Wednesday, July 2, 2008

வரலாறு என்றால் என்ன ?


அ.கருணாந்தன்
விலை.5. பக்கங்கள்: 32
பாரதி புத்தகலாயம்


2007ல் புத்தக கண்காட்சியில் இந்த நூலை வாங்கினேன். சிறிய நூல் என்றாலும், ஒன்றரை வருடம் கலித்து தான் இந்த நூலை படிக்க இப்போது நேரம் கிடைத்தது. புத்தகத்தின் வாங்க 'வரலாறு' இந்ததால் இந்த நூலை வாங்க தூண்டியது. இதில் கூறும் விஷயங்களை படிக்கும் போது அதன் விலை மிகவும் குறைவு தான்.

வரலாறு புதினம் எழுதும் எழுத்தாளர்கள் இந்த நூலை படிக்கும் படித்தால் நிச்சயம் மன உறுத்தல் எற்படும். " நாம் வரலாற்றில் கதாநாயகர்களையும், கதாநாயகிகளையும் பிரமிக்க வைக்கும் அவர்களது சாகசங்களையும் தேடவில்லை. மாறாக உண்மையைத் தேடுகிறோம்" என்று ஒரு இடத்தில் கூறுகிறார். வரலாறு நூல் எழுதுபவர்கள் தங்கள் கதாநாயகர்களின் வெற்றியை மட்டும் குறிப்பிடுகிறார்கள், அவர்களின் தோல்வியை மறைக்கிறார்கள். இன்னொரு இடத்தில் "எந்த கல்வெட்டும் அதை வெளியிட்ட மன்னனின் தோல்விகளையும் தவறுகளையும் பட்டியலிடுவதில்லை" . கல்வெட்டில் கூட சில வரலாறு உண்மைகள் மறைக்க படுவதை துணிச்சலாக சொல்லியிருக்கிறார்.
இதை சொல்லும் எழுத்தாளரின் துணிச்சலை பாராட்டாமல் இருக்க முடியாது.

தற்பெருமை நேர்மையான வரலாறாவதில்லை என்பது உண்மை. அதை நூலின் ஆசிரியராக தெளிவாக கூறுகிறார்.

இந்த நூலின் குறை என்றால் சிறிய நூல் என்பது தான். மிக பெரிய விஷ்யத்தை நான்கு வரியில் சொல்ல முயற்சிக்கிறார். உதாரணத்திற்கு... ஜான்ஸி ராணி ஒய்வூதியத்திற்காக தான் ஆங்கிலேயரை எதிர்த்தார் என்று கூறுகிறார். அவரது வீரம் போற்றுதல் குரியது. ஆனால், அவரது தேசபக்தி, தேசீய நோக்கு கேள்வி கேள்விக்குரியது. சொல்ல வேண்டிய விஷயத்தை சுருக்கமாக சொல்லியிருக்கிறார். இன்னும் சில இடங்களில் ஆரிய்ச் அராஞ்களையும் எழுயுள்ளார். ஆனால், 300, 400 பக்கங்கள் சொல்ல வேண்டிய விஷ்யத்தை 32 பக்கங்கள் சொல்லியிருக்கிறார் என்பது தன் சிறு வருத்தம். இதே நூலை அதிக பக்கங்கள் கொண்டு இன்னும் விளக்கி சொல்ல வேண்டும் என்ற வேண்டுக்கோள்ளை ஆசிரியருக்கு விடுப்போம்.

1 comment:

sankar said...

hello i see u r blog very nice see my blog tcln.blogspot.com click ads only

 
Website Hit Counter
வந்தவர்கள்