Monday, November 3, 2008

பட்டிமன்றம் : பழமையா ? புதுமையா ?

பட்டிமன்றம் : இன்று மக்கள் பெரிதும் விரும்புவது பண்பாட்டை வளர்க்கும் பழமையா ? இல்லை நாகரிகம் வளர்க்கும் புதுமை ?

நேற்று ( 2 நவம்பர், 2008), எருக்கஞ்சேரியில் 11 மணிக்கு மேலே குறிப்பிட்ட தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. இத்தலைப்பின் நடுவராக 'கவிஞர்' சொர்ணபாரதி அவர்கள் இருந்தார். ‘பழமை’ என்ற அணியில் நானும், 'பேராசிரியர்' வள்ளியும், 'புதுமை' என்ற அணியில் 'ஆனந்தம்' இணை-இயக்குனர் மு. வீரமுத்துவும், 'கவிஞர்' மஞ்சரியும் பேசினோம்.

இந்த பட்டிமன்றம் எனக்கு மறக்க முடியாத அனுபவத்தை கொடுத்தது. நான் ஒன்றும் சிறந்த மேடை பேச்சாளர் இல்லை. என்னால் முடிந்தளவு பேசினேன். ஒரு சில இடத்தில் கை தட்டல் கிடைத்தது. ( பேச்சை நிருத்துவதற்கான கை தட்டல் இல்லை என்ற நம்பிக்கையில் பேச்சை தொடர்ந்தேன்.)

நான் பட்டி மன்றத்தில் பேசிய சாரம்.

*. 'பட்டிமன்றம்' என்ற விஷயம் 'பழமை' தான். அப்படி இருக்கும் போது 'மக்கள் பெரிதும் விரும்புவது பழமையா ? புதுமையா' என்ற தலைப்பு தேவையா ? என்ற கேள்வியுடன் என் பேச்சை தொடங்கினேன்.

* ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு
‘Old Wine in a New Bottle’
பழைய மதுவை புது கோப்பையில் கொடுப்பது போல் நவீன தகவல் தொடர்பு சாதனங்கள்' தகவல் தொடர்பு' என்ற பழமைக்கு தான் பயன்படுக்கிறது.

யுத்தத்துக்கான ஆயுதங்கள் புதுமையாக இருந்தாலும்
யுத்தம் என்பது பழமை தான்
பதிவு திருமணம், பகுத்தறிவு திருமணம் புதுமையாக இருந்தாலும்
திருமணம் என்பது பழமை.

* இன்று சமூதாய சீரழிக்கும் விஷயங்களில் ஒன்று " Living Together”. திருமண ஆகாத ஆண்ணும், பெண்ணும் ஒரே வீட்டில் தங்கி, விருப்பம் இருந்தால் திருமணம் செய்துக் கொள்வார்கள். இந்த புதுமையை நம் சமூகம் ஏற்க்குமா ? நம் பிள்ளைகள் இதை பின் பற்றுவதை நாம் விரும்புவோமா..?

* புதுமை... புதுமை... என்று சொல்கிறார்களே.! என் திருக்குறளுக்கும், கம்பராமாயணத்துக்கும் நிகரான புது நூல் உண்டா என்று சொல்லுங்கள்.

* இந்தியாவில் இவ்வளவு மக்கள் தொகை இருப்பதற்க்கு காரணமே 'சேலை' என்ற பழமையான உடை தான். அந்த பழமையான உடையை பலர் விரும்புவதால் தான் 'ஒன் மினிட்' புது புடவை வந்தது.

* இந்திய தம்பதிகளுக்கு பிறந்த மனோஜ் என்பவர், " Sixth Sense " என்ற படத்தை இயக்கி வெளியிட்ட போது பல பத்திரிக்கைகள் அவரை பாராட்டியது. அவர் மறக்க முடியாத பாராட்டு என்று அவர் சொன்னது 'தன்னை ஹிச்காக்குடன் ஒப்பிட்டது தான்' என்றார். புது இயக்குநர் கூட பழைய இயக்குநரின் விசிரியாக இருக்கிறார்.

* இன்று இலங்கை தமிழர்களுக்கு நாம் குரல் கொடுக்கிறோம் என்றால் நம் பாரதி நமக்கு கொடுத்த தமிழ் பற்று தான் காரணம். இந்த புதுமை நமக்கு தமிழ் பற்றா கொடுத்தது ?

* இன்று இருக்கும் பொருளாதார வீழ்ச்சியில், பழைய பொறியியல் படிப்பானா ' Mechanical, Electrical, Civil Engg.' படித்தவர்கள் அதிகம் பாதிக்க படவில்லை. புது படிப்பு படித்தவர்கள் தான் பெருமளவு பாதிக்கப்பட்டார்கள் என்று நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

* இறுதியாக...
பழமை என்பது கலிமண் மாதிரி ! நமக்கும், சுற்றுப்புறத்திற்கும் நல்லது தான் செய்யும். ஆனால், புதுமை என்பது பிளாஸ்டிக் மாதிரி ! நம்மையும், சுற்றுப்புறத்தையும் பாதிக்கும் என்று கூறி என் உரையை முடித்துக் கொண்டேன்.

நடுவர் சொர்ணபாரதி அவர்கள் தன் உரையை முடித்த பிறகு 'பழமைக்கு' சாதகமாக தீர்ப்பு வழங்கினார். நான் சிறப்பாக பேசினேன் என்று பலரும் என்னை பாராட்டினர். எனக்கு மேடை பேச்சு வரும் என்று நேற்று தான் புரிந்துக் கொண்டேன்.

No comments:

 
Website Hit Counter
வந்தவர்கள்