Tuesday, March 18, 2008

என் பார்வையில் தபூ சங்கர் !

'உண்மையில் என்னை, காதலை தவிர வேறெதுவும் எழுத விடுவதில்லை காதல். நான் எழுத 'இன்னும் இருக்கிறது' என்று வந்துக் கொண்டே இருக்கிறது காதல் !" தன் “தேவதைகளின் தேவதைகள்” நூலின் முன்னுரையில் தபூ சங்கர் காதலை பற்றி சொல்கிறார்.

பொழுதுப்போக்கு, தகவல், செய்தி, தேர்வு இவைக்களுக்காக மட்டுமே புத்தங்கள் படிப்பவர்கள் இருப்பார்கள். ஆனால், 'கவிதை புத்தகம்' மட்டும் இதற்கு விதி விளக்கு... ரசிக்க மனம் இருந்தால் மட்டுமே கவிதை புத்தகத்தை படிக்க முடியும். ரசிக்க மனமில்லாமல் அவசரத்துக்கு படித்தால் கவிதையில் இருக்கும் ஜீவன் புரிவதில்லை. அதுவும் குறிப்பாக 'காதல் கவிதை புத்தகங்கள்' மனதை ரசிக்க தயார் நிலையில் வைத்துக் கொண்டு தான் படிக்க வேண்டும்.

தபூ சங்கர் காதல் கவிதைகள் சற்று வித்தியாசமானவை. படிக்க மனமில்லாமல் அவர் கவிதை படித்தால் கூட நம் மனம் அவர் எழுத்துக்கள் பதிந்து விடும். அவரோடு சேர்ந்து நாமும் காதலை ரசிக்க தொடங்கிவிடுவோம். இன்னும் அழமாக அவர் கவிதைகளை ரசித்து படித்தால் காதலிக்க விருப்பமில்லாதவர்கள் கூட காதலிக்க ஆசை வரும்.

“தேவதைகளின் தேவதை” நூலில் காதல் மேல் அவருக்கும் இருக்கும் ஈடுபாட்டை இந்த கவிதையில் தெரிந்துக் கொள்ளலாம்.

“காதலைப்பற்றி
முழுது தெரிந்து கொள்ளத்தான்
நான் பிறந்திருக்கிறேன்
தெரிந்தும் கொண்டதும்
இறந்து விடுவேன்”


காதலை பற்றி சொல்லும் போது காதலியை வர்ணிக்காமல் இருந்தால் எப்படி ? காதலியின் பிறந்த நாளுக்கு இதை விட சிறந்த கவிதையை காதலிக்க சொல்ல முடியுமா என்று தெரியவில்லை.

“இன்று
காதால் ஜெயந்தி
முழிக்காதே...
இன்று உன் பிறந்த நாள்....”


காதலியை ஒவ்வொரு முறை சந்திக்கும் போது இப்படி ஒரு கவிதை சொல்லி கொண்டு இருந்தால்.... நம் காதல் என்றும் இளமையாக இருக்கும்.

உன் வெளிச்சம் பட்டு
எனக்கு விழும்
நிழக்கு பெயர் தான்
காதலா ?


தபூ சங்கர் எழுதிய “தேவதைகளின் தேவதைகள்”, “மழையானவள்”, “ எனது கறுப்பு பெட்டி” மூன்று நூலைகளை படித்து இருக்கிறேன். 'விழியீர்ப்பு வீசை' நூலில் இருந்து ஒரு பகுதியை மின்னஞ்லில் வந்ததையும் படித்து இருக்கிறேன். காதலை காதலிக்க காதலி தேவையில்லை....'காதல்' இருந்தால் போதும். தபூ சங்கர் எழுத்துக்களில் நாம் காணலாம்.

காதலை தவிர எதையும் எழுதுவதில்லை என்ற விரதத்தில் இருக்கிறார் என்று தபூ சங்கரை பற்றி நினைத்திருந்தேன். ஆனால், “எனது கறுப்புப்பெட்டி” நூலை படித்தவுடன் அவருக்குள் இப்படியும் பல சிந்தனைகள் உள்ளதா என்று வியக்க வைத்துவிட்டார்.

படித்துக் கிழித்த புத்தங்களை விட
நான்
எழுதி கிழித்த காகிதங்கள் அதிகம்


எழுதுபவர்கள் படிப்பதை விட கிழிப்பது அதிகம் அழகாக கூறியிருந்தார்.

அடுத்து கவிதையில் வரும் பொயக்ள பற்றி அவர் எழுதிய வரிகளில்...

நான் சொல்லுகின்ற பொய்களில்
வளர்கிறது
என் சிந்தனை


இவை எல்லாவற்றிக்கும் மேலாக இந்த கவிதையின் வரிகள் நெஞ்சை தொடும் என்று சொல்வதை விட நெஞ்சை கிழிக்கும் வரிகள் என்று தான் சொல்ல வேண்டும்.

மறக்காமால்
வரும் போது
பிள்ளைகள் சாகும்முன்
தாய்கள் சாகக்கூடாது என்கிற வரத்தை
எந்தக் கடவுளிடமிருந்தாவது பெற்று வந்து
எல்லா அம்மாக்களுக்கும் பிச்சையிடு


சாகா வரம் எல்லா அம்மாக்களுக்கும் கிடைத்து விட்டால் "ஆனாதை" என்ற வார்த்தை இருக்காது.

சினிமாத்துறையில் இருப்பவராக இருந்தாலும், தபூ சங்கரின் கவிதையில் சினிமாத்தனமில்லை.

2 comments:

Anonymous said...

அனைத்து கவிதைகளும்

http://www.muthamilmantram.com/viewtopic.php?f=178&t=12305&hilit=%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%82+%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D

விழி ஈர்ப்பு விசை
http://free-ebook-collection.blogspot.com/2008/01/blog-post_5493.html

தேவதைகளின் தேவதை
http://free-ebook-collection.blogspot.com/2008/01/blog-post_5552.html

http://bharathi-kannamma.blogspot.com/2006/08/blog-post_115495062995324242.html

http://kundavai.wordpress.com/2005/08/22/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%82-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/

http://www.geocities.com/princeofbhel/site/tabu_sankar_story1.html

குகன் said...

நன்றி ரசிகன் அவர்களே....!

 
Website Hit Counter
வந்தவர்கள்