Saturday, January 3, 2009

ஜெயமோகன் எழுதிய 'கண்ணீரைப் பின்தொடர்தல்'

'நான் விரும்பி படித்ததில் பிடித்தது' பதிவு தொடங்கியது முதல் ஒவ்வொரு புத்தகத்தில் இருந்து எனக்கு பிடித்ததை மட்டும் தான் பகிர்ந்துள்ளேன். பிடிக்காததையும் வெளிப்படையாக கூறியிருக்கிறேன். தனிப்பட்டவர்களின் சந்தோஷத்திற்காகவும், விளம்பரத்திற்காகவும் எழுதவில்லை. எத்தனையோ நூல்கள் வாசகர் பார்வைக்கு வராமல் இருக்கிறது. என் பார்வைக்கு வந்த நூலை பகிர்ந்து கொள்ளும் போது, இதை பார்த்து அந்த ஆசிரியரின் இரண்டு நூல் விற்றால் அதுவே எனக்கு சந்தோஷம். எதுக்கு இவ்வளவு பில்டப் கொடுத்து ஆரம்பிக்கிறேன் என்று நினைக்கிறீர்களா ???

முதல் முறையாக ‘ஜெயமோகன்’ அவர்களை பற்றி எழுத போகிறேன். ஒரு சில வார்த்தைகள் எனக்கு பிடிக்காதை சொல்லிவிட்டால் ஜெ (ஜெயமோகன்) தரப்பில் இருக்கும் பதிவர்கள் நான் 'சாரு நிவேதா' கட்சியை சேர்ந்தவன் என்று சொல்லுவார்கள். 'சாரு நிவேதா'வை பற்றி எதிராக எழுதினால் ஜெயமோகன் தரப்பு சேர்ந்தவன் என்று சொல்லுவார்கள். ( ஒரு சில சமயத்தில் பதிவர் வட்டம் கூட அரசியல் கட்சி போல் தான் தெரிகிறது). நான் எந்த தரப்பில் சேர்ந்தவன் இல்லை என்பதை கூறுவதற்கு தான் இவ்வளவு பில்டப்பு...!!!

ஒரே நூலில் இந்திய மொழியில் இருக்கும் சிறந்த 22 நாவல்கள் படிக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக இந்த புத்தகத்தை வாங்கி படிக்க வேண்டும். ஆங்கில மொழியில் இருக்கும் இலக்கியத்தை பெருமை பேசும் தமிழ் எழுத்தாளர் மத்தியில் புகழ் பெற்ற பிற மொழி இந்திய நாவலை பற்றி ஆய்வுகளை எழுதியிருப்பதை பாராட்டியாக வேண்டும். அவர் நம்மிடம் பகிர்ந்துள்ள நாவல்களில் ஒரு சில நாவல்கள் பேரிலக்கியங்களுக்கு நிகரானவை என்று குறிப்பிட்டு சொல்லியிருக்கிறார். இதை அவர் சொல்லும் போது அந்த நூல்களை வாங்கி படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

ஜெயமோகன் எழுது நடையை பற்றி சொல்லும் அளவிற்கு எனக்கு அனுபவம் இல்லை. அவர் அளவிற்கு திறமையும் இல்லை. ஆனால், வாசகனாக ஒரு சில இடங்களை மேற்கொள் காட்ட விரும்புகிறேன்.

இந்த நூலின் இடம் பெற்றுள்ள பெரும்பாலான நாவல்கள் சோகத்தை மையமாக கொண்டுள்ளாது. நல்ல நாவல்கள் என்றால் நம் மனதை நெருடுவதும் அல்லது வாட்டுவது போல் இருந்தால் தான் ஏற்றுக் கொள்கிறார்கள். அது தான் ஏன் என்று புரியவில்லை.

தாராசங்கர் பானர்ஜியின் 'ஆரோக்கிய நிதேதனம்' நாவலை பற்றி சொல்லும் போது சுந்திர ராமசாமி அவர்கள் "நீங்கள் எனக்கு இந்நாவலை சிபாரிசு செய்திருக்கக் கூடாது. என்னால் தாங்க முடியாத படைப்பு இது" என்றார். சுந்தர ராமசாமி அவர்கள் தன் இறுதி நாள் வரை ஐரோப்பிய இலக்கிய மீது மிக விரிவாக கவனம் கொண்டிருந்ததையும், அசோகமித்திரன் போன்றவர்கள் இந்த நாவலை சொல்லாததற்கு வருத்தம் படுவது புரிகிறது. ஜெயமோகன் அவர்களின் இந்த ஆதங்கம் நியாயமானது தான். பல வாசகர்கள் படிக்கும் நூலில் அசோகமித்திரன், சுந்திர ராமசாமி பற்றி குறை வெளிப்படையாக சொல்லாமல் இருந்திருக்கலாம்.

மைத்ரேயி தேவியின் 'கொல்லப்படுவதில்லை' (வங்கம்) என்ற நாவலை சொல்லும் போது அதை வாங்கி படிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது. நிஜ காதலர்கள் மிர்சா, மைத்ரேயி தேவி அவர்கள் பிரிந்து பிறகு மிர்சா 'மைத்ரேயி' என்ற நாவலில் மைத்ரேயியை பற்றி தவறாக எழுதியிருந்தார். அவரின் நாவலுக்கு பதில் சொல்லும் விதமாக மைத்ரேயி அவர்கள் 'கொல்லப்படுவதல்லை' என்ற நாவலை எழுதியினார். கிட்டதட்ட இந்த நாவல் சுயசரிதை அந்தஸ்த்தை பெருகிறது. இரண்டு எழுத்தாளர்கள் நடுவில் இருக்கும் மனச்சிதைவை ஜெயமோகன் அவர்கள் சொல்லும் போது இதுவே நாவல் போல் இருந்தது. தத்துவ எழுத்தாளர் தாஸ்குப்தாவின் மகள் தான் மைத்ரேயி என்பது இன்னொரு தகவல்.

எஸ். ராமகிருஷ்ணன் புத்தகங்களை படிக்கும் போது 'தஸ்தயேவ்ஸ்கி' பற்றி குறிப்பிடுவார். அதே போல் 'நீலகண்டப் பறவையைத் தேடி' நாவலை பற்றி சொல்லும் போது ஜெயமோகன் அவர்கள் 'தஸ்த்யேவ்ஸ்கி'யை மேற்கொள் காட்டுகிறார். ('தஸ்த்யேவ்ஸ்கி' எழுதிய நூல்களை படிக்க வேண்டும் என்ற ஆவல் அதிகமாகிறது.)

ஸ்ரீ லால சுக்லவின் 'தர்பாரி ராகம்' (இந்தி) நாவல் பிரஹசனம் ( கேலி கூத்து - வகை சேர்ந்த நாவல்).ஜெயமோகன் எழுதிய 22 நாவல் ஆயுவு கட்டுரையில் இதில் மட்டும் தான் சோகமே இல்லை. இந்த நாவலை பற்றி ஜெ சொல்லும் போது நான் ரசித்த வரிகள்…
- "கடவுளும் கவர்மெண்டும் ஒன்று. அதைத் தூற்றாதே. பழி சேரும் உனக்கு' என்று தொடங்கும் கி.கஸ்தூரிரங்கனின் புகழ்பெற்ற கவிதை 'கவர்மெண்டைப் பழிக்காதே. மேலும் கவர்மெண்ட் தான் வந்து சேரும்" என்று முடியும்.
- "கோர்ட்டுக்குப் போவது நல்லது. அங்கே போனால் ஒரு திருடன் இன்னொரு திருடனை நடத்துவது போலவே அதிகாரிகளும் பிறரும் நம்மிடம் நடந்துக் கொள்வார்கள்."
- "அறிவுக்கு மதிப்பு உள்ளது போலவே முட்டாள் தனத்திற்கும் ஒரு மதிப்பு உண்டு'

சிவராம காரத்தின் 'மண்ணும் மனிதரும்' என்ற நாவலை சொல்லும் போது அந்த கிராமத்தில் வறுமையால் பிராமணர்களும், பெண்களும் கூட மண்ணில் இறங்கி கடுமையாக உழைத்தேயாக வேண்டும் என்பதை கூறிப்பிட்டுயிருக்கிறார்.
லௌகீகத்தில் ஈடுபட்ட எவருமே மனமே நிறைந்து சாகவில்லை.

தகழி சிவசங்கரப்பிள்ளையின் 'ஏணிப்படிகள்' நாவலில் 'கேசவபிள்ளை கதர் உடுத்து தேச விடுதலைக் கொண்டாட்டங்கள் கொண்டாடுகிறார். அதிகார அமைப்பு என்பது ஒர் இயந்திரம். அது பாரபட்ச மற்றது. நேத்து அவர்களுக்காக உழைத்தோம், இனி உங்களுக்காக. இதை பாலமாக வைக்காவிட்டால் நாடு சிதறிப்போகும் என்கிறார் காங்கிரஸ்காரர்களிடம். அதை காங்கிரஸ் ஆமோதிக்கிறது. எண்பது இறுதியில், சிவகுமார் நடித்த 'இனி ஒரு சுதந்திரம்' என்ற ஒரு படம் வெளிவந்தது வந்தது. அதில், சத்யராஜ் கூட கௌரவ தோற்றத்தில் வருவார். அந்த படத்தில் முதல் காட்சியில் ரிட்ஷா ஓட்டும் ராஜா, குறுக்கு வழியில் முன்னேறி இறுதியில் மாவட்ட ஆட்சியாளராக வருவார். 'கேசவபிள்ளை' பற்றி சொல்லும் போது ‘ராஜா’ பாத்திரம் தான் ஞாபகம் எனக்கு வந்தது.

வி.எஸ். காண்டேகரின் 'யயாதி' சொல்லும் போது மகாபாரத்தை மையமாக வைத்து 300 நாவல்கள் மேல் வந்துவிட்டதை சொல்லுகிறார். ( மஹாபாரத்தை மையமாக கொண்டு எழுதியவரை பிரஹசனம் செய்கிறாரோ...!)

குர்துல் ஜன் ஹைதரின் 'அக்னி நதி' நாவலில் ரொம்ப விரும்பி திரும்ப திரும்ப படித்த வரிகள்…
மனிதர் மறக்க விரும்பும் அனைத்தையும்
நினைக்க வைக்கும் தேவதை அவள்.


பிற மொழி நூல்களை படிக்க விரும்பமுள்ளவர்கள், இந்திய நாவலை பற்றி தெரிந்துக் கொள்ள நினைப்பவர்கள், ஆய்வு செய்ய நினைப்பவர்கள் கண்டிப்பாக இந்த நூல் படிக்க வேண்டும். பிற மொழி நாவல்களை நமக்கு அறிமுகம் செய்து வைத்த ஜெயமோகன் அவர்களுக்கு நன்றி சொல்லியாக வேண்டும்.

முகவரி

உயிர்மை பதிப்பகம்
11/29, சுப்பிரமணியம் தெரு.
அபிராமபுரம், சென்னை – 18

No comments:

 
Website Hit Counter
வந்தவர்கள்