Tuesday, September 16, 2008

'கவிஞர்களின் பார்வையில் அண்ணா' நூலுக்கு - படைப்பை அனுப்புங்கள் !

100 கவிஞர்கள் பங்கேற்கும் சிறப்பு கவிதைத் தொகுப்பு.

இனிய கவிஞரே !

பேரறிஞர் அண்ணாவின் புகழுக்கு மகுடம் சூட்டும் நோக்கில் உருவாக்கப்படவுள்ள கவிதை தொகுப்பு இது.

இக்கவிதைத் தொகுப்பில் நீங்கள் இடம் பெற 24 வரிகளுக்குள் மரபு, ஹைக்கூ, நவீனம், புதுக்கவிதை என் ஏதேனும் ஒரு வகையில் தங்களது கவிதையொன்றை தங்களது புகைப்படத்துடன் இணைத்து அனுப்ப வேண்டுகிறோம்.

சோலை பதிப்பகத்தின் சார்பில் இவ்வாண்டு அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள 'பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழாவில் நூல் வழங்கப்படும். விழாவில் கலந்து கொள்ள இயலாதவர்களுக்கு தபாலில் அனுப்பப்படும்.

முக்கிய குறிப்பு.

1.நூலுக்காக அச்சு செலவு, தபால் செலவு, ராப்பர் டிசைன், நூல் வெளியீட்டு நிகழ்ச்சி என இருப்பதால் கவிதை அனுப்புவோர் ஒரு கவிதைக்கு ரூ.100/- ஐயும் இணைத்து அனுப்ப வேண்டுகிறோம்.
2.காசோலை அல்லது வரைவோலையாக அனுப்புவோர் 'Cholai Printers & Graphics' என்ற பெயருக்கும், மணியார்டர் மூலமாக அனுப்புவோ 'Cholai Pathipagam' என்ற பெயருக்கும் அனுப்ப வேண்டுகிறோம்.
3.வெளியூரிலிருந்து காசோலை (அ) வரைவோலையை அனுப்புவோ ரூ.50/- கூடுதலாக அனுப்ப வேண்டுகிறோம்.

அனுப்ப வேண்டிய முகவரி :
சோலை பதிப்பகம்
6, பழனி ஆண்டவர் கோயில் தெரு,
பெரம்பூர், சென்னை - 11.
பேசி : 98405 27782, 3297 1331

தனது பேச்சாற்றலால் ஆட்சியைப் பிடித்த வீரராக...
பெரியாரின் கொள்கையினைப் பின்பற்றிய பகுத்தறிவுத் தீரராக...
திராவிட வரலாற்றில் என்றுமே பேரறிஞராக...
தமிழக வரலாற்றில் வாழும் வரலாறாக...
வாழ்ந்த... வாழ்ந்து கொண்டிருக்கிற...
அண்ணாவை போற்றுவோம்... அருந்தமிழால் அலங்கரிப்போம் !

அன்புடன்,
'சோலை' தமிழினியன்.

சோலை பதிப்பகத்தை பற்றி சிறு குறிப்பு இங்கு நான் சொல்லியாக வேண்டும். காரணம், 100 ரூபாய் கொடுத்து நம் படைப்பை அனுப்புகிறோம், நம்மை ஏமாற்றி விட்டால் என்ன செய்வது என்ற சந்தேகம் உங்களுக்கு வரும். இது வரை அவர்கள் போட்ட தொகுப்பு நூல்களை பற்றி குறிப்பிட விரும்புகிறேன்.

1. வைகறை காற்று - 'சோலை' தமிழினியன்.
2. அன்புள்ள அப்பா (பாகம் - 1) - தன் தந்தை நினைவாக 68 கவிஞர்கள் எழுதிய 68 கவிதைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளது. 'கலைமாமனி' விக்கிரமன் அணிந்துரை எழுதியுள்ளார்.
3.அன்புள்ள அப்பா (பாகம்-2) - நடிகர் எஸ்.வி.சேகர், இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் போன்றவர்கள் முன்னுரை எழுதியுள்ளனர்.
4. காதல் சொல்ல வந்தேன் - காதல் கவிதை தொகுப்பு நூல்.
5. கதை சோலை - 23 பேர்கள் எழுதிய 23 சிறுகதைகள்.

'வைகறை காற்று ' நூலை தவிர மற்ற எல்லா நூல்களும் எழுத்தாளர்களிடம் 100 அல்லது 200 ரூபாய் பெற்றுக் கொண்டு தான் தொகுப்பு நூல்கள் போடப்பட்டது. மிதி செலவுகளை விளம்பரம், உதவித் தொகை, தன் சொந்தப் பணம் என்று செலவு செய்து தொகுப்பு நூல் வெளியிடுகிறார். அந்த நூலுக்கு அணிந்துரையும் பிரபலங்களிடம் இருந்து பெறுகிறார். எழுதிய எழுத்தாளர்களுக்கு சான்றிதழ் வழங்குகிறார். 100 ரூபாயில் நம் படைப்பு பலர் பார்வைக்கு செல்வதால் உங்கள் படைப்பை தாரளமாக அனுப்புங்கள்.

அன்புள்ள அப்பா (பாகம் - 1), காதல் சொல்ல வந்தேன், கதை சோலை - மூன்று நூல்களிலும் நான் எழுதியுள்ளேன் என்பதை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

No comments:

 
Website Hit Counter
வந்தவர்கள்