Monday, February 25, 2008

நான் வித்யா



'லிவிங் ஸ்மைல்' வித்யா
விலை.100. கிழக்கு பதிப்பகம்

எந்த எழுத்தாளருக்கும் கிடைக்காத பெருமை 'லிவிங் ஸ்மைல்' வித்யாவுக்கு உண்டு. தன் முதல் நூலிலையே மூன்று மொழியில் ( தமிழ், மலையாளம், ஆங்கிலம்) ஒரே சமயத்தில் வெளிவருவது என்பது எந்த எழுத்தாளருக்கும் கிடைக்காத பெருமை. தன் சொந்த வாழ்க்கையில் கிடைத்த அனுபவங்களை சொல்லிருக்கிறார் வித்யா.

அப்தூல் கலாம், பெரியார், பீடல், சே போன்றவர்களை பற்றி வாழ்க்கை அனுபவங்களை படித்தால் பல செய்திகள் கிடைக்கும். யார் இந்த 'லிவிங் ஸ்மைல்' வித்யா..? இவர் வாழ்க்கை பற்றி தெரிந்துக் கொண்டு நமக்கு என்ன பயன் என்று நினைக்கலாம்?

அதற்கு பதில்... இந்த நூலை எழுதிய 'லிவிங் ஸ்மைல்' வித்யா - ஒரு திருநங்கை. தான் ஆண்ணின் உடலில் இருந்து கொண்டு பெண்ணுக்கு உரிய உணர்வுகளை உணர்ந்ததை சொல்லியிருக்கிறார். இந்த புத்தகம் ஆரம்பம் முதல் முடிவு வரை ஒரு நண்பனின் டைரி படிப்பது போன்ற உணர்வு வரும். காரணம், புத்தகம் முடிக்கும் போது நாமும் 'லிவிங் ஸ்மைல்' வித்யா நண்பனாகி உதவ வேண்டும் என்று தோன்றும்.

எம்.ஏ பட்டம் பெற்று புனேவில் பிச்சை எடுத்து திரிந்த அனுபவத்தை நமக்கு படம் பிடித்து காட்டியுள்ளார். தன் பெயர் மாற்றத்திற்காக இரண்டு வருடங்காக போராடியவர் இவர் ஒருவராக தான் இருக்க வேண்டும். இவரைப்போல பல திருநங்கைகளுக்கு அரசாங்கத்தால் முகவரி இல்லாமல் தான் இருக்கிறார்கள். பால்மாற்று அருவை சிகிச்சை பற்றி குறிப்பிட்டு சொல்ல வேண்டும். அந்த அருவை சிகிச்சையில் உயிர் கூட போக வாய்ப்புள்ளது என்று தெரிந்துக் கொண்டு அந்த சிகிச்சை செய்து கொண்டார். தன் நண்பர்கள் பரும் அறிவுரை கூறினாலும் தன் மனசாட்சிப்படி நடந்து கொள்ள விரும்புவதால் அவர் பால்மாற்று அருவை சிகிச்சை செய்துள்ளார். "நான் தம்பியில்ல.... உங்க தங்கச்சி. இப்போதாவது என்ன பொண்ணா பாருங்க... என்ன உங்க பொண்ணா ஏத்துக்கோங்க அப்பா" என்று தன் உறவினர்களிடம் கூறும் போது...நம் கண்கள் கலங்குகின்றன...!

கை, கால், கண் இழந்தால் பரிதாபமாக பார்க்கும் உலகம் திருநங்கைகளை மட்டும் ஏன் தவறாக பார்க்கிறது என்று அவர் கேட்கும் கேள்வி நியாயம் தான்.

'நான் வித்யா' - ஒரு புத்தகமல்ல... உணர்வுகள். எந்த ஆயுதமுமில்லாமல் பலர் திருநங்கையர்களின் சமுகத்தை வாட்டும் குமுறல்கள். இரத்தம் சிந்தாத வலி... இப்படி பல வர்ண வார்த்தைகள் சொல்லலாம். ஆனால் வித்யாவின் அனுபவங்களுக்கு இந்த வார்த்தைகள் மிகவும் குறைவு தான்.

எத்தனையோ பேர் இரண்டில் ஒரு முடிவுக்கு வரமுடியாமல் இருந்திருக்கிறார்கள். இரண்டு பக்கம் ஆதரவு தர முடியாமல் நடு நிலையாக சில அரசியல் கட்சிகளும் இருக்கிறது. இரண்டு பெண்களை யாரை தேர்வு செய்து காதலிப்பது என்று குழப்பத்தில் சில இளைஞர்கள் இருகிறார்கள். இவர்கள் போல திருநங்கைகள் .... ஆண்,பெண் என்று இரண்டும் சேர்ந்து நடுநிலையில் தான் வாழ்கிறார்கள். ஆனால், சமுகமும், அரசாங்கமும் இவர்களை ஏற்க வேண்டும் என்று ஒரு மனிதனாக விரும்புகிறேன்.

இவர்களை 'அவன்','அவள்'
என்று அழைக்க முடியாதது தான் !
'அது' என்று அழைக்காமல்...
'அவர்கள்' என்று அழைப்போம் !!

இவரின் வரைத்தளம் : http://livingsmile.blogspot.com

2 comments:

முபாரக் said...

உங்களின் புதிய வலைப்பதிவுக்கு வாழ்த்துக்கள்.

வித்யாவின் புத்தக அறிமுகத்துக்கு நன்றி

மேலும் தொடர்ந்து பதிவிடுங்கள்

குகன் said...

மிகவும் நன்றி...முபாரக்

 
Website Hit Counter
வந்தவர்கள்