br /><br />வாழ்க்கையில் நிறையத் துன்பங்கள், அவமானங்கள், சோதனைகள், ஏமாற்றங்கள் போன்றவைகளை நீண்ட காலத்திற்கு அனுபவித்தவர்களால் தான், மனித இனம் பயன்படும்படியான நிறைய செய்திகளைக் கொண்ட சிறந்த நூல்களை எழுத முடியும். ரஷ்ய நாட்டச் சேர்ந்த அலெக்ஸாண்டர் ஸோல் ஜினிட்ஸின், ஸ்டாலின் ஆட்சியின் போது மிகுந்த குளிர்ப் பிரதேசமான சைபீரியாவுக்கு அனுப்பப்பட்டு, நிறைய அவமானங்களும் சித்திரவதைக்கும் உட்படுத்தப்பட்டார். அங்கு அவருக்குக் கிடைத்த அனுபவங்கள், உலகமே மெச்சும் எழுத்தாளராக அவரை உயர்த்த உதவின. அவருக்கு இலக்கியத்திற்காக நோபல் பதக்கம் வழங்கப்பட்டது. பிரச்சனைகளில் நிறைய படிப்பினைகள் மறைந்திருக்கின்றன. அதே போல், பி.எஸ்.ஆர்.ராவ் அவர்களுக்கு என்ன அனுபவம் கிடைத்தோ என்று தெரியவில்லை. உணர்வு பூர்வமான கலைப்படத்தை பார்த்த திருப்தி ஏற்ப்படுகிறது.<br /><br /><br />முகவரி<br /><br />நற்பவி பிரசுரம், <br />விலை.80, பக்கங்கள் : 256<br />தி.நகர்,<br />சென்னை -17.குகன்http://www.blogger.com/profile/04496532260803041131noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5381815149684177902.post-59622818563598390432008-11-19T01:29:00.000-08:002008-11-19T01:31:23.685-08:00பரபரப்பு... சிரிசிரிப்பு...'முனைவர்' கு. ஞானசம்ந்தன்<br /><br />நாம் மனிதர்கள் என்று நமக்கு உணர்த்தும் ஒரே உணர்ச்சி நகைச்சுவை தான். கதை படிப்பது போல் முழு வீச்சில் நகைச்சுவை கட்டுரைகளை படித்துவிட கூடாது. எழுதியவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்துக் கொண்டு ஒரு நிமிடமாவது ரசிக்க வேண்டும். ஒரு நிமிட இடைவேளைக்கு பிறகு அடுத்த கட்டுரை போக வேண்டும். அப்படி ஒவ்வொரு கட்டுரையின் முடிவில் ‘ஞானசம்பந்தன்’ அவர்கள் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கிறார்.<br /><br />ஜெயா டி.வியின் ஆஸ்தான பட்டிமன்ற நடுவர் ‘ஞானசம்பந்தன்’ அவர்கள் இந்த நூலை எழுதியிருக்கிறார். யாரையும் கேலி செய்யாமல் தன் அனுபவத்தில் இருந்தும், சங்க இலக்கியத்தில் இருந்தும், குழந்தைகள் இடமிருந்தும் தான் ரசித்த நகைச்சுவையை எடுத்து தொகுத்துள்ளார். பலர் ( என்னையும் உட்பட) நண்பர்களுடன் ரசித்த நகைச்சுவையை அப்படியே மறந்து விடுகிறோம். இவரை போல் நாம் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் நகைச்சுவை சம்பவங்களை குறித்து வைத்துக் கொண்டால் அனைவரும் நகச்சுவை எழுத்தாளராகி விடலாம். ரொம்ப பேசிவிட்டேன் என்று நினைக்கிறேன். இந்த புத்தகத்திற்கு வருவோம்.<br /><br />'பரபரப்பு... சிரிசிரிப்பு' , 'சிரிப்போம்... சிந்திப்போம்' என்று இரண்டு பகுதியாக நூலை பிரித்துள்ளார். முதல் பகுதியில் பேராசிரியராக கல்லூரியில் சம்பவங்களும், பள்ளிப் போட்டியில் தலைமை ஏற்றுக் கொண்ட சம்பவங்களும் எழுதியுள்ளார். இதில் எனக்கு பிடித்த நகைச்சுவை...<br /><br />பையன் : எங்கப்பா ஒரு ஊது ஊதுனார்னாப் போதும்... பஸ் ஓடியே போயிடும்.<br />ஆசிரியர் : ஆமா... உங்கப்பா யாரு ? பயில்வானா ?<br />பையன் : இல்ல... கண்டக்டரு...<br /><br />இந்த புத்தகத்தில் இலக்கியத்தில் இருக்கும் சிலேடை ( டபுள் மினிங்) நகைச்சுவையை குறிப்பிட்டு சொல்லியாக வேண்டும்<br /><br />புலவர் : வணக்கம் மடத்தலைவா..<br />தலைவர் : நான் மூட்டாளின் தலைவனா....!<br />- என்று கோபமாக கேட்க<br />புலவர் : மடத்துக்கு தலைவனே என்று சொல்கிறார்.<br />மடாதிபதி என்பதை எப்படி சொல்லியிருக்கிறார் என்று பார்த்துக் கொள்ளுங்கள். <br />இந்தியாவில் ஏன் இவ்வளவு மக்கள் தொகை என்றால் 'இந்தியா ஒரு தீப கர்ப்ப நாடு' என்று கூறுகிறார்.<br /><br />ஒரு புலவர் தலை மீது பெரிய மூட்டையுடன் சென்றுக் கொண்டு இருந்தார். உயர்ந்த வீட்டில் மாடத்தில் இருந்த வள்ளல் ஒருவர் "தலையில் என்ன பெரிய மூட்டை" என்று கேட்க " என் தலை விதி வசம்" என்றார். உடனே அந்த வள்ளல் சிரித்தார். உண்மையில் அந்த புலவர் கூறியது " என் தலைவி திவசம்".<br /><br />நண்பர்களோடு நகச்சுவை பகிர்ந்துக் கொள்ள நினைப்பவர்கள், பட்டி மன்ற பேச்சாளர்களுக்கு நிச்சயம் இந்த புத்தகம் பயன்ப்படும்.<br /><br />முகவரி :-<br /><br />விஜயா பதிப்பகம், <br />20 ராஜ வீதி,<br />கோயமுத்தூர் - 641001குகன்http://www.blogger.com/profile/04496532260803041131noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5381815149684177902.post-58992346422981526352008-11-12T22:03:00.000-08:002008-11-13T04:53:01.436-08:00‘சாகித்ய அகாதமி விருது’ பெற்ற எழுத்தாளர்கள்வருடம் - எழுத்தாளர் - புத்தகம்<br /><br />1955 - ஆர்.பி.சேது - பிள்ளை தமிழ் இன்பம் (கட்டுரை)<br />1956 - 'அமரர்' கல்கி - அலை ஓசை (நாவல்)<br />1958 - சி.ராஜ கோபாலச்சாரி -சக்கரவர்த்தி திருமகன்( இராமயணத்தை கட்டுரை வடிவில் சொல்லும் நூல்)<br />1961 - மு.வரதராஜன் - அகல் விளக்கு (நாவல்)<br />1962 - மி.ப.சோமசுந்திரம் - அக்கரை சீமையில் (பயணக்கட்டுரை)<br />1963 - அகிலோன்(P.V.அகிலான்டம்) - வைகையின் மைந்தன் (நாவல்)<br />1965 - பி. ஸ்ரீஆச்சாரியா - ஸ்ரீராமானுஜர் (வாழ்க்கை வரலாறு)<br />1966 - எம்.பி. சிவஞானம் - வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (வாழ்க்கை வரலாறு)<br />1967 - கே.வி. ஜகநாதன் - வீரர் உலகம் (இலக்கிய ஆய்வு கட்டுரை)<br />1968 - ஏ.சினிவாச ராகவன் - வெள்ளை பறவை (கவிதை)<br />1969 - பாரதிதாசன் - பிசிராந்தையா (நாடகம்)<br />1970 - ஜி.அலகிரிசாமி - அன்பளிப்பு (சிறுகதைகள்)<br />1971 - நா.பார்த்தசாரதி - சமூதாய வீதி (நாவல்)<br />1972 - ஜெயகாந்தன் - சில நேரங்களில் சில மனிதர்கள் (Novel)<br />1973 - ராஜம் கிருஷ்ணன் - வேருக்கு நீர் (நாவல்)<br />1974 - கே.டி. திருநாவுக்கரசு - திருக்குறள் நீதி இலக்கியம் (இலக்கிய ஆய்வு கட்டுரை)<br />1975 - ஆர். தண்டாயூதம் - தற்கால தமிழ் இலக்கியம் (இலக்கிய ஆய்வு கட்டுரை)<br />1977 - இந்திரா பார்த்தசாரதி - குருதிப்புனல்(நாவல்)<br />1978 - வல்லிகண்ணன் - புதுகவிதையின் தோற்றமும், வளர்ச்சியும் (ஆயுவு கட்டுரை)<br />1979 - டி.ஜானகிராமன் - சக்தி வைத்தியம் (சிறுகதைகள்)<br />1980 - கண்ணதாசன் - சேரமான் காதலி (நாவல்)<br />1981 - எம்.ராமலிங்கம் - புதிய உரைநடை (ஆய்வு கட்டுரை)<br />1982 - பி.எஸ்.ராமையா - மணிக்கோடி காலம் (இலக்கிய வரலாறு)<br />1983 - டி.எம்.சி.ரகுநாதன் - பாரதி:காலமும் கருத்தும் (இலக்கிய ஆய்வு கட்டுரை)<br />1984 - 'திருப்புரசுந்தரி' லக்ஷ்மி' - ஒரு காவிரியை போல (நாவல்)<br />1985 - ஏ.எஸ்.ஞானசம்பந்தம் - கம்பன்:புதிய பார்வை (ஆய்வு கட்டுரை)<br />1986 - கா.நா.சுப்பிரமணியன் - இலக்கியத்துக்கு அல்லது இயக்கம் (ஆய்வு கட்டுரை)<br />1987 - ஆதவன் சுந்தரம் - முதலில் இரவு வரும் ( சிறுகதைகள்)<br />1988 - வி.சி.குழந்தைசாமி - வாழும் வளமும் ( இலக்கிய ஆய்வு கட்டுரை)<br />1989 - எல்.எஸ்.இராமமிர்தம் - சிந்தானந்தி (சுயவாழ்க்கை வரலாறு கட்டுரைகள்)<br />1990 - எஸ்.சமுத்திரம் - காட்டு: வேரில் பழுத்த பலா(நாவல்)<br />1991 - கி.ராஜ நாராயணன் - கோபல்லபுரத்து மக்கள்(நாவல்)<br />1992 - கோவி. மணிசேகரன் - குற்றால குறிஞ்சி (சரித்திர நாவல்)<br />1993 - எம்.வி.வெங்கட்ராம் - காதுகள் (நாவல்)<br />1994 - பொன்னீலன் (கந்தேஷ்வர பத்வோத்சலன்) - புதிய தரிசனங்கள் (நாவல்)<br />1995 - பிரபஞ்சன் - வானம் வசப்படும் (நாவல்)<br />1996 - அசோகமித்திரன் - அப்பாவின் ஸ்நேகிதர் ( சிறுகதைகள்) <br />1997 - தோப்பில் மோஹமத் மீரான் - சாய்வு நாற்காலி (நாவல்)<br />1998 - சா.கந்தசாமி - விசாரணை கமிஷன் (நாவல்)<br />1999 - அப்தூல் ரகுமான் - ஆலாபனை (கவிதை)<br />2000 - தி.க.சிவ சங்கரன் - விமர்சனங்கள் மதிப்புரைகள் பேட்டிகள் (ஆய்வு கட்டுரை)<br />2001 - சி.எஸ். செல்லப்பா - சுதந்திர தாகம் (நாவல்)<br />2002 - சிற்பி பாலசுப்பிரமணியன் - ஒரு கிராமத்து நதி (கவிதை)<br />2003 - வைரமுத்து - கள்ளிகாட்டு இதிகாசம் (நாவல்)<br />2004 - ஈரோடு தமிழன்பன் - வணக்கம் வள்ளுவா (கவிதை)<br />2005 - ஜி. திலகவதி - கல்மரம் (நாவல்)<br />2006 - மு.மேத்தா - ஆகாயத்துக்கு அடுத்த வீடு (கவிதை)<br />2007 - நீலா பத்மநாபன் - இலையுதிர் காலம் (நாவல்)<br /><br />விருதுக்கள் இந்த ஆண்டுகளுக்கு (1957, 1959, 1960, 1964 and 1976) வழங்கப்படவில்லை.எதேனும் தவறு இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.குகன்http://www.blogger.com/profile/04496532260803041131noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-5381815149684177902.post-82259103392753846102008-11-10T01:19:00.000-08:002008-12-19T03:03:43.956-08:00என் பெயர் எஸ்கோபர்பா.ராகவன்<br /><br />தீவிரவாத இயக்கங்கள், குற்றவாளி, அரசியல் அமைப்பு பற்றிய குறிப்புகள் என்று வாசகர்களின் தேடலுக்கு கிழக்கு பதிப்பகம் சங்கம்மாக இருக்கிறது. குற்றவாளிகளை ஹீரோவாக்காமல் அவர்கள் வாழ்க்கையை அப்படியே படம் பிடித்துக் காட்டும் தனி சிறப்பு கிழக்கு பதிப்பக நூல்களுக்கு உண்டு. பா.ராகவன் அவர்கள் எழுதிய 'டாலர் தேசம்', 'பாக்- ஒரு புதிரின் சரிதம்', ‘9/11 : சூழ்ச்சி வீழ்ச்சி மீட்சி’ நூல்களை படித்ததில் இருந்து அவர் எழுத்துக்கள் மீது எனக்கு தனி மரியாதை உண்டு. இந்த நூலும் அப்படி தான். சர்வதேச கடத்தல்க்காரன் ‘பாபிலோ எஸ்கோபர்’ பற்றிய வரலாறு.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSxPxmMHqQayaOv7-vO4DS9wIyUtd4hZUMkHzpMBFXIQro7kCe8k2rUbQpbxCoRakiGOPIJdBrLHwoT3b6KvZKTt_ytmQqBNXWFYITNuc2Ukhr4_ZGMA2q7Q2bTlIk6qGRtGngSgJZm1xR/s1600-h/Escobar.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 195px; height: 300px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSxPxmMHqQayaOv7-vO4DS9wIyUtd4hZUMkHzpMBFXIQro7kCe8k2rUbQpbxCoRakiGOPIJdBrLHwoT3b6KvZKTt_ytmQqBNXWFYITNuc2Ukhr4_ZGMA2q7Q2bTlIk6qGRtGngSgJZm1xR/s320/Escobar.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5267366416521103074" /></a><br /><br />பெரிய கொள்கையோ லட்சியமோ எதுவுமில்லை. பணம் மட்டும் தான் குறிக்கொள். அதற்காக எதையும் செய்பவன். யாரையும் கொல்ல தயங்காதவன் . நாலாயிரத்து மேற்ப்பட்டவர்களின் மரணத்துக்கு நேரடியாக சம்மந்தப்பட்டவன். கொலும்பியா அரசாங்கத்தை அச்சுருத்திய தனி மனிதன் பாபிலோ எஸ்கோபர்.<br /><br />கார் திருடனாக தன் வாழ்க்கையை தொடங்கி பிறகு கொகெய்ன் கடத்தலில் ஈடுப்படத் தொடங்கினான். கொலும்பியாவில் இருந்து அமெரிக்காவுக்கும், ஐரோப்பியாவுக்கும் ‘கொகெய்ன்’ கடத்தலில் அதிக லாபம் சம்பாதித்தான். தன் கடத்தல் முகத்தை மறைக்க அரசியலில் இறங்கி எம்.பி யாக பொறுப்பேற்றார். ( நம் நாட்டு அரசியல்வாதிகளுக்கு இவர் தான் முன்னோடி )<br /><br />தன்னிடம் வேலை செய்யும் ஊழியர்களுக்கு 20 நாள் கேஷூவல் லீவு, ஆறு மெடிக்கல் லீவு. 50 வயதில் ஓய்வுதியம், பி.எஃப், பென்ஷன் போன்ற எல்லா வசதிகளும் உண்டு. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் கடத்தல் தொழிலை கார்ப்பிரேட் நிறுவனத்தை நடத்துவது போல் நடத்திக் கொண்டு இருந்தான். தன் கடத்தலை தடுக்க நினைத்த அரசு அதிகாரி, போலீஸ், நீதிபதி உட்ப்பட யாராக இருந்தாலும் பட்டியல் போட்டு கொளை செய்துள்ளான். <br /><br />எஸ்கோபரின் கொகெய்ன் கடத்தலால் அமெரிக்க இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர். அதனால், அவனை கொலை செய்ய சி.ஐ.ஏ மேற்க் கொண்ட நகைச்சுவை நடவடிக்கைகளை அழகாக பா.ராகவன் அவர்கள் சொல்லியுள்ளார். <br /><br />எல்லா கடத்தல்க்காரர்களும் ஒரே மாதிரி தான். எஸ்கோபர் மட்டும் அப்படி என்ன பெரிய வித்தியாசமானவனாக இருக்க முடியும் என்று நினைத்தேன். தன் சமந்தப்பட்ட கோப்புகளை அழிக்க எம் - 19 இயக்கத்தின் உதவியுடன் நீதிமன்றத்தை முற்றுக்கையிட்டு, பல நீதிபதிகளை கொன்று கோப்புகளை அழித்தான். பல கடத்தல்க்காரர்களுக்கு அவனுடைய வாழ்க்கை பயணம் தான் 'வெற்றி கைட்' (Guide). <br /><br />தன் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் முதல் முறையாக அவனுடைய ஒன்பது கோடி ரூபாய் சரக்கு எங்கு போனது என்று அவனுக்கேதெரியாது. அதற்காக கவலைப்படும் அவகாசம் கூட அவனுக்கு இல்லை. Search Bloc சுட்டுக் கொள்ளப்பட்டு பரிதாபமாக இறந்தான்.<br /><br />தொன்னூறு ஆரம்பத்தில் இருந்த பயங்கரவாத கடத்தல்காரனை பலர் மறந்திருக்க கூடும். என்னை போன்ற புது வாசகர்கள் எஸ்கோபர் யார் என்று கூட தெரிந்திருக்காது. எல்லா வாசகர்களுக்கு புரியும் படி பா.ராகவன் எழுதிருப்பது தான் இந்த நூலின் தனி சிறப்பு. ஆரம்ப முதல் முடிவு வரை ஒரு கதை விளக்குவது போல் நன்றாக விளக்கியிருக்கிறார்.<br /><br />பக்கங்கள் : 224 , <br />விலை : 90.<br />கிழக்கு பதிப்பகம்குகன்http://www.blogger.com/profile/04496532260803041131noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5381815149684177902.post-51725426773260065242008-11-03T04:14:00.000-08:002008-11-03T04:18:09.641-08:00பட்டிமன்றம் : பழமையா ? புதுமையா ?பட்டிமன்றம் : இன்று மக்கள் பெரிதும் விரும்புவது பண்பாட்டை வளர்க்கும் பழமையா ? இல்லை நாகரிகம் வளர்க்கும் புதுமை ?<br /><br />நேற்று ( 2 நவம்பர், 2008), எருக்கஞ்சேரியில் 11 மணிக்கு மேலே குறிப்பிட்ட தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. இத்தலைப்பின் நடுவராக 'கவிஞர்' சொர்ணபாரதி அவர்கள் இருந்தார். ‘பழமை’ என்ற அணியில் நானும், 'பேராசிரியர்' வள்ளியும், 'புதுமை' என்ற அணியில் 'ஆனந்தம்' இணை-இயக்குனர் மு. வீரமுத்துவும், 'கவிஞர்' மஞ்சரியும் பேசினோம்.<br /><br />இந்த பட்டிமன்றம் எனக்கு மறக்க முடியாத அனுபவத்தை கொடுத்தது. நான் ஒன்றும் சிறந்த மேடை பேச்சாளர் இல்லை. என்னால் முடிந்தளவு பேசினேன். ஒரு சில இடத்தில் கை தட்டல் கிடைத்தது. ( பேச்சை நிருத்துவதற்கான கை தட்டல் இல்லை என்ற நம்பிக்கையில் பேச்சை தொடர்ந்தேன்.)<br /><br />நான் பட்டி மன்றத்தில் பேசிய சாரம்.<br /><br />*. 'பட்டிமன்றம்' என்ற விஷயம் 'பழமை' தான். அப்படி இருக்கும் போது 'மக்கள் பெரிதும் விரும்புவது பழமையா ? புதுமையா' என்ற தலைப்பு தேவையா ? என்ற கேள்வியுடன் என் பேச்சை தொடங்கினேன்.<br /><br />* ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு<br />‘Old Wine in a New Bottle’<br />பழைய மதுவை புது கோப்பையில் கொடுப்பது போல் நவீன தகவல் தொடர்பு சாதனங்கள்' தகவல் தொடர்பு' என்ற பழமைக்கு தான் பயன்படுக்கிறது.<br /><br />யுத்தத்துக்கான ஆயுதங்கள் புதுமையாக இருந்தாலும்<br />யுத்தம் என்பது பழமை தான்<br />பதிவு திருமணம், பகுத்தறிவு திருமணம் புதுமையாக இருந்தாலும்<br />திருமணம் என்பது பழமை.<br /><br />* இன்று சமூதாய சீரழிக்கும் விஷயங்களில் ஒன்று " Living Together”. திருமண ஆகாத ஆண்ணும், பெண்ணும் ஒரே வீட்டில் தங்கி, விருப்பம் இருந்தால் திருமணம் செய்துக் கொள்வார்கள். இந்த புதுமையை நம் சமூகம் ஏற்க்குமா ? நம் பிள்ளைகள் இதை பின் பற்றுவதை நாம் விரும்புவோமா..?<br /><br />* புதுமை... புதுமை... என்று சொல்கிறார்களே.! என் திருக்குறளுக்கும், கம்பராமாயணத்துக்கும் நிகரான புது நூல் உண்டா என்று சொல்லுங்கள்.<br /><br />* இந்தியாவில் இவ்வளவு மக்கள் தொகை இருப்பதற்க்கு காரணமே 'சேலை' என்ற பழமையான உடை தான். அந்த பழமையான உடையை பலர் விரும்புவதால் தான் 'ஒன் மினிட்' புது புடவை வந்தது.<br /><br />* இந்திய தம்பதிகளுக்கு பிறந்த மனோஜ் என்பவர், " Sixth Sense " என்ற படத்தை இயக்கி வெளியிட்ட போது பல பத்திரிக்கைகள் அவரை பாராட்டியது. அவர் மறக்க முடியாத பாராட்டு என்று அவர் சொன்னது 'தன்னை ஹிச்காக்குடன் ஒப்பிட்டது தான்' என்றார். புது இயக்குநர் கூட பழைய இயக்குநரின் விசிரியாக இருக்கிறார்.<br /><br />* இன்று இலங்கை தமிழர்களுக்கு நாம் குரல் கொடுக்கிறோம் என்றால் நம் பாரதி நமக்கு கொடுத்த தமிழ் பற்று தான் காரணம். இந்த புதுமை நமக்கு தமிழ் பற்றா கொடுத்தது ?<br /><br />* இன்று இருக்கும் பொருளாதார வீழ்ச்சியில், பழைய பொறியியல் படிப்பானா ' Mechanical, Electrical, Civil Engg.' படித்தவர்கள் அதிகம் பாதிக்க படவில்லை. புது படிப்பு படித்தவர்கள் தான் பெருமளவு பாதிக்கப்பட்டார்கள் என்று நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.<br /><br />* இறுதியாக...<br />பழமை என்பது கலிமண் மாதிரி ! நமக்கும், சுற்றுப்புறத்திற்கும் நல்லது தான் செய்யும். ஆனால், புதுமை என்பது பிளாஸ்டிக் மாதிரி ! நம்மையும், சுற்றுப்புறத்தையும் பாதிக்கும் என்று கூறி என் உரையை முடித்துக் கொண்டேன்.<br /><br />நடுவர் சொர்ணபாரதி அவர்கள் தன் உரையை முடித்த பிறகு 'பழமைக்கு' சாதகமாக தீர்ப்பு வழங்கினார். நான் சிறப்பாக பேசினேன் என்று பலரும் என்னை பாராட்டினர். எனக்கு மேடை பேச்சு வரும் என்று நேற்று தான் புரிந்துக் கொண்டேன்.குகன்http://www.blogger.com/profile/04496532260803041131noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5381815149684177902.post-23065425715485890912008-10-15T06:35:00.000-07:002008-10-15T06:37:00.856-07:00அரங்க மின்னல்கள்'மயிலாடுதுறை' இளையபாரதி<br /><br />நம் உரத்தசிந்தனை மாத இழதல் சார்பில் 'மயில்டுதுறை' இளையபாரதி எழுதிய 'அரங்க மின்னல்கள்' கவிதை நூல் வெளியிட்டு விழாவில் கலந்துக் கொண்டேன். அந்த நூலை வாங்கியும் படித்தேன். ஒவ்வொரு அரங்கத்தில் பரிசு, விருது வாங்கி தந்த கவிதைகளை நூலாக தொகுத்துள்ளார். சங்கக்கவி பிபாகரபாவு அவர்கள் அணிந்துரை எழுதியுள்ளார். இதற்கு முன் 'நிழலுதிர் நேரம்' (2005), 'நிலவின் புன்னகை' (2006) - இரண்டு கவிதை நூல்களை எழுதியுள்ளார். <br /><br />இந்த நூலில் எல்லா கவிதைகளும் ரசிக்க கூடியவை. இதில் எனக்கு பிடித்த வரிகள்....<br /><br />‘இதந்தரும் சுதந்திரம்’ தலைப்பில்<br />மதிப்பெண்கள் மட்டுமே<br />குறிக்கோளாய் ஆகுது<br />மனித நேயப் பண்புகளை <br />மனதில் வாங்க மறுக்குது !<br /><br />‘அன்பின்வடிவம் அன்னை தெரசா’ வை பற்றி<br />வாழ்க்கையை <br />நீ படிக்கும் வயதில்<br />வாழ்க்கையே<br />உன்னிடம் பாடம் கற்றது !<br /><br />'தண்ணி'யும் தண்ணீரும்’ பற்றி<br />கர்நாடகம், ஆந்திரத்திடம்<br />கையேந்தி, நின்றோம்<br />உன்னால் !<br />அணையும் திறக்கவில்லை<br />ஆதரவும் கிடைக்கவில்லை !<br />ஆனால்,<br />அங்கிருந்து வரும் எனக்கு<br />'தண்ணி'க்குப் பஞ்சமில்லை !<br />- இந்த வரிகள் படித்ததும் சிரிப்பதா அழுவதா என்று தெரியாமல் இருந்தேன். வருத்தத்திற்குறிய விஷயத்தை நகைச்சுவையாக சொல்லியிருக்கிறார்.<br /><br />‘மாறாத மாதங்கள்’ கவிதையில் 'அறிஞர்' அண்ணாவை பற்றி<br />'இவரின் இறுதி ஊர்வல<br />மக்கள் எண்ணிக்கையே<br />ஒரு கின்னஸ் சாதனை !<br /><br />இதுவரை இளையபாரதி கவிதைகள் மட்டுமே எழுதியிருக்கிறார். மேலும், சிறுகதை, கட்டுரை எழுத வேண்டும் என்று இதன் மூலம் கேட்டுக் கொள்கிறேன்.<br /><br /><br />நம்மொழி பதிப்பகம், விலை.60.<br />கவியரசு கண்ணதாசன் நகர்,<br />கொடுங்கையூர், சென்னை - 118.குகன்http://www.blogger.com/profile/04496532260803041131noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5381815149684177902.post-32940712110557141632008-10-06T05:26:00.000-07:002008-12-19T03:07:25.321-08:00அஸிம் கம்ப்யூட்டர்ஜிபிஸ்னஸ் வெற்றியாளர் கதையை எழுதுவதில் என்.சொக்கன் நிகர் என்.சொக்கன் தான். அவர் எழுதிய 'அம்பானி', 'சார்லி சாப்ளின்', 'அயோத்தி நேற்று வரை', 'வல்லினம் மெல்லினம் இடையினம்' போன்ற புத்தகங்களை படித்திருக்கிறேன். படிக்கும் போது அதில் ஏற்ப்பட்ட திருப்தியை விட இந்த புத்தகம் படிக்கும் போது அதிகம் திருப்தியாக இருந்தது. காரணம், கல்லூரியில் படிக்கும் போது சேர விரும்பிய நிறுவனங்களில் 'விப்ரோ'வும் ஒன்று. அவர்களின் வெற்றிக்கதையை மென்பொருள் நிறுவனத்தினர் தெரிந்துக் கொள்ள வேண்டிய ஒன்று.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj4yh1Z15YxDhO8DjudtDFZ_ji0UlIULA-1xc8R4NityIhtdmXvOZxYBQ4eM2g9HeUiHN0qGdDUvyvbVdqWeS-3NisDGT0IXsRJt9Je1RUQZKhEPPBRBir4EpMnG8kSVIsM_gY6q_J4rEAX/s1600-h/Asim_b.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj4yh1Z15YxDhO8DjudtDFZ_ji0UlIULA-1xc8R4NityIhtdmXvOZxYBQ4eM2g9HeUiHN0qGdDUvyvbVdqWeS-3NisDGT0IXsRJt9Je1RUQZKhEPPBRBir4EpMnG8kSVIsM_gY6q_J4rEAX/s320/Asim_b.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5254787039707544082" /></a><br /><br />தந்தை M.H.பிரேம்ஜி மரணத்துக்கு பிறகு 'வனஸ்பதி' வியாபாரத்தின் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். 'Western India Vegetable Products Limited' என்ற நிறுவனத்தை 'Western India Products Limited' என்று சுருக்கி, பிறகு 'WIPRO' என்று இன்னும் சுருக்கினார். பிரேம்ஜியிடம் எதையும் எண்களாக பேசுவது தான் பிடிக்கும். எத்தனை டின் வனஸ்பதி விற்பனை ? எத்தனை சதவிகிதம் முன்னேற்றம் ? என்று தான் பேச வேண்டும். (விப்ரோ நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் இதை கவனித்துக் கொள்ளவும்)<br /><br />பிரேம்ஜி பற்றியும் 'விப்ரோ'வை பற்றியும் பல சுவையான செய்திகள் இந்த புத்தகத்தில் உள்ளன. இதில் எனக்கு பிடித்தது......<br /><br />1. பிரேம்ஜி தவிர அவர் குடும்பத்தில் யாரும் விப்ரோ நிறுவனத்தில் பணி புரியவில்லை. ( இவர் அரசியலுக்கு வந்தால் நல்ல இருக்கும்.)<br />2. விப்ரோவின் கம்ப்யூட்டர் தயாரிப்புப் பிரிவுக்கு ஆரம்பக்காலத்தில் 'எலெக்ட்ரானிக்ஸ் பிரிவு' என பெயர் வைத்தனர்.<br />3. விப்ரோவின் கணினிப் பிரிவு தொடங்கப்பட்ட புதிதில் அதன் தலைமைப் பொறுப்பை ஏற்க ஒருவர் வந்தார். பிரேம்ஜியுடன் பணியாற்றுவது சரிப்படாது என முடிவெடுத்து விலகினார். அவர் பெயர் நாராயணமூர்த்தி !<br />4. எல்லா துறைகளிலும் கால் பதித்த 'விப்ரோ' நிறுவனத்துக்கு 'ரெயின்போ ஃப்ளவர்' (Rainbow Flower Logo) வடிமைத்துக் கொடுத்தவர் ஷோம்பித் சென்குப்தா.<br />5. GEல் பணியாற்றிய விவேக் பால், 'விப்ரோவில் பணியாற்றி அந்த நிறுவனத்தை முன்னணிக்கு கொண்டுவந்ததில் முக்கிய பங்கு வகித்தவர். இருந்தும், சில கருத்து வேறுபாடால் 2005ல் 'விப்ரோவை' விட்டு விலகினார்.<br />6. பிரேம்ஜியை முழு வெற்றியாளர் என்று சொல்ல முடியாது. 'விப்ரோ ஃபைனான்ஸ்', 'விப்ரோ ISP' போன்ற நிறுவனங்கள் துவங்கி பல கோடி நஷ்டப்பட்டு முடினார்.<br />7. "நாம் போட்டியாளர்களை மதிக்க வேண்டும். அவர்களுக்கு மரியாதை கொடுப்பதும் தவறில்லை. பயம் கூட பரவாயில்லை. ஆனால், பயத்தால் போட்டியிலிருந்து பின்வாங்கி விலகி விடக் கூடாது" - என்று பிரேம்ஜியின் முக்கியமான பொன் மொழி.<br /><br />வனஸ்பதி, சோப்பு, குழந்தைகளுக்கான பொருட்கள், மின்சார உபகரணங்கள், இயந்திரங்கள், மருத்துவக் கருவிகள், கணினி என்று எல்லா துறைகளிலும் விப்ரோ கால் பதித்துள்ளது. எல்லா துறைகளிலும் விப்ரோ இருந்தாலும், எதிலும் அவர்களுக்கு முதல் இடம் கிடைக்கவில்லை. அதே சமயம் கணிசமான நல்ல லாபம் ஒவ்வொரு துறையிலும் கிடைத்துக் கொண்டு வருகிறது. <br /><br />Neither ‘First’ Nor ‘Worst’ but they are always ‘Best’ ! – ஒரு வரியில் Wipro சொல்லலாம்.<br /><br />என்.சொக்கன் <br />பக்கங்கள் : 160, விலை:70<br />கிழக்கு பதிப்பகம்குகன்http://www.blogger.com/profile/04496532260803041131noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-5381815149684177902.post-39137819782445019132008-09-22T04:20:00.000-07:002008-12-19T03:06:12.943-08:00லெனின் : முதல் காம்ரேட்வர வர நான் கம்யூனிஸ்டாக மாறி விடுவேனோ என்ற சந்தேகம் எனக்கே வந்துவிட்டது. கம்யூனிஸ புத்தகங்கள் கண்ணில் படும் போது என்னால் படிக்காமல் இருக்க முடியவில்லை. அதுவும் 'கிழக்கு பதிப்பகம்' நூல் என்றால் சொல்லவே வேண்டாம். படித்து விட்டு தான் மறு வேலை பார்ப்பேன். சரி... இந்த புத்தகத்திற்கு வருவோம்.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi44i5nhh0v_p51Vy66SGNUmwfQK9l6Bi6XgaKFp6t47zsd8Jhyphenhyphenps2zlBcz4m4I88zYmqCNs3643_n9QODqTuuQNL0CaT3u_nc2vx0Ws9pd0_kTi2D8DD2Uq2IYQ-olj5Z3sSgoDmcV3FQ7/s1600-h/Lenin.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi44i5nhh0v_p51Vy66SGNUmwfQK9l6Bi6XgaKFp6t47zsd8Jhyphenhyphenps2zlBcz4m4I88zYmqCNs3643_n9QODqTuuQNL0CaT3u_nc2vx0Ws9pd0_kTi2D8DD2Uq2IYQ-olj5Z3sSgoDmcV3FQ7/s320/Lenin.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5254786577452603666" /></a><br /><br />ரஷ்யர்களால் மட்டுமல்ல... இந்த உலகத்தில் இருப்பவர்கள் யாராலும் மறக்க முடியாத ஒருவர் தான் 'லெனின்' அவர்கள். ஜார் ஆட்சியை ஒழித்து, ரஷ்ய மக்களின் உழைப்புக்கு உருவம் கொடுத்தவர். ஜார் அகராதியில் மக்களுக்கு இன்னொரு பெயர் ‘Serfs’; அதாவது அடிமைகள். நிலங்களை வாங்கும் போதும், விற்கும் போதும் அந்த நிலப் பகுதியில் வேலை செய்யும் அடிமைகளையும் சேர்த்தே விலை பேசுவார்கள்.இந்த நிலைமையை மாற்றியவர்.<br /><br />captialist, socialist என்று பாகுபாடே இல்லாமல் எல்லோருமே தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கிய நபர் தான் லெனின்.<br /><br />அவரை பற்றி இந்த புத்தகத்தில் சில குறிப்புகளை சொல்லியாக வேண்டும்<br /><br />1.லெனின் சகோதரர் அலெக்ஸாந்தர் ஸிம்பெர்ஸ்க் பல்கலைக்கழகத்திலிருந்து தங்க மெடல் வாங்கியவர். ஜார் மன்னர் கொலை செய்யும் முயற்சியில் தோல்வி பெற்று தூக்கு தண்டனை பெற்றார். அக்காலக்கட்டத்த்லில் ரஷ்யாவில் பள்ளிக்கூடம் நடத்துவது தேசத் துரோகமாக கருதினர். ஆடுகள், மாடுகள், அடிமைகள் கொல்வதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.<br /><br />2.முதல் சந்திப்பிலேயே லெனினை வசீகரித்தவிட்டார் நதேஷ்தா. தன்னுடைய அழகினால் அல்ல. தொழிளார்கள் மீது கொண்ட மெய்யான கரிதத்தால்.<br /><br />3.லெனின் தொடங்கிய அமைப்பின் பெயர் தொழிலாளி வர்க்க விடுதலைப் போராட்ட ஐக்கியம் (The League of Struggle for the Emancipation of the Working Class)<br /><br />4.முதலாளித்துவம் எங்கெல்லாம் உச்சத்தில் இருக்கிறதோ, அங்கெல்லாம் இது போன்ற பொருளாதார வீழ்ச்சி ஏற்படுவதைத் தவிக்க இயலாது என்பதை ஆதாரத்துடன் சுட்டிக் காட்டினார்.(இப்போதைய அமெரிக்க பொருளாதார வீழ்ச்சி இது தான் காரணமோ !!)<br /><br />5.லெனினை ஏற்றுக் கொண்டவர்கள் போல்ஷ்விக்குகள் என்றும், எதிர்ப்பவர்கள் மென்ஷ்விக்குகள் என்றும் அழைத்தனர். முதல் உலகப் போரை வெளிப்படையாக எதிர்த்தவர் லெனின்.<br /><br />6.ஜார் ஆட்சிக்கு பிறகு ஸ்டாலின் தலைமையில் செம்படை (Red Army) அமைத்தார் லெனின்.<br /><br />7.மொத்தம் 15 கோடி ஹெக்டேர் நிலம் பறிமுதல் செய்யப்பட்டு, குடியானவர்களுக்கு பிரித்துக் கொடுத்து நில புரட்சியை ஏற்ப்படுத்தினார்.<br /><br />8.மார்ச் 21, 1921 புதிய பொருளாதாரத் திட்டம் (New Economic Policy) நடைமுறைக்கு வந்தது.<br /><br />ஒரு முறை லெனினை, பன்யா கப்லான் (Fanya Kaplan)என்ற பெண் கொலை செய்ய முயற்சிக்க அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.<br /><br />இது எல்லாவற்றிக்கும் மேலாக லெனின் மரணத்தின் போது பேசிதாக கீழ் கண்ட வாசகங்கள் எழுதியது மிகவும் அருமை.<br /><br />லெனின் மரணத்தின் போது……<br /><br />நண்பர்கள் கருத்து :<br />லெனின் நினைவுகள் போது. உடல் வேண்டாம்<br /><br />எதிரிகள் கருத்து :<br />லெனினின் நினைவுகள் கூட ஆபத்தானவை. அவர் உடல் அதை விட ஆபத்தானது. எரித்துவிடுங்கள்.<br /><br />மக்கள் கருத்து :<br />தோழர் லெனினின் நினைவுகள் வேண்டும். தோழர் லெனினும் வேண்டும்.<br /><br />அடுத்த இரண்டு மாதங்கள் எந்த கம்யூனிஸ புத்தகங்கள் படிக்க கூடாது என்ற கட்டுப்பாட்டில் இருந்த போது... என் கண்ணில் 'மாவோ' புத்தகம் கண்ணில் பட்டது. நல்ல வேளை வாங்க என் கையில் பணமில்லை. கிரடிட் கார்ட் அந்த புத்தகக்கடையில் வாங்க மாட்டார்களாம். தப்பித்தேன். இன்னும் என் விரதத்திற்கு ஒரு மாதம் இருக்கிறது.<br /><br />மருதன்.<br />விலை- 70, பக்கங்கள்- 174<br />கிழக்கு பதிப்பகம்.குகன்http://www.blogger.com/profile/04496532260803041131noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5381815149684177902.post-40220399620903155412008-09-16T05:16:00.000-07:002008-09-16T21:36:17.509-07:00'கவிஞர்களின் பார்வையில் அண்ணா' நூலுக்கு - படைப்பை அனுப்புங்கள் !100 கவிஞர்கள் பங்கேற்கும் சிறப்பு கவிதைத் தொகுப்பு.<br /><br />இனிய கவிஞரே !<br /><br />பேரறிஞர் அண்ணாவின் புகழுக்கு மகுடம் சூட்டும் நோக்கில் உருவாக்கப்படவுள்ள கவிதை தொகுப்பு இது.<br /><br />இக்கவிதைத் தொகுப்பில் நீங்கள் இடம் பெற 24 வரிகளுக்குள் மரபு, ஹைக்கூ, நவீனம், புதுக்கவிதை என் ஏதேனும் ஒரு வகையில் தங்களது கவிதையொன்றை தங்களது புகைப்படத்துடன் இணைத்து அனுப்ப வேண்டுகிறோம்.<br /><br />சோலை பதிப்பகத்தின் சார்பில் இவ்வாண்டு அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள 'பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழாவில் நூல் வழங்கப்படும். விழாவில் கலந்து கொள்ள இயலாதவர்களுக்கு தபாலில் அனுப்பப்படும்.<br /><br />முக்கிய குறிப்பு.<br /><br />1.நூலுக்காக அச்சு செலவு, தபால் செலவு, ராப்பர் டிசைன், நூல் வெளியீட்டு நிகழ்ச்சி என இருப்பதால் கவிதை அனுப்புவோர் ஒரு கவிதைக்கு ரூ.100/- ஐயும் இணைத்து அனுப்ப வேண்டுகிறோம்.<br />2.காசோலை அல்லது வரைவோலையாக அனுப்புவோர் 'Cholai Printers & Graphics' என்ற பெயருக்கும், மணியார்டர் மூலமாக அனுப்புவோ 'Cholai Pathipagam' என்ற பெயருக்கும் அனுப்ப வேண்டுகிறோம்.<br />3.வெளியூரிலிருந்து காசோலை (அ) வரைவோலையை அனுப்புவோ ரூ.50/- கூடுதலாக அனுப்ப வேண்டுகிறோம்.<br /><br />அனுப்ப வேண்டிய முகவரி :<br /><a href="http://tamilbookreview.blogspot.com/2008/06/blog-post.html">சோலை பதிப்பகம்</a><br />6, பழனி ஆண்டவர் கோயில் தெரு,<br />பெரம்பூர், சென்னை - 11.<br />பேசி : 98405 27782, 3297 1331<br /><br />தனது பேச்சாற்றலால் ஆட்சியைப் பிடித்த வீரராக...<br />பெரியாரின் கொள்கையினைப் பின்பற்றிய பகுத்தறிவுத் தீரராக...<br />திராவிட வரலாற்றில் என்றுமே பேரறிஞராக...<br />தமிழக வரலாற்றில் வாழும் வரலாறாக...<br />வாழ்ந்த... வாழ்ந்து கொண்டிருக்கிற... <br />அண்ணாவை போற்றுவோம்... அருந்தமிழால் அலங்கரிப்போம் !<br /><br />அன்புடன்,<br />'சோலை' தமிழினியன்.<br /><br />சோலை பதிப்பகத்தை பற்றி சிறு குறிப்பு இங்கு நான் சொல்லியாக வேண்டும். காரணம், 100 ரூபாய் கொடுத்து நம் படைப்பை அனுப்புகிறோம், நம்மை ஏமாற்றி விட்டால் என்ன செய்வது என்ற சந்தேகம் உங்களுக்கு வரும். இது வரை அவர்கள் போட்ட தொகுப்பு நூல்களை பற்றி குறிப்பிட விரும்புகிறேன்.<br /><br />1. வைகறை காற்று - 'சோலை' தமிழினியன்.<br />2. <a href="http://tamilbookreview.blogspot.com/2008/02/blog-post_26.html">அன்புள்ள அப்பா (பாகம் - 1)</a> - தன் தந்தை நினைவாக 68 கவிஞர்கள் எழுதிய 68 கவிதைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளது. 'கலைமாமனி' விக்கிரமன் அணிந்துரை எழுதியுள்ளார்.<br />3.அன்புள்ள அப்பா (பாகம்-2) - நடிகர் எஸ்.வி.சேகர், இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் போன்றவர்கள் முன்னுரை எழுதியுள்ளனர்.<br />4. காதல் சொல்ல வந்தேன் - காதல் கவிதை தொகுப்பு நூல்.<br />5. கதை சோலை - 23 பேர்கள் எழுதிய 23 சிறுகதைகள்.<br /><br />'வைகறை காற்று ' நூலை தவிர மற்ற எல்லா நூல்களும் எழுத்தாளர்களிடம் 100 அல்லது 200 ரூபாய் பெற்றுக் கொண்டு தான் தொகுப்பு நூல்கள் போடப்பட்டது. மிதி செலவுகளை விளம்பரம், உதவித் தொகை, தன் சொந்தப் பணம் என்று செலவு செய்து தொகுப்பு நூல் வெளியிடுகிறார். அந்த நூலுக்கு அணிந்துரையும் பிரபலங்களிடம் இருந்து பெறுகிறார். எழுதிய எழுத்தாளர்களுக்கு சான்றிதழ் வழங்குகிறார். 100 ரூபாயில் நம் படைப்பு பலர் பார்வைக்கு செல்வதால் உங்கள் படைப்பை தாரளமாக அனுப்புங்கள்.<br /><br />அன்புள்ள அப்பா (பாகம் - 1), காதல் சொல்ல வந்தேன், கதை சோலை - மூன்று நூல்களிலும் நான் எழுதியுள்ளேன் என்பதை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.குகன்http://www.blogger.com/profile/04496532260803041131noreply@blogger.com0