Thursday, September 11, 2008

கமான் அப்புசாமி கமான் !

ஜ.ரா. சுந்தரேசம் இயற்பெயர் கொண்ட பாக்கியம் ராமசாமி அவர்கள் குமுதம் பத்திரிக்கையில் 37 ஆண்டுகளாக உதவி ஆசிரியராகவும், துணை ஆசிரியராகவும் பணிபுரிந்துவர். அப்புசாமி - சீதாப்பாட்டி கதாப்பாத்திரங்கள் பெற்றி பேசினாளே எழுதியவர் பாக்கியம் ராமசாமி தான் என்று எல்லோருக்கும் தெரியும். இந்த கதாப்பாத்திரங்களின் நகைச்சுவை அந்த அளவிற்கு பிரபலம்.

தமிழில் நகைச்சுவை கதைகள் பற்றி ஆய்வு செய்ய நினைத்தால், அதில் நிச்சயம் பாக்கியம் ராமசாமி அவர்கள் எழுதிய நூல்கள் இடம் பெற்று இருக்கும். ஒவ்வொரு கதையிலும் அப்புசாமியை வறுத்து எடுப்பதும், சீதாப்பாட்டி ஆங்கில கலந்த தமிழ் பேசுவதும் நமக்கு சிரிப்பு வர வழைக்கிறது. பீமாராவ், கீதாப்பாட்டி, வித்தைக்காரன், பட்லர், உஸ்காத்கான் என்று ஒவ்வொரு கதைகளிலும் ஒரு காதாப்பாத்திரங்களை அறிமுகப்படுத்தி படிப்பவர்களை சிரிக்க வைக்கிறார்.

இந்த நூலில் எனக்கு மிக பிடித்த நகச்சுவை கதை அப்புசாமி வித்தைக்காரனிடம் மாட்டி கொண்டு தவிக்கும் கதை தான். வித்தைக்காரன் தன் கையில் இருக்கும் காகிதத்தை அப்புசாமி கொண்டு பதில் சொல்ல வைப்பது படு ஜோரான காமெடி. இன்னொரு கதையில், இசை கச்சேரியில் அப்புசாமி ஏப்பம் விடும் போது இசை கலைஞர் உஸ்காத்கான் கீழ் ஸ்தாயியை தொட்டுக்காட்டி பாட உதவியதாக கூறுவது நகைச்சுவை ப்ளஸ்.

பட்லருடன் ஒப்பந்த காகிதத்தில் மாட்டுக் கொண்டு அப்புசாமி தவிக்கும் போதும், அதை சீதாப்பாட்டி தன் புத்திசாலி தனத்தால் மீட்பதும் சூப்பர். வெள்ளித்திரையில் வடிவேலு மாட்டிக் கொள்வது போல் அப்புசாமியும் அடிக்கடி மாட்டிக் கொள்கிறார். ஆனால், அப்புசாமி அடிவாங்குவதற்கு முன் சீதாப்பாட்டி காப்பாற்றி விடுகிறார்.

மேலும், அப்புசாமி நகைச்சுவை கதைகளை பற்றி தெரிந்துக் கொள்ள www.appusami.com இணையத்தளத்தை பாருங்கள்.

பாக்கியம் ராமசாமி,
விலை.45, பக்கங்கள் : 186
பூம்புகார் பதிப்பகம், சென்னை - 108

No comments:

 
Website Hit Counter
வந்தவர்கள்