Monday, September 22, 2008

லெனின் : முதல் காம்ரேட்

வர வர நான் கம்யூனிஸ்டாக மாறி விடுவேனோ என்ற சந்தேகம் எனக்கே வந்துவிட்டது. கம்யூனிஸ புத்தகங்கள் கண்ணில் படும் போது என்னால் படிக்காமல் இருக்க முடியவில்லை. அதுவும் 'கிழக்கு பதிப்பகம்' நூல் என்றால் சொல்லவே வேண்டாம். படித்து விட்டு தான் மறு வேலை பார்ப்பேன். சரி... இந்த புத்தகத்திற்கு வருவோம்.



ரஷ்யர்களால் மட்டுமல்ல... இந்த உலகத்தில் இருப்பவர்கள் யாராலும் மறக்க முடியாத ஒருவர் தான் 'லெனின்' அவர்கள். ஜார் ஆட்சியை ஒழித்து, ரஷ்ய மக்களின் உழைப்புக்கு உருவம் கொடுத்தவர். ஜார் அகராதியில் மக்களுக்கு இன்னொரு பெயர் ‘Serfs’; அதாவது அடிமைகள். நிலங்களை வாங்கும் போதும், விற்கும் போதும் அந்த நிலப் பகுதியில் வேலை செய்யும் அடிமைகளையும் சேர்த்தே விலை பேசுவார்கள்.இந்த நிலைமையை மாற்றியவர்.

captialist, socialist என்று பாகுபாடே இல்லாமல் எல்லோருமே தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கிய நபர் தான் லெனின்.

அவரை பற்றி இந்த புத்தகத்தில் சில குறிப்புகளை சொல்லியாக வேண்டும்

1.லெனின் சகோதரர் அலெக்ஸாந்தர் ஸிம்பெர்ஸ்க் பல்கலைக்கழகத்திலிருந்து தங்க மெடல் வாங்கியவர். ஜார் மன்னர் கொலை செய்யும் முயற்சியில் தோல்வி பெற்று தூக்கு தண்டனை பெற்றார். அக்காலக்கட்டத்த்லில் ரஷ்யாவில் பள்ளிக்கூடம் நடத்துவது தேசத் துரோகமாக கருதினர். ஆடுகள், மாடுகள், அடிமைகள் கொல்வதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

2.முதல் சந்திப்பிலேயே லெனினை வசீகரித்தவிட்டார் நதேஷ்தா. தன்னுடைய அழகினால் அல்ல. தொழிளார்கள் மீது கொண்ட மெய்யான கரிதத்தால்.

3.லெனின் தொடங்கிய அமைப்பின் பெயர் தொழிலாளி வர்க்க விடுதலைப் போராட்ட ஐக்கியம் (The League of Struggle for the Emancipation of the Working Class)

4.முதலாளித்துவம் எங்கெல்லாம் உச்சத்தில் இருக்கிறதோ, அங்கெல்லாம் இது போன்ற பொருளாதார வீழ்ச்சி ஏற்படுவதைத் தவிக்க இயலாது என்பதை ஆதாரத்துடன் சுட்டிக் காட்டினார்.(இப்போதைய அமெரிக்க பொருளாதார வீழ்ச்சி இது தான் காரணமோ !!)

5.லெனினை ஏற்றுக் கொண்டவர்கள் போல்ஷ்விக்குகள் என்றும், எதிர்ப்பவர்கள் மென்ஷ்விக்குகள் என்றும் அழைத்தனர். முதல் உலகப் போரை வெளிப்படையாக எதிர்த்தவர் லெனின்.

6.ஜார் ஆட்சிக்கு பிறகு ஸ்டாலின் தலைமையில் செம்படை (Red Army) அமைத்தார் லெனின்.

7.மொத்தம் 15 கோடி ஹெக்டேர் நிலம் பறிமுதல் செய்யப்பட்டு, குடியானவர்களுக்கு பிரித்துக் கொடுத்து நில புரட்சியை ஏற்ப்படுத்தினார்.

8.மார்ச் 21, 1921 புதிய பொருளாதாரத் திட்டம் (New Economic Policy) நடைமுறைக்கு வந்தது.

ஒரு முறை லெனினை, பன்யா கப்லான் (Fanya Kaplan)என்ற பெண் கொலை செய்ய முயற்சிக்க அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இது எல்லாவற்றிக்கும் மேலாக லெனின் மரணத்தின் போது பேசிதாக கீழ் கண்ட வாசகங்கள் எழுதியது மிகவும் அருமை.

லெனின் மரணத்தின் போது……

நண்பர்கள் கருத்து :
லெனின் நினைவுகள் போது. உடல் வேண்டாம்

எதிரிகள் கருத்து :
லெனினின் நினைவுகள் கூட ஆபத்தானவை. அவர் உடல் அதை விட ஆபத்தானது. எரித்துவிடுங்கள்.

மக்கள் கருத்து :
தோழர் லெனினின் நினைவுகள் வேண்டும். தோழர் லெனினும் வேண்டும்.

அடுத்த இரண்டு மாதங்கள் எந்த கம்யூனிஸ புத்தகங்கள் படிக்க கூடாது என்ற கட்டுப்பாட்டில் இருந்த போது... என் கண்ணில் 'மாவோ' புத்தகம் கண்ணில் பட்டது. நல்ல வேளை வாங்க என் கையில் பணமில்லை. கிரடிட் கார்ட் அந்த புத்தகக்கடையில் வாங்க மாட்டார்களாம். தப்பித்தேன். இன்னும் என் விரதத்திற்கு ஒரு மாதம் இருக்கிறது.

மருதன்.
விலை- 70, பக்கங்கள்- 174
கிழக்கு பதிப்பகம்.

Tuesday, September 16, 2008

'கவிஞர்களின் பார்வையில் அண்ணா' நூலுக்கு - படைப்பை அனுப்புங்கள் !

100 கவிஞர்கள் பங்கேற்கும் சிறப்பு கவிதைத் தொகுப்பு.

இனிய கவிஞரே !

பேரறிஞர் அண்ணாவின் புகழுக்கு மகுடம் சூட்டும் நோக்கில் உருவாக்கப்படவுள்ள கவிதை தொகுப்பு இது.

இக்கவிதைத் தொகுப்பில் நீங்கள் இடம் பெற 24 வரிகளுக்குள் மரபு, ஹைக்கூ, நவீனம், புதுக்கவிதை என் ஏதேனும் ஒரு வகையில் தங்களது கவிதையொன்றை தங்களது புகைப்படத்துடன் இணைத்து அனுப்ப வேண்டுகிறோம்.

சோலை பதிப்பகத்தின் சார்பில் இவ்வாண்டு அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள 'பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழாவில் நூல் வழங்கப்படும். விழாவில் கலந்து கொள்ள இயலாதவர்களுக்கு தபாலில் அனுப்பப்படும்.

முக்கிய குறிப்பு.

1.நூலுக்காக அச்சு செலவு, தபால் செலவு, ராப்பர் டிசைன், நூல் வெளியீட்டு நிகழ்ச்சி என இருப்பதால் கவிதை அனுப்புவோர் ஒரு கவிதைக்கு ரூ.100/- ஐயும் இணைத்து அனுப்ப வேண்டுகிறோம்.
2.காசோலை அல்லது வரைவோலையாக அனுப்புவோர் 'Cholai Printers & Graphics' என்ற பெயருக்கும், மணியார்டர் மூலமாக அனுப்புவோ 'Cholai Pathipagam' என்ற பெயருக்கும் அனுப்ப வேண்டுகிறோம்.
3.வெளியூரிலிருந்து காசோலை (அ) வரைவோலையை அனுப்புவோ ரூ.50/- கூடுதலாக அனுப்ப வேண்டுகிறோம்.

அனுப்ப வேண்டிய முகவரி :
சோலை பதிப்பகம்
6, பழனி ஆண்டவர் கோயில் தெரு,
பெரம்பூர், சென்னை - 11.
பேசி : 98405 27782, 3297 1331

தனது பேச்சாற்றலால் ஆட்சியைப் பிடித்த வீரராக...
பெரியாரின் கொள்கையினைப் பின்பற்றிய பகுத்தறிவுத் தீரராக...
திராவிட வரலாற்றில் என்றுமே பேரறிஞராக...
தமிழக வரலாற்றில் வாழும் வரலாறாக...
வாழ்ந்த... வாழ்ந்து கொண்டிருக்கிற...
அண்ணாவை போற்றுவோம்... அருந்தமிழால் அலங்கரிப்போம் !

அன்புடன்,
'சோலை' தமிழினியன்.

சோலை பதிப்பகத்தை பற்றி சிறு குறிப்பு இங்கு நான் சொல்லியாக வேண்டும். காரணம், 100 ரூபாய் கொடுத்து நம் படைப்பை அனுப்புகிறோம், நம்மை ஏமாற்றி விட்டால் என்ன செய்வது என்ற சந்தேகம் உங்களுக்கு வரும். இது வரை அவர்கள் போட்ட தொகுப்பு நூல்களை பற்றி குறிப்பிட விரும்புகிறேன்.

1. வைகறை காற்று - 'சோலை' தமிழினியன்.
2. அன்புள்ள அப்பா (பாகம் - 1) - தன் தந்தை நினைவாக 68 கவிஞர்கள் எழுதிய 68 கவிதைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளது. 'கலைமாமனி' விக்கிரமன் அணிந்துரை எழுதியுள்ளார்.
3.அன்புள்ள அப்பா (பாகம்-2) - நடிகர் எஸ்.வி.சேகர், இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் போன்றவர்கள் முன்னுரை எழுதியுள்ளனர்.
4. காதல் சொல்ல வந்தேன் - காதல் கவிதை தொகுப்பு நூல்.
5. கதை சோலை - 23 பேர்கள் எழுதிய 23 சிறுகதைகள்.

'வைகறை காற்று ' நூலை தவிர மற்ற எல்லா நூல்களும் எழுத்தாளர்களிடம் 100 அல்லது 200 ரூபாய் பெற்றுக் கொண்டு தான் தொகுப்பு நூல்கள் போடப்பட்டது. மிதி செலவுகளை விளம்பரம், உதவித் தொகை, தன் சொந்தப் பணம் என்று செலவு செய்து தொகுப்பு நூல் வெளியிடுகிறார். அந்த நூலுக்கு அணிந்துரையும் பிரபலங்களிடம் இருந்து பெறுகிறார். எழுதிய எழுத்தாளர்களுக்கு சான்றிதழ் வழங்குகிறார். 100 ரூபாயில் நம் படைப்பு பலர் பார்வைக்கு செல்வதால் உங்கள் படைப்பை தாரளமாக அனுப்புங்கள்.

அன்புள்ள அப்பா (பாகம் - 1), காதல் சொல்ல வந்தேன், கதை சோலை - மூன்று நூல்களிலும் நான் எழுதியுள்ளேன் என்பதை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

Monday, September 15, 2008

எழுத்தாளர் சுஜாதாவை பற்றி தெரிந்தால் சொல்லுங்கள் !

சுஜாதா அவர்கள் உயிருடம் இருக்கும் வரை நான் அவர் எழுதிய ஒரு கதைக் கூட படித்ததில்லை. அவர் உயிருடன் இருக்கும் வரை என் கண்ணுக்கு வெறும் சினிமாக்காரராக தான் தெரிந்தார். 'பாய்ஸ்' படத்தின் வசனத்தை கேட்டதும் அவர் எழுத்தை படிக்க வேண்டும் என்ற எண்ணமே தோன்றவில்லை. ஆனால், அவர் இறந்த தினத்தில் வலைப்பதிவர்கள் பலர் இறங்கள் தெரிவித்ததும், பலர் அவர் படைப்பை பற்றி பேசியதும் எனக்கு அவர் ஒரு ஈர்ப்பு ஏற்ப்பட்டது. ஒரு சிலர் பார்ப்பனன் மரணத்திற்கு ஏன் வருந்துகிறீர்கள் என்று எழுதியிருந்தனர். பார்ப்பனியத்தை எதிர்ப்பது தான் பெரியார் வகுத்த பகுத்தறிவு, ஒரு பார்ப்பன்னை தாக்கி பேசி எழுதுவதால் எந்த பயனுமில்லை. பார்ப்பன்னியம் மாறிவிட்டால் பார்ப்பனன் மாறிவிடுவான். சரி... நான் சொல்ல வருவதை விட்டு வேறு எதோ பேச விரும்பவில்லை. நான் சொல்ல விரும்புவது எழுத்தாளர் சுஜாதாவை மட்டும் தான். 'பார்ப்பன’ சுஜாதாவோ அல்லது 'சினிமா' சுஜாதாவோ இல்லை.

என் நண்பர் ஒருவர் 'ஆ...!' மற்றும் 'கற்றதும் பெற்றதும்' நூலை மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். நாவலில் எனக்கு ஆர்வம் இல்லாத்தால் நான் பெரும்பாலும் தமிழ் நாவல் படிப்பதில்லை. அன்றைய தினம் பலர் சுஜாதா புகழ் பாடியதில் 'ஆ..!' நாவலை எடுத்து படித்தேன். ஒரு திரில் திரைப்படத்தை பார்த்த திருப்தி ஏற்ப்பட்டது. 'கற்றதும் பெற்றதும்' நூலில் பல தகவல்களை தேகட்டாமல் கதை எழுதுவது போல் எழுதியிருந்தார். அதன் பிறகு அவர் புத்தகங்களை தேடி பிடித்து படிக்க தொடங்கினேன்.

என் இன்னொரு நண்பர் வீட்டில் சுஜாதாவின் 'விஞ்ஞான சிறுகதைகள்' வைத்திருந்தார். 460 பக்கங்கள் கொண்ட நூலை முழு மூச்சில் நான்கு நாளில் படித்து முடித்தேன். அதில், 'ஆகாயம்' என்ற ஒரு சிறுகதை படித்து முடித்த பிறகு அதை பாதியிலையே விட்டுவிட்டதாக எனக்கு தோன்றியது. ஆனால், அவர் எழுதிய இன்னொரு நூலான 'பாரதி இருந்த வீடு' படிக்கும் போது 'ஆகாயம்' கதையின் முடிவை தெரிந்துக் கொண்டேன். இந்த சிறுகதை வானொலி நாடகமாக அரங்கேறியது என்பது இன்னொரு குறிப்பு. 'பாரதி இருந்த வீடு' நூலை படிக்கும் போது சுஜாதாவின் நாடக்கதை ஆசிரியர் உருவத்தை பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.

அடுத்து கணேஷ், வஸந்த் கதாப்பாத்திரங்கள் கொண்ட 'விபரீதக் கோட்பாடு' (குறுநாவல்) நூல் என்று சுஜாதாவின் படைப்புகளை ரசித்து படித்ததை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். திடீர் ஈடுபாடு வந்த எனக்கே அவர் நூல் மீது இவ்வளவு ஈர்ப்பு வரும் போது அவர் வாசகர்கள் பற்றி கேட்டால் இன்னும் பல செய்திகள் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

அவரை பற்றி தொகுப்பு நூலே போடலாம் என்ற ஆசை வந்துவிட்டது. சுஜாதாவின் சீனியர் வாசகர்கள் இருக்கும் போது திடீர் வாசகன் என்னால் முடியுமா என்ற பயமும் உள்ளது. சுஜாதாவை பற்றி உங்களுக்கு தெரிந்த சில குறிப்புகளை சொல்லுங்கள்.

'நடைபாதை' நூல் வெளியீட்டு விழா !

செப் 14 (நேற்று), ஞாயிறு மாலை 6:00 அளவில் ‘நாடைபாதை’ நூல் வெளியீட்டு விழா இக்சா மையத்தில் (எழும்பூர்) சிறப்பாக தொடங்கியது. தமிழ் தாய் வாழ்த்து பாடலை ஜெகதீஸ்வரன் பாடி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். முதல் நிகழ்ச்சியாக ‘கவிதை போட்டி’ நடைப்பெற்றது. இதில், கவிஞர்.சுப சந்திரசேகர் அவர்கள் வெற்றி பெற்றார். 'கலைமாமனி' விக்கிரமன் அவர்கள் அவருக்கு 100 ரூபாய் பரிசு வழங்கினார்.

கவிதை போட்டி முடிந்தது, விக்கரமன் அவர்கள் 'நடைபாதை' நூலை வெளியிட முதல் பிரதியை ராஜ ரத்தினம் அவர்கள் பெற்றுக் கொண்டார். 'போதிகை' உதயராம், துருவன், ‘இதயகீதம்’ ராமானுஜம் அவர்கள் நூலை பெறு வாழ்த்துரை வழக்கினர். 'முனைவர்' கஸ்தூரி ராஜா அவர்கள் நூலை திறனாய்வு செய்து பேசினார். நிகழ்ச்சியின் சில செலவுகளை ஏற்றுக் கொண்ட 'Bigtop Travels' நிறுவத்திற்கும், நூலை வெளியிட்ட வனிதா பதிபக்கத்திற்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. ‘Bigtop Travels’ சார்பில் உரிமையாளர் ஜெ.ரமேஷ் அவர்களும், 'வனிதா பதிப்பகத்தின்' சார்பில் பேராசிரியர் டாக்டர். பெரியண்ணன் அவர்களும் பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் விக்கிரமன் அவர்கள் எழுதிய இரண்டு நூல்களை எனக்கு பரிசாக அளித்தார்.

நெற்றைய நூல் வெளியீட்டு நிகழ்ச்சி என் வாழ்க்கையில் மறக்க முடியாத பொண்ணான நாளாக கருதுகிறேன்.

Thursday, September 11, 2008

கமான் அப்புசாமி கமான் !

ஜ.ரா. சுந்தரேசம் இயற்பெயர் கொண்ட பாக்கியம் ராமசாமி அவர்கள் குமுதம் பத்திரிக்கையில் 37 ஆண்டுகளாக உதவி ஆசிரியராகவும், துணை ஆசிரியராகவும் பணிபுரிந்துவர். அப்புசாமி - சீதாப்பாட்டி கதாப்பாத்திரங்கள் பெற்றி பேசினாளே எழுதியவர் பாக்கியம் ராமசாமி தான் என்று எல்லோருக்கும் தெரியும். இந்த கதாப்பாத்திரங்களின் நகைச்சுவை அந்த அளவிற்கு பிரபலம்.

தமிழில் நகைச்சுவை கதைகள் பற்றி ஆய்வு செய்ய நினைத்தால், அதில் நிச்சயம் பாக்கியம் ராமசாமி அவர்கள் எழுதிய நூல்கள் இடம் பெற்று இருக்கும். ஒவ்வொரு கதையிலும் அப்புசாமியை வறுத்து எடுப்பதும், சீதாப்பாட்டி ஆங்கில கலந்த தமிழ் பேசுவதும் நமக்கு சிரிப்பு வர வழைக்கிறது. பீமாராவ், கீதாப்பாட்டி, வித்தைக்காரன், பட்லர், உஸ்காத்கான் என்று ஒவ்வொரு கதைகளிலும் ஒரு காதாப்பாத்திரங்களை அறிமுகப்படுத்தி படிப்பவர்களை சிரிக்க வைக்கிறார்.

இந்த நூலில் எனக்கு மிக பிடித்த நகச்சுவை கதை அப்புசாமி வித்தைக்காரனிடம் மாட்டி கொண்டு தவிக்கும் கதை தான். வித்தைக்காரன் தன் கையில் இருக்கும் காகிதத்தை அப்புசாமி கொண்டு பதில் சொல்ல வைப்பது படு ஜோரான காமெடி. இன்னொரு கதையில், இசை கச்சேரியில் அப்புசாமி ஏப்பம் விடும் போது இசை கலைஞர் உஸ்காத்கான் கீழ் ஸ்தாயியை தொட்டுக்காட்டி பாட உதவியதாக கூறுவது நகைச்சுவை ப்ளஸ்.

பட்லருடன் ஒப்பந்த காகிதத்தில் மாட்டுக் கொண்டு அப்புசாமி தவிக்கும் போதும், அதை சீதாப்பாட்டி தன் புத்திசாலி தனத்தால் மீட்பதும் சூப்பர். வெள்ளித்திரையில் வடிவேலு மாட்டிக் கொள்வது போல் அப்புசாமியும் அடிக்கடி மாட்டிக் கொள்கிறார். ஆனால், அப்புசாமி அடிவாங்குவதற்கு முன் சீதாப்பாட்டி காப்பாற்றி விடுகிறார்.

மேலும், அப்புசாமி நகைச்சுவை கதைகளை பற்றி தெரிந்துக் கொள்ள www.appusami.com இணையத்தளத்தை பாருங்கள்.

பாக்கியம் ராமசாமி,
விலை.45, பக்கங்கள் : 186
பூம்புகார் பதிப்பகம், சென்னை - 108

Tuesday, September 9, 2008

செப்.14 'நடைபாதை' நூல் வெளியீட்டு விழா

அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் வரும் ஞாயிறு, செப்டம்பர் 14 ஆம் தேதி நான் எழுதிய 'நடைபாதை' (சிறுகதைகள்) நூல் வெளியீட்டு விழா இக்சா மையம்,(மியூசியம் எதிரில்),எழும்பூர் இடத்தில் நடைப்பெறுகிறது. 'கலைமாமனி' விக்கிரமன் அவர்கள் வெளியீட, 'அரிமா' கே.பி.பத்மநாபன் அவர்கள் பெற்றுக் கொள்கிறார். 'பொதிகை' புகழ் உதயம்ராம், கவிஞர். சுடர் முருகையா, 'முனைவர்' கஸ்தூரி ராஜா அவர்கள் நிகழ்ச்சியில் பங்கு பெறுகிறார்கள்.

வலைப்பதிவர்கள் வந்து நிகழ்ச்சியை சிறப்பித்துக் கொடுக்கும் படி வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

உங்கள் வருகையை எதிர்பார்க்கும்,

அன்புடன்,
குகன்.

Monday, September 8, 2008

மோதிப் பார் ! : ஹியூகோ சாவேஸ்

இந்த நூலை படிக்கும் வரை ஹியூகோ சாவேஸ் யார் என்று கூட எனக்கு தெரியாது. ஆனால், இப்போது இவருக்கு ஒரு ரசிகர் மன்றமே அரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன். இந்த நூலை படித்த பிறகு சாவேஸ் பற்றி நான் தெரிந்துக் கொண்ட விஷயங்கள் :- எந்த வித புரட்சியிலும் இறங்காமல், கெரில்லாத் தாக்குதல் நடத்தாமல் தேர்தல் மூலமாக தான் ஆட்சியை பிடித்தார். பின்தங்கியிருந்த தனது நாட்டை வளரும் நாடாக மாற்றியவர். இருப்பத்தோராம் நூற்றாண்டில் புரட்சிக்கு வேறு கோணத்தை கொடுத்தவர்.




இவர் துணிச்சலை பற்றி இரண்டு சம்பவங்களை சொல்லியாக வேண்டும்.
1.ஐ.நா சபையில் பூஷ்யை “சாத்தான்” என்று தைரியமாக விமர்சித்தவர் ஹியூகோ சாவேஸ் அவர்கள். ஐ.நா.வை பேசாமல் ஜெரூசலமுக்கோ அல்லது வேறு ஒரு வளரும் நாட்டுக்கோ மாற்றிவடலாம் என்று யோசனை கூறியவர்.
2."மூன்று வேளை உணவு கிடைக்காமல் எத்தனையோ அமெரிக்கர்கள் சிரமப்படு கொண்டு இருக்கிறார்கள். மருத்துவ வசதி எல்லோருக்கும் கிடைக்கவில்லை. எத்தனையோ எழைகள் வீடில்லாமல் அலைந்துக் கொண்டு இருக்கிறார்கள். இத்தனை இருக்கு அமெரிக்க 500 மில்லியன் டாலர் பணத்தை ஆயுதம் வாங்க செலவு செய்கின்றது. இந்த பணத்தை மிச்சம் பிடித்தால் அமெரிக்காவில் உள்ள ஏழைகள் மட்டுமல்ல, ஆப்ரிக்காவில் உள்ள ஏழை மக்கள் மறுவாழ்வு பெறுவார்கள்" ஒரு பேட்டியின் போது கூறினார்.

இந்த புத்தகத்தை எடுத்து படித்த முக்கிய காரணம், இதன் மேலட்டையில் காஸ்ரோவுக்கு அடுத்த லத்தின் அமெரிக்க தலைவர் என்று குறிப்பிட்டதால் தான். இவர்கள் இருவரும் சேர்ந்து ரேடியோ நிகழ்ச்சியில் ஒன்றாக பாடினார் என்று படிக்கும் லத்தின் அமெரிக்கர்களின் ஒற்றுமையை காட்டுகிறது. லத்தின் அமெரிக்கா நாடுகளில் இருக்கும் வளங்களை உட்கார்ந்து நின்று அழித்த பெருமை அமெரிக்காவை எதிர்க்கும் இன்னொரு நாயகன் தான் ஹியூகோ சாவேஸ் .

ஒரு நாடு வளர்கிறது என்றால் அமெரிக்கர்களுக்கு வயறு பத்திக் கொண்டு எரியும். காஸ்ட்ரோவுக்கு பிறகு ஹியூகோ சாவேஸ் விஷயத்தில் அமெரிக்காவுக்கு இரத்த கோதிப்பே வந்திருக்கும் என்று நினைக்கிறேன். தன் உள்நாட்டு கலவரத்திற்கு அமெரிக்கா தான் காரணம் என்று ஆதாரத்துடன் நிருப்பித்துள்ளார் (பூஷ் அரசு சாவேஸ் அரசை கவிழ்க்க சி.ஐ.ஏ ஏஜென்டுக்களான எலியட் ஆப்ரம்ஸ் (Eliot Abrams) மற்றும் ஓட்டோ ரிச் (Otto Reich) நியமித்துள்ளனர்). ஹியூகோ சாவேஸ் கொல்ல யோசனை சொன்னவர் ரிவரெண்ட் பாட் ராபர்ட்ஸன் (அமெரிக்க பாதரியார்)

இவரை பற்றி சுவையான சில தகவல்கள் :

1.ஜூலை 24,1983, பொலிவரின் 200வது பிறந்த நாளைக் கௌரவிக்கும் வகையில் MBR 200 (Bolivar Revoltionary Army 200) தொடங்கினார்.
2.La Causa Radical சுருக்கமாக Causa R (1971ல் தொடங்கப்பட்ட இயக்கம்) சாவேஸ் இயக்கத்துடன் இணைந்தது. ஆனால், புரட்சியின் போது இறுதி கட்டத்தின் ஓதுங்கி கொண்டனர். மனம் தளராமல் புரட்சியில் இறங்கி இரண்டு வருடம் சிறை சென்றார்.
3.அரசாங்கம் சந்திக்கும் முதல் பெரும் செலவு இராணுவத்துறை தான். ஆனால், சாவேஸ் தனது இராணுவ வீரர்கள் நாட்டு வளர்ச்சிக்காக பயன் படுத்தினார். மீன் பிடிக்கவும், வீட்டை கட்டிக் கொடுக்கவும், பள்ளிப் பாடம் எடுக்கவும் இராணுவ வீரர்கள் உதவியாக இருந்தனர்.
4.நில சீர்திருத்த சட்டத்தால் 21 நபர்கள் 612289 ஹேக்டேர் நிலத்தை சுருட்டி இருப்பதை கண்டு பிடித்து, அந்த இடங்களை எல்லாம் அரசுக்கு சொந்தமாக்கினார்.
5.வளைகுடா போருக்கு பிறகு சதாமைச் சந்தித்த ஒரே தலைவர் இவர் தான். அவர் வேண்டுக்கொள்ளை ஏற்று OPEC அமைப்பு 25 டாலர் விலையில் இருந்து 60 டாலராக உயர்த்தியது.
6.காஸ்ட்ரோவை முன்னோடியாக கொண்டு ஆட்சி செய்தாலும் இவர் கம்யூனிஸ்ட் இல்லை.
7."மீனுக்கு தண்ணீர் ; இராணுவத்துக்கு மக்கள் " – மாவோ வழி நடப்பவர்.

தன் நாட்டையும் கவனித்துக் கொண்டு அமெரிக்கவையும் சமாளிக்கும் ஒரு போராளியின் வாழ்க்கையை மருதன் அவர்கள் நன்றாக எழுதியுள்ளார். ஒவ்வொரு அரசியல்வாதிகளும் ஹியூகோ சாவேஸ் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும்.


மருதன் : பக்கங்கள் :126
விலை.60. கிழக்கு பதிப்பகம்

 
Website Hit Counter
வந்தவர்கள்