Monday, March 24, 2008

6 (சிக்ஸ்) சிக்மா


விலை.70. சிபி கே. சாலமன்.
கிழக்கு பதிப்பகம்

இன்று வெற்றி பெற்ற பல நிறுவனங்களின் மந்திரச் சொல் - சிக்ஸ் சிக்மா. ‘பிரம்மாண்ட வெற்றியின் ஃபார்முலா சிக்ஸ் சிக்மா’ என்று முன் அட்டையிலும், ‘பாடப்புத்தகம் போல் பாட்டிக்காமல், ரசித்துப் படித்து பயன் படுத்திக் கொள்ளலாம்’ என்று பின் அட்டையிலும் உள்ளது.

முதல் முன்று, நான்கு அத்தியாயத்தில் பள்ளியில் படித்த Standard Deviation (SD), Mean, Mode பற்றி எல்லாம் விளக்குகிறார். அதன் பின் Operation Researchயில் படித்த Chi-Square பணியில் சில டெபில்களும்,Sampling போனறவற்றை குறிப்பிடும் போது ஆங்கிலத்தில் படித்தை தமிழில் படிக்கும் உணர்வு தான் ஏற்பட்டது. இந்த விஷயங்கள் தெரியாதவர்களுக்கு தெளிவாக சொல்லியிருக்கிறார். தெரிந்தவர்கள் படித்தால் தொய்வாக தான் இருக்கும்.

இந்த நூலில் செய்தி சொல்லும் அளவிற்கு கதைகளும் அதிகம். ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்தில் சொல்லும் கதைகளும், செய்தி துணுக்குகளும் மிகவும் சுவாரஸ்யம். இவை எல்லாம் ரசிக்கக் கூடியதாக இருந்தாலும் புத்தகம் படித்து முடிக்கும் போது பாதி தான் படித்தது போன்ற உணர்வு. சிக்ஸ் சிக்மா பற்றி தெரிந்துக் கொள்வதற்காக வாங்கியதில் முழு திருப்தியில்லை.

'பெல்ட் பேர்வழிகள்' அத்தியாயத்தில் கிரீன் பெல்ட், பிளாக் பெல்ட், மாஸ்டர் பிளாக் பெல்ட், சாம்பியன்ஸ் பற்றி படம் போட்டு தெளிவாக விளக்கியிருக்கிறார். DMAIC அத்தியாயத்தில் ஒவ்வொரு பிரிவையும் உதாரணங்களோடு எல்லோரும் புரியும் வகையில் கூறியிருக்கிறார் சாலமன். Risk Plan பற்றி விளக்கும் போது சொல்லும் கதையும், துணுக்கும் மிக அருமை.

ஒரு சில தமிழ் திரைப்படங்கள் முதல் பாதி மெதுவாக நகர்த்திருந்தாலும், இரண்டாவது பாதியில் வேகமாக கதையை நகர்த்தி வெற்றி பெற்றுவிடும். அதே போல் இந்த நூலில் முதல் பாதியில் தெரிந்ததை படிக்கிறோம் என்ற உணர்வு வந்தாலும், இரண்டாவது பாதியில் சிக்ஸ் சிக்மா விஷயங்களை எளிய முறையில் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

சிக்ஸ் சிக்மா பற்றி எல்லா செய்திகளும் தர படவில்லை என்று இறுதி பகுதியில் ஆசிரியரே கூறுகிறார். மேலும் சிக்ஸ் சிக்மா பற்றி தெரிந்துக் கொள்ள சில இணையத்தளங்கள் விபரங்களையும் கொடுத்திருக்கிறார். சிக்ஸ் சிக்மா பற்றி அறிமுகமாக தான் இந்த நூல் இருக்கிறது. முழுமையான நூல் இல்லை. எனினும் சிக்ஸ் சிக்மா பற்றி பல ஆங்கில நூல்கள் வரும் வேளையில் தமிழ் வாசகர்களுக்காக இந்த நூலை எழுதியத்திற்கு சிபி கே. சாலமன் அவர்களை பாராட்ட வேண்டும்.

முசோலினி


வெ.சாமிநாத சர்மா
விலை.60., ராமையயா பதிப்பகம்

இரண்டாம் உலகப்போரின் நாயகன் ஹிட்லரின் தோழனாக இருந்த முசோலினியின் வாழ்க்கை சரித்திரம். இந்த நூலை படித்து முடிக்கும் போது முசோலினி வாழ்க்கையை பற்றிய முதல் பாகமாக இருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது. காரணம், முசோலினி தன் சொந்த மருமகனை கொன்றது, இரண்டாம் உலகப்போரில் ஹிட்லருடன் கூட்டனி செர்ந்தது, ஹிட்லர் இராணுவத்தால் காப்பற்றப்பட்டு ஜெர்மனிக்கு கொண்டு செல்லுதல் போன்ற செய்திகள் எல்லாம் இந்த நூலில் இல்லை. இவ்வளவு ஏன் ? முசோலினி உடல் மக்கள் பார்வைக்கு தொங்கவிட்ட செய்தி கூட இல்லை. முசோலினி வாழ்க்கையில் நடந்த முக்கியமான நிகழ்வுகள் இல்லாமல் முசோலினி வாழ்க்கை சரித்திரம் உள்ளது.

இந்த நூல் முசோலினி ஆரம்ப வாழ்க்கையை மட்டுமே பிரதிபலிக்கிறது. முசோலினியின் படிப்பு, ஸுசர்லாந்தில் வாழ்க்கை, பத்திரிக்கை ஆசிரியர் பொருப்பு, இறுதியாக இத்தாலி சர்வாதிகாரத்தை அடைவது வரை முசோலினி பற்றிய குறிப்புகள் உள்ளன.

முசோலினி பற்றி முழுமையாக தெரிந்துக் கொள்ள நினைப்பவர்களுக்கு இந்த நூல் உதவதாது. ஒரு வேளை இந்த நூல் முதல் பாகம் என்றால் ஏற்றுக் கொள்ளலாம். இதில் முகம் சுழிக்க வைக்கும் விஷயம் என்னவென்றால் சர்வாதிகாரி முசோலினியை கதாநாயகம் அளவிற்கு அலங்கரித்து எழுதியது தான். முசோலினிக்காக வக்காலத்து வாங்குவது போல் தான் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. இந்த நூலி சுவையானதை பற்றி சொல்ல வேண்டும் என்றால் முசோலினி வேளையில்லாமல் கஷ்டப்பட்டு திரிவதை அழகிய கதை படிப்பது போல் இருந்தது. மற்றப்படி பெரிதாக சொல்வதற்கு இந்த நூலில் எதுவுமில்லை.

Tuesday, March 18, 2008

என் பார்வையில் தபூ சங்கர் !

'உண்மையில் என்னை, காதலை தவிர வேறெதுவும் எழுத விடுவதில்லை காதல். நான் எழுத 'இன்னும் இருக்கிறது' என்று வந்துக் கொண்டே இருக்கிறது காதல் !" தன் “தேவதைகளின் தேவதைகள்” நூலின் முன்னுரையில் தபூ சங்கர் காதலை பற்றி சொல்கிறார்.

பொழுதுப்போக்கு, தகவல், செய்தி, தேர்வு இவைக்களுக்காக மட்டுமே புத்தங்கள் படிப்பவர்கள் இருப்பார்கள். ஆனால், 'கவிதை புத்தகம்' மட்டும் இதற்கு விதி விளக்கு... ரசிக்க மனம் இருந்தால் மட்டுமே கவிதை புத்தகத்தை படிக்க முடியும். ரசிக்க மனமில்லாமல் அவசரத்துக்கு படித்தால் கவிதையில் இருக்கும் ஜீவன் புரிவதில்லை. அதுவும் குறிப்பாக 'காதல் கவிதை புத்தகங்கள்' மனதை ரசிக்க தயார் நிலையில் வைத்துக் கொண்டு தான் படிக்க வேண்டும்.

தபூ சங்கர் காதல் கவிதைகள் சற்று வித்தியாசமானவை. படிக்க மனமில்லாமல் அவர் கவிதை படித்தால் கூட நம் மனம் அவர் எழுத்துக்கள் பதிந்து விடும். அவரோடு சேர்ந்து நாமும் காதலை ரசிக்க தொடங்கிவிடுவோம். இன்னும் அழமாக அவர் கவிதைகளை ரசித்து படித்தால் காதலிக்க விருப்பமில்லாதவர்கள் கூட காதலிக்க ஆசை வரும்.

“தேவதைகளின் தேவதை” நூலில் காதல் மேல் அவருக்கும் இருக்கும் ஈடுபாட்டை இந்த கவிதையில் தெரிந்துக் கொள்ளலாம்.

“காதலைப்பற்றி
முழுது தெரிந்து கொள்ளத்தான்
நான் பிறந்திருக்கிறேன்
தெரிந்தும் கொண்டதும்
இறந்து விடுவேன்”


காதலை பற்றி சொல்லும் போது காதலியை வர்ணிக்காமல் இருந்தால் எப்படி ? காதலியின் பிறந்த நாளுக்கு இதை விட சிறந்த கவிதையை காதலிக்க சொல்ல முடியுமா என்று தெரியவில்லை.

“இன்று
காதால் ஜெயந்தி
முழிக்காதே...
இன்று உன் பிறந்த நாள்....”


காதலியை ஒவ்வொரு முறை சந்திக்கும் போது இப்படி ஒரு கவிதை சொல்லி கொண்டு இருந்தால்.... நம் காதல் என்றும் இளமையாக இருக்கும்.

உன் வெளிச்சம் பட்டு
எனக்கு விழும்
நிழக்கு பெயர் தான்
காதலா ?


தபூ சங்கர் எழுதிய “தேவதைகளின் தேவதைகள்”, “மழையானவள்”, “ எனது கறுப்பு பெட்டி” மூன்று நூலைகளை படித்து இருக்கிறேன். 'விழியீர்ப்பு வீசை' நூலில் இருந்து ஒரு பகுதியை மின்னஞ்லில் வந்ததையும் படித்து இருக்கிறேன். காதலை காதலிக்க காதலி தேவையில்லை....'காதல்' இருந்தால் போதும். தபூ சங்கர் எழுத்துக்களில் நாம் காணலாம்.

காதலை தவிர எதையும் எழுதுவதில்லை என்ற விரதத்தில் இருக்கிறார் என்று தபூ சங்கரை பற்றி நினைத்திருந்தேன். ஆனால், “எனது கறுப்புப்பெட்டி” நூலை படித்தவுடன் அவருக்குள் இப்படியும் பல சிந்தனைகள் உள்ளதா என்று வியக்க வைத்துவிட்டார்.

படித்துக் கிழித்த புத்தங்களை விட
நான்
எழுதி கிழித்த காகிதங்கள் அதிகம்


எழுதுபவர்கள் படிப்பதை விட கிழிப்பது அதிகம் அழகாக கூறியிருந்தார்.

அடுத்து கவிதையில் வரும் பொயக்ள பற்றி அவர் எழுதிய வரிகளில்...

நான் சொல்லுகின்ற பொய்களில்
வளர்கிறது
என் சிந்தனை


இவை எல்லாவற்றிக்கும் மேலாக இந்த கவிதையின் வரிகள் நெஞ்சை தொடும் என்று சொல்வதை விட நெஞ்சை கிழிக்கும் வரிகள் என்று தான் சொல்ல வேண்டும்.

மறக்காமால்
வரும் போது
பிள்ளைகள் சாகும்முன்
தாய்கள் சாகக்கூடாது என்கிற வரத்தை
எந்தக் கடவுளிடமிருந்தாவது பெற்று வந்து
எல்லா அம்மாக்களுக்கும் பிச்சையிடு


சாகா வரம் எல்லா அம்மாக்களுக்கும் கிடைத்து விட்டால் "ஆனாதை" என்ற வார்த்தை இருக்காது.

சினிமாத்துறையில் இருப்பவராக இருந்தாலும், தபூ சங்கரின் கவிதையில் சினிமாத்தனமில்லை.

Saturday, March 8, 2008

யூதர்கள்


முகில்.
விலை ரூ.100, கிழக்கு பதிப்பகம்.

5000 வருட வரலாற்றில் இரத்ததால் எழுதப்பட்ட சரித்திரம். உலகின் மிக பழைமையான மதம் தான் - யுதமதம். ஆனால் அவர்களுக்கு என்று இஸ்ரேல் நாடு உருவானது நவம்பர் 29,1947ல் தான். அதற்கு முன்பு வரை அவர்கள் நாடோடியாக தான் வாழ்ந்தார்கள். தனி நாடு கிடைத்த பின்பும் அவர்கள் பிரச்சனை ஓய்ந்த பாடுடில்லை. இன்றும் பாலஸ்தீனத்துடன் யுத்தம் நடத்திக் கொண்டு தான் இருக்கிறது.

இஸ்லாம் மதம் முன்பே யூதர்கள் தான் கடவுளுக்கு உருவம் இல்லை என்று வழிப்பட்டவர்கள். கிறித்துவ மதத்தினர் வணங்கும் இயேசு ஒரு யூதர். உலகில் எல்லா மூலை முடுக்குகளிலும் இஸ்லாம், கிறித்துவம் பறவிவிட்டது. ஆனால், யூதன் என்றால் கொலை செய்யப்பட வேண்டியவர்கள் என்று தான் சரித்திரம் காட்டியுள்ளது.

'யுதர்கள்' - இந்த நூல் நான்கு பாகங்களாக எழுதியுள்ளார் முகில் அவர்கள். யூதாஸ் இயேசுவை காட்டிக் கொடுத்த கதையில் இருந்து நூல் துவங்குகிறது. அந்த ஒருவன்(யூதாஸ்) காட்டிக் கொடுத்ததால் சரித்திரம் யூதர்கள் என்றால் காட்டிக் கொடுப்பவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டது. அதன்பின் பைபிள் காலத்தின் தேவ தூதரான மோசஸ், தாவீத், சாலமோன் ஆலயம் பற்றி மிக அழகாகவும் தெளிவாகவும் கூறியுள்ளார்.

நிகழ்காலத்தில் இஸ்ரேல் - பாலஸ்தீன் பிரச்சனை இருந்தாலும், வரலாற்று சுவடுகளில் நபி அவர்கள் " யூதர்களும் இஸ்லாமியர்களுக்கு இணையாக உரிமை படைத்தவர்களாகவே நடத்தப்படுவர். யூதர்களின் மதச் சுதந்திரத்துக்கு எந்த விதத்திலும் தடையில்லை. அவர்கள் தங்கள் எண்ணப்படி வழிபடலாம். இந்த தேசம் இஸ்லாமியர்கள் யூதர்களோடு கைகோர்த்து உருவாக்கும் தேசம்' என்று தான் கூறியுள்ளார்.

இந்த நூல் யூதர்கள் வரலாற்றூ கதையோடு நிர்க்கவில்லை. அவர்களின் மத நம்பிக்கை, பண்டிக்கைகள், சமூகம், சடங்குகள், இந்தியாவில் யூதர்கள் என்று நான்காவது பாகத்தில் கூறியுள்ளார்.

யூதர்கள் பற்றீய நூல் என்பதால் முழுக்க முழுக்க ஆசிரியர் முகில் அவர்கள் வக்காளத்து வாங்கவில்லை. ஏன் யூதர்களை எல்லா காலத்திலும் வெருக்கப்படுகிறார்கள் ? என்பதையும் இடை இடையே கூறியும் இருக்கிறார். உலகில் உள்ள எல்லா மதங்களை விட தங்கள் மதம் தான் சிறந்தது என்ற எண்ணம் யூதருக்கு உண்டு. உலகத்திற்கு 'வட்டி' என்பதை அறிமுகம் படுத்தியவர்கள் யூதர்கள். 'இருக்க இடம் படுக்க பாய் கேட்கும் குணம்' யூதர்களுக்கு உண்டு. அப்படி தான் ஒவ்வொரு நாட்டிலும் குடி புகுந்து அதன் பிறகு விரட்டப்பட்ட காரணமும் இது தான். 'ஹமாஸ்' தாக்குதலை மிகைப்படுத்தி அமெரிக்க ஆதரவு பெற்றுக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் கெட்ட குணங்கள் சொல்லும் முகில், நல்ல குணங்களையும் சொல்லியிருக்கிறார். ஒரு யூதனுக்கு வாய்ப்பு வந்தால் அதை சரியாக பயன்படுத்தி கொள்வார். தான் முன்னேறுவதோடு தன்னுடன் மற்ற யூதர்களை முன்னேற்றும் குணம் யூதர்களுக்கு உண்டு.

இத்தனை யூதர்கள் கொலை செய்ய வேண்டும் டார்கெட் வைத்துக் கொண்டு தான் இன்றும் ஹமாஸ் இயக்கத்தில் சேருகிறார்கள். அன்று முதல் இன்று வரை யாராவது ஒருவர் யூதர்களை அழிபதை லட்சியமாக கொண்டவர்கள் பிறந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த நூல் யூதர்களுக்கு ஆதரவாகவுமில்லை, எதிராகவுமில்லை. அவர்களை நமக்கு புரிய வைத்திருக்கிறார்கள்.

 
Website Hit Counter
வந்தவர்கள்