Thursday, June 5, 2008

சோலை பதிப்பகம் : தொகுப்பு நூலில் ஒரு அம்பானி

சென்ற ஞாயிறுக்கிழமை (மே 25,2008) அன்று சோலை பதிப்பகத்தின் மூன்று நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடந்தது. விழா தலைவராக 'கலைமாமனி' விக்கரமன் அவர்கள் கலந்துக் கொண்டார். சிறப்பு விருந்தினராக திரைப்பட இயக்குனர் எம்.எஸ். அன்பு, 'கவிஞர்' சுடர் முருகையா மற்றும் பொதிகை நிகழ்ச்சி 'மாறுவோம் மாற்றுவோம்' உதயராம் கலந்துக் கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

வெளியிட்ட மூன்று தொகுப்பு நூல்களின் தலைப்பு :- அன்புள்ள அப்பா...( இரண்டாம் பாகம்) - கவிதை தொகுப்பு, காதல் சொல்ல வந்தேன் - கவிதை தொகுப்பு மற்றும் கதைசோலை - சிறுகதை தொகுப்பு. மூன்று தொகுப்பு நூல்களில் எழுதிய எழுத்தாளர்களுக்கு சான்றிதழ்களும், நினைவு பரிசும் 'கலைமாமனி' விக்கிரமன் அவர்கள் வழங்கினார்.

இதற்கு முன், 'சோலை பதிப்பகம்' இரண்டு நூல்கள் மட்டுமே வெளியிட்டனர். ஒன்று, 'சோலை' தமிழினியன் எழுதிய 'வைகறை காற்று'. இன்னொன்று 'அன்புள்ள அப்பா' - முதல் பாகம்(கவிதை தொகுப்பு).

இன்று பல பதிப்பகங்கள் வந்து விட்ட நிலையில் DTP வேலை செய்யும் தமிழினியன் அடியெடுத்து வைத்திருப்பது ஒரு வியப்பான விஷயம். இவருடைய வியாபாரம் சிந்தனையும் மிகவும் வித்தியாசமாக உள்ளது. இது வரை வெளியிட்ட நான்கு தொகுப்பு நூல்களிலும் எழுத்தாளர்களிடம் இருந்து பேப்பர், ராப்பர் செலவுக்கு மட்டும் 100 அல்லது 200 ரூபாய் மட்டும் வாங்கியுள்ளார். ஒரு தொகுப்பு நூலில் 80 எழுத்தாளர்கள் இடம் பெறுவதாக இருந்தால் எப்படியும் 8000 ரூபாய் சேர்ந்து விடும். மிதி பணத்திற்கு, தனக்கு இருக்கும் தொடர்புகளிடம் இருந்து விளம்பரம் வாங்கி கொண்டார். தன் கையில் இருந்து பணம் செலவு செய்யாமல் தொகுப்பு நூல்களை வெளியிட்டுள்ளார். விழாவில் விற்பனையான பணத்தில் இருந்து மூன்று குழந்தைகளுக்கு படிக்க நன்கொடை கொடுத்துள்ளார். அவரை பொருத்த வரை 'சோலை பதிப்பகம்' எழுத்தாளர்கள் மத்தியில் பிரபலமாக வேண்டும். தொகுப்பு நூலில் பணம் சம்பாதிக்கவும் வில்லை. தன் பணத்தை செலவு செய்ய விரும்பவுமில்லை.

தமிழினியன் சொன்ன தேதிக்குள் அவர் புத்தகத்தை வெளியிட்டு விடுவார். அது மட்டுமில்லாமல், ஒரு எழுத்தாளரின் படைப்பு 80 பேர்களிடம் சென்று அடைக்கிறது. 15 முதல் 20 ஆயிரம் வரை பணம் செலவு செய்து நூல் போடுவதை விட, 100 அல்லது 200 ரூபாய்யில் தொகுப்பு நூலில் இரண்டு பக்கம் வந்தாவது எவ்வளவோ பர்வாயில்லை. நூல் வெளியிட்டு விழா, பிரபலங்களை அழைப்பது போன்ற செலவுகள் எல்லாம் தேவைப்படாது. அதனால், பெரும்பாலான எழுத்தாளர்கள் தொகுப்பு நூலில் எழுதிகிறார்கள்.

தமிழினியன் தொகுப்பு நூல் போடுகிறார் என்றால் அவரை நம்பி எழுத்தாளர்கள் பணம் கொடுக்கிறார்கள். அடுத்து, நான்கு தொகுப்பு நூல்கள் போட போவதாக அவர் கூறியுள்ளார். அவரின் அடுத்த முயற்சியும் வெற்றி பெற வாழ்த்துக்கள் !!

உங்கள் படைப்புகளும் தொகுப்பு நூல்களில் இடம் பெற 98405 27782 என்ற எண்ணுக்கு தொடர்புக் கொள்ளுங்கள்.

சோலை பதிப்பகம்
6, பழனியாண்டவர் கோயில் தெரு,
பெரம்பூரி, சென்னை - 11

No comments:

 
Website Hit Counter
வந்தவர்கள்