Tuesday, July 15, 2008

லொள்ளு தர்பார்


முகில்,
விலை. 60. பக்கங்கள் : 158
கிழக்கு பதிப்பகம்

இரண்டாவது முறையாக முகில் எழுதிய நூல் இந்த வலைப்பூவில் இடம் பெறுகிறது ( முதல் நூல் 'யூதர்கள்' ). 'தினமணி கதிரில்' எழுதிய நகைச்சுவை கட்டுரைகளை தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளார். இந்த நூலில் தொடக்கம் முதல் இறுதி வரை முழுக்க முழுக்க லொள்ளு தான். இந்த நூலை சமர்ப்பணம் யாருக்கு என்று பார்த்தால் அந்த 'லோள்ளே வேணாம்' என்று லொள்ளு பண்ணுகிறார்.

லொள்ளுக்காக சினிமாவை எடுத்து அந்த கதையை கலாட்டா செய்யாமல் நம்மை சுற்றி நடக்கும் பல விஷயங்களை எடுத்து லொள்ளு மழை பொழிந்திருக்கிறார். முதல் அத்தியாயமே பத்திரிக்கையில் வரும் நூல் விமர்சனங்களை லொள்ளுக்கு எடுத்துக் கொண்டுள்ளார். சுவாமி சுனாமியானந்தா எழுதிய " மனம் is மனம்" என்ற நூலை லொள்ளு பண்ணும் போது 'விகடனில்' யாரோ மனதை பற்றிய சுவாமியை மனதில் வைத்துக் கொண்டு எழுதியது போல் உள்ளது. ( முகிலுக்கு அவர் மீது என்ன கோபமோ... :) )

பாட்டம் 9 மூவிஸ்யில் தயாரிப்பாளர் கொடுத்த பொட்டியை கை நீட்டி வாங்கி விட்டதால் பத்தாவது இடம் கொடுப்பது என்று சொல்வது படு சுப்பர். 'செல் பேசும் வார்த்தைகள் !" பலர் நிச்சயமாக forward mail ல் படித்திருப்பார்கள். மீண்டும் ஒரு முறை படித்தாலும் தவறில்லை. இதை படிக்கும் பிறகு நம் செல்போனை பார்க்கும் போதெல்லாம் நமக்கே சிரிப்பு வரும். அதே போல் 'மைக் ஸ்பீக்கிங்' அத்தியாயமும் அப்படி தான். மைக் முன் பேசும் போது நம்மால் சிரிப்பை அடக்க முடியாது.

'நடிகை ருசிஷாவுடன் ஒரு நாள்' ( வேறு தலைப்பை வைத்திருக்கலாம். தலைப்பை படித்தவுடன் மனதில் வேறு மாதிரியான சிந்தனை வருவதை கட்டுப்படுத்த முடியவில்லை). "இப்படிதான் இருக்க வேண்டும் எக்ஸாம்" சர்தார்ஜி எக்ஸாம் பேப்பரை நியாபகம் படுத்துகிறது.

லொள்ளு என்று சொல்லும் போது லொள்ளு பண்ணும் அரசியல்வாதிகள் இல்லாமலா ? " ஆட்சியை அமுக்குவது யார்" என்ற கட்டுரையில் 2006 நடந்த தேர்தலில் பங்கு பெற்ற முக்கியமான பிரமுகர்கள் பண்ணிய அலும்புகளை நகைச்சுவையாக சொல்லியிருக்கிறார். 'தும்பிகளோடு அலையும் துப்பட்டாக்காரி' வரும் எழுத்துபித்தன் பண்ணும் கலாட்டா 'சின்ன கலைவானர்' விவேக் அந்த கதாபாத்திரத்திற்கு சரியா இருப்பார் என்று சொல்லும் அளவிற்கு ஓவராக பேசுகிறார்.

லொள்ளு பண்ண நினைப்பவர்கள் 'லொள்ளு தர்பார்' நூலை படியுங்கள். லொள்ளு நூல் என்பதால் லொள்ளான பார்வை...

Wednesday, July 2, 2008

வரலாறு என்றால் என்ன ?


அ.கருணாந்தன்
விலை.5. பக்கங்கள்: 32
பாரதி புத்தகலாயம்


2007ல் புத்தக கண்காட்சியில் இந்த நூலை வாங்கினேன். சிறிய நூல் என்றாலும், ஒன்றரை வருடம் கலித்து தான் இந்த நூலை படிக்க இப்போது நேரம் கிடைத்தது. புத்தகத்தின் வாங்க 'வரலாறு' இந்ததால் இந்த நூலை வாங்க தூண்டியது. இதில் கூறும் விஷயங்களை படிக்கும் போது அதன் விலை மிகவும் குறைவு தான்.

வரலாறு புதினம் எழுதும் எழுத்தாளர்கள் இந்த நூலை படிக்கும் படித்தால் நிச்சயம் மன உறுத்தல் எற்படும். " நாம் வரலாற்றில் கதாநாயகர்களையும், கதாநாயகிகளையும் பிரமிக்க வைக்கும் அவர்களது சாகசங்களையும் தேடவில்லை. மாறாக உண்மையைத் தேடுகிறோம்" என்று ஒரு இடத்தில் கூறுகிறார். வரலாறு நூல் எழுதுபவர்கள் தங்கள் கதாநாயகர்களின் வெற்றியை மட்டும் குறிப்பிடுகிறார்கள், அவர்களின் தோல்வியை மறைக்கிறார்கள். இன்னொரு இடத்தில் "எந்த கல்வெட்டும் அதை வெளியிட்ட மன்னனின் தோல்விகளையும் தவறுகளையும் பட்டியலிடுவதில்லை" . கல்வெட்டில் கூட சில வரலாறு உண்மைகள் மறைக்க படுவதை துணிச்சலாக சொல்லியிருக்கிறார்.
இதை சொல்லும் எழுத்தாளரின் துணிச்சலை பாராட்டாமல் இருக்க முடியாது.

தற்பெருமை நேர்மையான வரலாறாவதில்லை என்பது உண்மை. அதை நூலின் ஆசிரியராக தெளிவாக கூறுகிறார்.

இந்த நூலின் குறை என்றால் சிறிய நூல் என்பது தான். மிக பெரிய விஷ்யத்தை நான்கு வரியில் சொல்ல முயற்சிக்கிறார். உதாரணத்திற்கு... ஜான்ஸி ராணி ஒய்வூதியத்திற்காக தான் ஆங்கிலேயரை எதிர்த்தார் என்று கூறுகிறார். அவரது வீரம் போற்றுதல் குரியது. ஆனால், அவரது தேசபக்தி, தேசீய நோக்கு கேள்வி கேள்விக்குரியது. சொல்ல வேண்டிய விஷயத்தை சுருக்கமாக சொல்லியிருக்கிறார். இன்னும் சில இடங்களில் ஆரிய்ச் அராஞ்களையும் எழுயுள்ளார். ஆனால், 300, 400 பக்கங்கள் சொல்ல வேண்டிய விஷ்யத்தை 32 பக்கங்கள் சொல்லியிருக்கிறார் என்பது தன் சிறு வருத்தம். இதே நூலை அதிக பக்கங்கள் கொண்டு இன்னும் விளக்கி சொல்ல வேண்டும் என்ற வேண்டுக்கோள்ளை ஆசிரியருக்கு விடுப்போம்.

 
Website Hit Counter
வந்தவர்கள்