Monday, August 25, 2008

என் நாடு, என் மக்கள், உன் ரத்தம் !

ஜி.எஸ்.எஸ், பக்கங்கள் - 120
தங்கதாமரை பதிப்பகம்,
அடையாறு, சென்னை - 20.

கன்னிமரா நூலகத்தில் எடுத்த நூல்களில் முதலில் இருந்து இறுதி வரைக்கும் படித்த நூல் இது தான் (பெரும்பாலான நூல்கள் பாதியிலேயே அலுப்பு தட்டிவிடுகிறது).’கல்கி’யில் காஷ்மீர் குறித்து குறுந்தொடராக எழுதியதை மேலும் சில பகுதிகளை சேர்த்து நூலாக எழுதியுள்ளார் ஜி.எஸ்.எஸ். அவர்கள். இதை படிக்கும் போது காஷ்மீர் பற்றி தெரியாத உண்மைகளையும், தற்போது உள்ள நிலவரங்களையும் மிக சிறப்பாக எடுத்து காட்டியுள்ளார்.

இந்த குறிப்பிட்டு சொல்ல வேண்டிய வரிகள்...

1.'காஸ்யபுரம்; என்பதை தான் காலப்போக்கில் 'காஷ்மீர்; என்று மாறியதாக கூறுகிறார். சமஸ்கிருதத்தில் 'காஷ்மீர்' என்பதன் அர்த்தம் நீரை வெளியேற்றுதல் போன்ற துணுக்கு செய்திகள் சுவையாக உள்ளன.

2.ஜம்மு காஷ்மீர் சட்டங்களை பற்றி சொல்லும் போது அதிர்ச்சியாகவும், வெடிக்கையாகவும் உள்ளது. இந்தியாவை பொருத்தவரையில் 'காஷ்மீர்' ஒரு ஸ்பெஷல் மாநிலம். இந்திய தேசிய கோடியை எரித்தால் கூட தண்டனை இல்லையாம். காரணம், அவர்கள் சட்டம் தெளிவாக கூறிப்பிடவில்லை.

3.பல விஷங்களில் தனிச்சையாக முடிவு எடுக்க காஷ்மீர் அரசு உரிமை உண்டு. அங்கு வியாபாரம் செய்பவர்களுக்கு ஐந்து வருடத்திற்கு வரி சலுகை உண்டு. வெளிமாநிலங்களில் இருப்பவர்கள் இங்கு நிலம் வாங்க முடியாது. உயிருக்கு உத்திரவாதம் இல்லாத ஊரில் என்ன சலுகை கொடுத்தாலும் யார் தான் வருவார்கள்.

4.600 கோடி ரூபாய் வருமானம் வரும் காஷ்மீரில் 7000 கோடி நிதியை இந்தியா காஷ்மீருக்கு அளித்து வருகிறது. இந்த பணமும் அவர்களுக்கு போதவில்லை என்பது தான் வருத்தம்.

5.வாரிசு அரசியல் கூடாது என்று போராடிய ஷேக் அப்துல்லாவின் மகன் ஃபரு அப்துல்லாவும், பேரன் உமர் அப்துல்லா காஷ்மீர் அரசியலில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்று சுச்சகமாக எழுதியுள்ளார். (நேரு பரம்பரைக்கு அடுத்து அப்துல்லாவின் பரம்பரை வாரிசு அரசியலில் இரண்டாவது இடம் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.)

6.லால் பகதூர் சாஸ்திரியின் மர்மான மரணத்தை இந்திய அமைச்சர்கள் அலட்சிய படுத்தியதை ஒரு செய்தியாக கூறியுள்ளார். இன்னும் கொஞ்சம் விளக்கம் கொடுத்திருக்கலாம்.

இரத்தம் நிறைந்த வரலாறு படைத்த பூமியை பற்றி குறைந்த இரத்ததில் எழுதியிருக்கிறார்.

இந்த எனக்கு ரொம்பவும் பிடித்த வரி

"காஷ்மீர் -இந்தியாவின் தலை மாநிலமட்டுமல்ல... தலைவலி மாநிலம் அது தான்."

No comments:

 
Website Hit Counter
வந்தவர்கள்