Wednesday, October 15, 2008

அரங்க மின்னல்கள்

'மயிலாடுதுறை' இளையபாரதி

நம் உரத்தசிந்தனை மாத இழதல் சார்பில் 'மயில்டுதுறை' இளையபாரதி எழுதிய 'அரங்க மின்னல்கள்' கவிதை நூல் வெளியிட்டு விழாவில் கலந்துக் கொண்டேன். அந்த நூலை வாங்கியும் படித்தேன். ஒவ்வொரு அரங்கத்தில் பரிசு, விருது வாங்கி தந்த கவிதைகளை நூலாக தொகுத்துள்ளார். சங்கக்கவி பிபாகரபாவு அவர்கள் அணிந்துரை எழுதியுள்ளார். இதற்கு முன் 'நிழலுதிர் நேரம்' (2005), 'நிலவின் புன்னகை' (2006) - இரண்டு கவிதை நூல்களை எழுதியுள்ளார்.

இந்த நூலில் எல்லா கவிதைகளும் ரசிக்க கூடியவை. இதில் எனக்கு பிடித்த வரிகள்....

‘இதந்தரும் சுதந்திரம்’ தலைப்பில்
மதிப்பெண்கள் மட்டுமே
குறிக்கோளாய் ஆகுது
மனித நேயப் பண்புகளை
மனதில் வாங்க மறுக்குது !

‘அன்பின்வடிவம் அன்னை தெரசா’ வை பற்றி
வாழ்க்கையை
நீ படிக்கும் வயதில்
வாழ்க்கையே
உன்னிடம் பாடம் கற்றது !

'தண்ணி'யும் தண்ணீரும்’ பற்றி
கர்நாடகம், ஆந்திரத்திடம்
கையேந்தி, நின்றோம்
உன்னால் !
அணையும் திறக்கவில்லை
ஆதரவும் கிடைக்கவில்லை !
ஆனால்,
அங்கிருந்து வரும் எனக்கு
'தண்ணி'க்குப் பஞ்சமில்லை !
- இந்த வரிகள் படித்ததும் சிரிப்பதா அழுவதா என்று தெரியாமல் இருந்தேன். வருத்தத்திற்குறிய விஷயத்தை நகைச்சுவையாக சொல்லியிருக்கிறார்.

‘மாறாத மாதங்கள்’ கவிதையில் 'அறிஞர்' அண்ணாவை பற்றி
'இவரின் இறுதி ஊர்வல
மக்கள் எண்ணிக்கையே
ஒரு கின்னஸ் சாதனை !

இதுவரை இளையபாரதி கவிதைகள் மட்டுமே எழுதியிருக்கிறார். மேலும், சிறுகதை, கட்டுரை எழுத வேண்டும் என்று இதன் மூலம் கேட்டுக் கொள்கிறேன்.


நம்மொழி பதிப்பகம், விலை.60.
கவியரசு கண்ணதாசன் நகர்,
கொடுங்கையூர், சென்னை - 118.

No comments:

 
Website Hit Counter
வந்தவர்கள்