Monday, February 25, 2008

சடங்குகளின் கதை

( இந்து மதம் எங்கே போகிறது ? - பாகம் 2 )
- அக்னிஹோத்ரம் ராமானிஜ தாத்தாச்சாரியர் -
விலை.100. நக்கீரன் பதிப்பகம்

'அக்னிஹோத்ரம் ராமானிஜ தாத்தாச்சாரியர்' பெயரை கேட்டவுடன் எந்த பிரிவை சேர்ந்த மனிதர் என்று சொல்லி தெரிய வேண்டியதில்லை.'சடங்குகளின் கதை' என்றவுடன் சடங்குகள் பற்றிய மகத்துவத்தை சொல்ல போகிறார் என்று நீங்கள் எதிர்பார்த்தால்... நீங்கள் ஏமாற்றம் தான் அடைவீர்கள். இன்று பல சடங்குகள் அர்த்தம் புரியாமல் செய்கிறார்கள் என்று தாத்தாச்சாரியர் அவர்கள் நமக்கு விளக்குகிறார்.நூறு வயதை தாண்டியும் இவரின் எழுத்து இளமையாக தான் உள்ளது.

'விவாகம்' என்றால் திருமணம் என்று தானே இதுவரை நாம் எண்ணியிருந்தோம். ஆனால், 'விவாகம்' என்றால் பெண்ணை இழுத்துக் கொண்டு போவது என்று சொல்கிறார். இந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்தால் இனிமேல் யாரும் திருமண அழைப்பிதழில் யாரும் 'விவாகம்' என்ற வார்த்தையே போடமாட்டார்கள்.

அருங்கதி எப்படிபட்ட கற்புகரசி என்று அவர் கூறும் கதை மிகவும் அருமை. மணபந்தலில் மாப்பிள்ளை அருமையான மனைவியை தனக்கு கொடுத்ததற்கு பஞ்ச பூதங்களுக்கு நன்றி சொல்வது போல் வாத்தியார் சொல்ல சொல்வார். அதுவும் பெண்ணை பெற்ற தந்தை முன்... இதை சொல்லும் போது நமக்கே சிரிப்பு வரும்.

மந்திரங்கள், ஸ்லோகங்கள் இப்போது வாத்தியார்களுக்கே அர்தம் தெரியாமல் சொல்கிறார்கள் என்று தாத்தாச்சாரியர் அவர்கள் சொல்கிறார் .

தாத்தாச்சாரியர் - வேதங்களை எல்லாம் கற்ற மனிதர். இவரை தவிர யாராலும் வேதங்களில் உள்ள தவறுகளை சுட்டி காட்ட முடியாது. பிரமணராக இருந்தாலும் அவர் எழுத்துக்கள் பகுத்தறிவு சிந்தனை கொண்டதாக உள்ளது.

இவர் இன்றும் nakheeran.com இணையத்தளத்தில் எழுதிக் கொண்டு இருக்கிறார்.

No comments:

 
Website Hit Counter
வந்தவர்கள்