இன்றைய அவசர உலகத்தில் பதிப்பகம், சிற்றிதழ் என்று நடத்துவது மிகவும் சிரமம். சில கார்ப்பிரெட் நிறுவனங்கள் பதிப்பு உலகில் நுழைந்த பிறகு கொடிக்கட்டி பறந்த சில பதிப்பகங்கள் கூட தள்ளாடிக் கொண்டிருக்கிற நிலையில், திருச்சி தெப்பக்குளம் அருகே இருக்கும் பழனிப்பா பிரதர்ஸ் பதிப்பகம் வெற்றியை பற்றி சொல்லியாக வேண்டும்.
பெரும்பான பதிப்பகங்கள் எடுத்துக் கொண்டால் சென்னையில் இருந்துக் கொண்டு தான் இயங்கி வருகிறது. ஆனால், திருச்சியில் எடுத்துக் கொண்டால் பெயர் சொல்லும் அளவிற்கு இரண்டே பதிப்பகங்கள் தான் உண்டு. ஒன்று அகஸ்தியர் ; மற்றொன்று பழனியப்பா பிரதர்ஸ்.
சமிபத்தில் பழனியப்பா பிரதர்ஸ் வெளியிட்ட சிறு நூல்களை படித்தேன். எல்லாம் 'அறிவியல் அறிஞர்கள்' பற்றிய வாழ்க்கை குறிப்புகள். ஒவ்வொன்றின் விலையும் 20 ரூபாய் மட்டுமே. பெரிய அளவில் 'மார்கெட்டிங்' இல்லை என்பதே மிக பெரிய குறை. பள்ளி மாணவர்களுக்கு புரியும் வகையில் இந்த நூல்கலை எழுதியுள்ளனர். ஒவ்வொருவரின் வாழ்க்கையை பற்றி படிக்கும் போது கதை படிக்கிற உணர்வை எற்படுத்தியுள்ளனர்.
பழனியப்பா பிரதர்ஸின் பெரும்பாலான வாசகர்கள் மாணவர்கள் தான். அவர்களை மனதில் வைத்துக் கொண்டு தான் ஒவ்வொரு நூலையும் வெளியிடுகிறார்கள். புத்தக வாசிப்பு குறைந்து விட்ட நிலையில், பாட புத்தகங்களை மட்டும் படிக்கும் மாணவர்களை நம்பி நூல் வெளியிடுவது சற்று ஆபத்து தான். ஆனால், எந்த காலத்திலும் இந்த நூல் பயன் படும் என்பதால் பெற்றொர்கள் தன் பிள்ளைகளுக்கு 'அறிவியல் அறிஞர்' பற்றிய நூல்களை வாங்கி தந்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
பதிப்புலகில் முதல் இடம் இவர்களுக்கு கிடைப்பது சிரமம் தான். ஆனால், பாதுகாப்பான இடம் இருக்கிறது.
Tuesday, May 20, 2008
பழனியப்பா பிரதர்ஸ் : பதிப்புலக சகோதரர்கள்
Labels:
பதிப்பகம்
Subscribe to:
Posts (Atom)