Monday, March 24, 2008

6 (சிக்ஸ்) சிக்மா


விலை.70. சிபி கே. சாலமன்.
கிழக்கு பதிப்பகம்

இன்று வெற்றி பெற்ற பல நிறுவனங்களின் மந்திரச் சொல் - சிக்ஸ் சிக்மா. ‘பிரம்மாண்ட வெற்றியின் ஃபார்முலா சிக்ஸ் சிக்மா’ என்று முன் அட்டையிலும், ‘பாடப்புத்தகம் போல் பாட்டிக்காமல், ரசித்துப் படித்து பயன் படுத்திக் கொள்ளலாம்’ என்று பின் அட்டையிலும் உள்ளது.

முதல் முன்று, நான்கு அத்தியாயத்தில் பள்ளியில் படித்த Standard Deviation (SD), Mean, Mode பற்றி எல்லாம் விளக்குகிறார். அதன் பின் Operation Researchயில் படித்த Chi-Square பணியில் சில டெபில்களும்,Sampling போனறவற்றை குறிப்பிடும் போது ஆங்கிலத்தில் படித்தை தமிழில் படிக்கும் உணர்வு தான் ஏற்பட்டது. இந்த விஷயங்கள் தெரியாதவர்களுக்கு தெளிவாக சொல்லியிருக்கிறார். தெரிந்தவர்கள் படித்தால் தொய்வாக தான் இருக்கும்.

இந்த நூலில் செய்தி சொல்லும் அளவிற்கு கதைகளும் அதிகம். ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்தில் சொல்லும் கதைகளும், செய்தி துணுக்குகளும் மிகவும் சுவாரஸ்யம். இவை எல்லாம் ரசிக்கக் கூடியதாக இருந்தாலும் புத்தகம் படித்து முடிக்கும் போது பாதி தான் படித்தது போன்ற உணர்வு. சிக்ஸ் சிக்மா பற்றி தெரிந்துக் கொள்வதற்காக வாங்கியதில் முழு திருப்தியில்லை.

'பெல்ட் பேர்வழிகள்' அத்தியாயத்தில் கிரீன் பெல்ட், பிளாக் பெல்ட், மாஸ்டர் பிளாக் பெல்ட், சாம்பியன்ஸ் பற்றி படம் போட்டு தெளிவாக விளக்கியிருக்கிறார். DMAIC அத்தியாயத்தில் ஒவ்வொரு பிரிவையும் உதாரணங்களோடு எல்லோரும் புரியும் வகையில் கூறியிருக்கிறார் சாலமன். Risk Plan பற்றி விளக்கும் போது சொல்லும் கதையும், துணுக்கும் மிக அருமை.

ஒரு சில தமிழ் திரைப்படங்கள் முதல் பாதி மெதுவாக நகர்த்திருந்தாலும், இரண்டாவது பாதியில் வேகமாக கதையை நகர்த்தி வெற்றி பெற்றுவிடும். அதே போல் இந்த நூலில் முதல் பாதியில் தெரிந்ததை படிக்கிறோம் என்ற உணர்வு வந்தாலும், இரண்டாவது பாதியில் சிக்ஸ் சிக்மா விஷயங்களை எளிய முறையில் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

சிக்ஸ் சிக்மா பற்றி எல்லா செய்திகளும் தர படவில்லை என்று இறுதி பகுதியில் ஆசிரியரே கூறுகிறார். மேலும் சிக்ஸ் சிக்மா பற்றி தெரிந்துக் கொள்ள சில இணையத்தளங்கள் விபரங்களையும் கொடுத்திருக்கிறார். சிக்ஸ் சிக்மா பற்றி அறிமுகமாக தான் இந்த நூல் இருக்கிறது. முழுமையான நூல் இல்லை. எனினும் சிக்ஸ் சிக்மா பற்றி பல ஆங்கில நூல்கள் வரும் வேளையில் தமிழ் வாசகர்களுக்காக இந்த நூலை எழுதியத்திற்கு சிபி கே. சாலமன் அவர்களை பாராட்ட வேண்டும்.

No comments:

 
Website Hit Counter
வந்தவர்கள்