Monday, March 24, 2008

முசோலினி


வெ.சாமிநாத சர்மா
விலை.60., ராமையயா பதிப்பகம்

இரண்டாம் உலகப்போரின் நாயகன் ஹிட்லரின் தோழனாக இருந்த முசோலினியின் வாழ்க்கை சரித்திரம். இந்த நூலை படித்து முடிக்கும் போது முசோலினி வாழ்க்கையை பற்றிய முதல் பாகமாக இருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது. காரணம், முசோலினி தன் சொந்த மருமகனை கொன்றது, இரண்டாம் உலகப்போரில் ஹிட்லருடன் கூட்டனி செர்ந்தது, ஹிட்லர் இராணுவத்தால் காப்பற்றப்பட்டு ஜெர்மனிக்கு கொண்டு செல்லுதல் போன்ற செய்திகள் எல்லாம் இந்த நூலில் இல்லை. இவ்வளவு ஏன் ? முசோலினி உடல் மக்கள் பார்வைக்கு தொங்கவிட்ட செய்தி கூட இல்லை. முசோலினி வாழ்க்கையில் நடந்த முக்கியமான நிகழ்வுகள் இல்லாமல் முசோலினி வாழ்க்கை சரித்திரம் உள்ளது.

இந்த நூல் முசோலினி ஆரம்ப வாழ்க்கையை மட்டுமே பிரதிபலிக்கிறது. முசோலினியின் படிப்பு, ஸுசர்லாந்தில் வாழ்க்கை, பத்திரிக்கை ஆசிரியர் பொருப்பு, இறுதியாக இத்தாலி சர்வாதிகாரத்தை அடைவது வரை முசோலினி பற்றிய குறிப்புகள் உள்ளன.

முசோலினி பற்றி முழுமையாக தெரிந்துக் கொள்ள நினைப்பவர்களுக்கு இந்த நூல் உதவதாது. ஒரு வேளை இந்த நூல் முதல் பாகம் என்றால் ஏற்றுக் கொள்ளலாம். இதில் முகம் சுழிக்க வைக்கும் விஷயம் என்னவென்றால் சர்வாதிகாரி முசோலினியை கதாநாயகம் அளவிற்கு அலங்கரித்து எழுதியது தான். முசோலினிக்காக வக்காலத்து வாங்குவது போல் தான் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. இந்த நூலி சுவையானதை பற்றி சொல்ல வேண்டும் என்றால் முசோலினி வேளையில்லாமல் கஷ்டப்பட்டு திரிவதை அழகிய கதை படிப்பது போல் இருந்தது. மற்றப்படி பெரிதாக சொல்வதற்கு இந்த நூலில் எதுவுமில்லை.

No comments:

 
Website Hit Counter
வந்தவர்கள்