Wednesday, February 27, 2008

பிரபல எழுத்தாளர் சுஜாதா மரணம் !


தமிழ் வாசகர்களின் இதயக்கனியாக இருந்த எழுத்தாளர் சுஜாதா 27 பிப்ரவரி (புதன்க்கிழமை) உடல் நல குறைவாக மரணம் அடைந்தார்.

எஸ்.ரங்கராஜன் பெயர் கொண்ட சுஜாதா அவர்கள் சிறுகதைகள், பூதனம், நாடகம், வெள்ளித்திரையில் திரைக்கதை,வசனம் என்று தன் எழுத்துக்களால் முத்திரை பதித்தவர்.வளர்ந்து வரும் ரஜினியின் 'ரோபோ'வில் கூட சுஜாதா தான் வசனம் எழுதுவதாக இருந்தது.

'பாரத் எலக்ரானிக்ஸ்' (BEL) பொது மேலாளராகப் பணியாற்றிய போது மின்னணு வாக்கு எந்திரத்தை உருவாக்குவதில் முக்கிய பங்களித்தார். அந்த எந்திரம், இன்று இந்தியா முழுவதும் தேர்தல்களில் பயன்படுத்தப்படுகிறது.

சென்னை திருவல்லிக்கேணியில் 03.05.1935 அன்று பிறந்தார். தன் குழந்தை பருவத்தை திருச்சியில் இருக்கும் பாட்டியுடன் கழித்தார். சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிகையில் வெளிவந்தது. இவருடைய, "இடது ஓரத்தில்" என்ற சிறுகதை 1962 ஆம் ஆண்டு குமுதம் இதழில் ரங்கராஜன் என்ற பெயரில் வெளிவந்தது. குமுதம் ரா.கி.ரங்கராஜனுடன் குழப்பம் ஏற்பட்டதால் தன் மனைவி பெயரை, 'சுஜாதா', தன் புனைப்பெயராக வைத்துக்கொண்டார்.

சுஜாதா, நூற்றுக்கும் மேலான நாவல்களை எழுதியுள்ளார். அவற்றுள் சில: பதவிக்காக, ஆதலினால் காதல் செய்வீர், பிரிவோம் சந்திப்போம், அனிதாவின் காதல்கள், எப்போதும் பெண், என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ, நிலா நிழல், ஆ, கரையெல்லாம் செண்பகப்பூ, யவனிகா, கொலையுதிர் காலம், வசந்த் வசந்த், ஆயிரத்தில் இருவர், பிரியா, நைலான் கயிறு, ஒரு நடுப்பகல் மரணம், மூன்று நிமிஷம் கணேஷ், காயத்ரி, கணேஷ் x வஸந்த், அப்ஸரா, மறுபடியும் கணேஷ், வீபரீதக் கோட்பாடுகள், அனிதா இளம் மனைவி, காந்தளூர் வசந்தகுமாரன் கதை, பாதி ராஜ்யம், 24 ரூபாய் தீவு, வசந்தகாலக் குற்றங்கள், வாய்மையே - சிலசமயம் - வெல்லும், கனவுத் தொழிற்சாலை, ரத்தம் ஒரே நிறம், மேகத்தைத் துரத்தினவன், நிர்வாண நகரம், வைரம், ஜன்னல் மலர், மேற்கே ஒரு குற்றம், உன்னைக் கண்ட நேரமெல்லாம், நில்லுங்கள் ராஜாவே, எதையும் ஒருமுறை, செப்டம்பர் பலி, ஹாஸ்டல் தினங்கள், ஒருத்தி நினைக்கையிலே, ஏறக்குறைய சொர்க்கம், என்றாவது ஒரு நாள், நில் கவனி தாக்கு.

"ஆயிரத்தில் இருவர்", "தீண்டும் இன்பம்", "குரு பிரசாத்தின் கடைசி தினம்" ஆகிய குறுநாவல்களையும் ஸ்ரீரங்கத்துக் கதைகள் என்ற சிறுகதைத் தொகுப்பையும் Dr. நரேந்திரநாத்தின் வினோத வழக்கு, கடவுள் வந்திருந்தார் ஆகிய நாடகங்களையும் கணையாழியின் கடைசி பக்கங்கள், கற்றதும் பெற்றதும் [பகுதி 1-5], கடவுள் இருக்கிறாரா, தலைமைச் செயலகம், எழுத்தும் வாழ்க்கையும், ஏன்? எதற்கு? எப்படி?, சுஜாதாட்ஸ் ஆகிய கட்டுரை நூல்களையும் படைத்துள்ளார்.

காயத்ரி, கரையெல்லாம் செண்பகப்பூ, ப்ரியா, விக்ரம், வானம் வசப்படும் ஆகிய இவரின் கதைகள், திரைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ளன. இவருடைய கதைத் தலைப்பான பிரிவோம் சந்திப்போம், அண்மையில் ஒரு திரைப்படத்திற்குத் தலைப்பாயிற்று. இவரின் கதை ஒன்றை ஆனந்த தாண்டவம் என்ற பெயரில் திரைப்படமாக எடுத்து வருகிறார்கள்.

ரோஜா, இந்தியன், ஆய்த எழுத்து, அந்நியன், பாய்ஸ், முதல்வன், விசில், கன்னத்தில் முத்தமிட்டால், சிவாஜி த பாஸ் ஆகிய படங்களில் வசனம் எழுதியுள்ளார்.
( நன்றி : சிஃபி.com )


இறந்த எழுத்தாளர் சுஜாதா அவர்கள் முன்னால் ஜனாதிபதி அப்தூல் கலாமும் ஒன்றாக படித்தவர்கள் என்பது குறிப்பிட தக்கது.

2 comments:

Anonymous said...

//பாரத மிகுமின் நிலையத்தில் (BHEL) ஆராய்ச்சி - வளர்ச்சித் துறையில் பொது மேலாளராகப் பணியாற்றிய போது மின்னணு வாக்கு எந்திரத்தை உருவாக்குவதில் முக்கிய பங்களித்தார்.//

தவறு. சுஜாதா வேலை பார்த்ததும், ஓட்டு இயந்திரம் உருவாக்கியதும் BEL எனப்படும் 'பாரத் எலக்ரானிக்ஸ்' ஆகும். (பங்களூரில் உள்ளது)

குகன் said...

நன்றி.... செய்தி மாற்றப்பட்டது...

 
Website Hit Counter
வந்தவர்கள்