Sunday, January 25, 2009

சிலப்பதிகாரம் : உலக நன்நெறி நூல்

( உலக நன்நெறி நூல்களில் சிறந்தது எது ? திருக்குறளா ? சிலப்பதிகாரமா ? அல்லது 'கம்பராமாயணமா' என்ற தலைப்பில் 'சிலப்பதிகாரத்திற்கு ஆதரவாக நான் பேசியது.)

உலக நீதி போதனை சொல்லும் நூல் திருக்குறள். 'இராமர்' என்ற வீரரின் வீரத்தை அதிகமான சொல்லும் காவியம் தான் 'கம்பராமாயணம்'. ஆனால், 'சிலப்பதிகாரம்' அப்படி இல்லை. ஒரு பெண் அன்றாட வாழ்க்கை சந்திக்கும் துன்பங்கள், துயரங்கள் பற்றி விபரிக்கும் காவியம். திருக்குறளை எல்லோரும் பின்பற்றியிருந்தால் உலகில் பிரச்சனைகளே இருக்காது. நடைமுறையில் சாத்தியம் இல்லை என்றே பலர் திருக்குறளை மறந்துவிட்டனர். 'கம்பராமாணத்தில் பல விஷயங்கள் இக்கால கட்டத்தில் பொருந்தாது. அதில் கடவுள் வந்து உதவுவது போல் கடவுள் நேரில் வருவதில்லை. ஆனால், 'சிலப்பதிகாரம்' இக்கால கட்டத்தில் மட்டும் அல்ல.... எக்கால கட்டத்தில் பொருந்தும். குறிப்பாக பெண்களுக்கு பொருந்தும். எந்த துன்பம் வந்தாலும் நாம் எதிர் கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துகிறது ?

ஆண்களை மையமாக வைத்து காவியம் எழுதியவர்கள் மத்தியில் பெண்களை மையமாக வைத்து அவளுடைய அன்பு, அறவனிப்பு, பொறுமை, கருணை, கோபம் என்று விளக்கும் நூல் தான் 'சிலப்பதிகாரம்'. வெறும் அறிவுரை விரும்பாதவர்கள் கூட கதையோடு அறிவுரை கூறினால் காது கொடுத்து கேட்பார்கள்.அந்த வகையில் சிலப்பதிகாரம் என்று நிலைத்து நிற்க்கும். பெண்ணுரிமை பற்றி பாரதிக்கு முன் குரல் கொடுத்தவர் இளங்கோவடிகள் என்று 'சிலப்பதிகாரம்' உதராணமாக வைத்து சொல்லலாம். அந்த அளவிற்கு பெண்கள் இக்காலத்தில் கூட சந்திக்கும் பிரச்சனைகளை பற்றி இளங்கோவடிகள் அன்றே எழுதியிருக்கிறார்.

சிலப்பதிகாரத்தில் நன்நெறி எங்கே இருக்கிறது ?? மணந்த கன்னகியை விட்டு கோவலன் மாதவியிடத்தில் சென்றானே, அந்தப்புரத்தில் செல்லும் அவசரத்தில் கோப்பெருஞ் சோழன் தவறாக கூறிய வார்த்தை ஒரு உயிரை கொன்று விட்டதே... இதில் நன்நெறி எங்கே உள்ளது என்று கேள்வி எழும். பல கேள்விகளில் வேள்வி நடத்தியதால் தான் இன்று வரையிலும் ‘சிலப்பதிகாரம்’ வாழ்ந்துக் கொண்டு இருக்கிறது.

கணவன் தவறு செய்து வந்தால் மனமுவர்ந்து ஏற்றுக் கொள்ளும் மனம் பல பெண்களிடம் இன்று இல்லாமல் போனது. வியாபாரத்தில் தோல்வி, வேலையில் சோர்வு, பொது இடத்தில் ஏதாவது ஒரு பிரச்சனை என்று வீட்டுக்கு வரும் ஆண்களை மலர்ந்த முகத்தோடு மனைவி அழைக்க வேண்டும் என்பதை உணர்த்தும் நூல் தான் 'சிலப்பதிகாரம்'. உடனே வேறு பெண்ணிடம் தொடர்பு வைத்திருக்கும் ஆண்களை மனைவி மன்னிக்க வேண்டும் என்ற பொருளில் எடுத்துக் கொள்ள வேண்டாம். வெளியே சென்று வரும் ஆண் எந்த கஷ்டத்தில் வீட்டுக்கு வருகிறார் என்பதை பெண் புரிந்துக் கொண்டால், அந்த ஆண் தன் வாழ்நாள் இறுதி வரை அந்த பெண்ணுடம் கழிக்க தோன்றும் என்பதை ‘சிலப்பதிகாரம்’ உணர்த்துகிறது.

ஆண்களுக்கு மட்டுமே துறவரம் போதுவாக இருந்த காலக்கட்டத்தில், தேவதாசி குடும்பத்தில் பிறந்த மாதவி தன் மகள் மணிமேகலையை கற்பு நெறியோடு துறவரம் மேற்கொள்ள செய்கிறாள். மணிமேகலை கற்பு நெறி மாறாமல் துறவரத்தில் ஈடுபடுகிறாள். அதுவும் புத்த துறவியாக இருப்பது மிக பெரிய காரியம். ஆண்கள் கூட யோசிக்கும் புத்த துறவு வாழ்க்கையை தன் மகள் மேற்கொண்டு வாழ வேண்டும் என்று மாதவி நினைத்தாள். தேவதாசி குலம் தன்னோடு போகவேண்டும் என்று கருதினாள்.

ஆண்கள் செய்யும் வேலை பெண்கள் செய்ய வேண்டும் என்று கூறும் லட்ச குரல்கள் இன்று உண்டு. ஆனால், அந்த காலத்தில் பெண்கள் துறவரம் மேற்கொள்ள முடியும், எந்த குடும்பத்தில் பிறந்தாலும் நெறி தவறாமல் வாழ முடியும் என்று உணர்த்தி இன்று பல பெண்களுக்கு உத்வேகமாய் இருப்பது ‘சிலப்பதிகாரம்’ தான்.

சிலப்பதிகாரம் அன்பு, பண்பு, கற்பு நெறியை மட்டும் உணர்த்தவில்லை. தவறு செய்தவன் யாராக இருந்தாலும் தைரியமாக கேள்வி கேட்கும் துணிச்சல் பெண்கள் இடம் உண்டு என்பதையும் காட்டுகிறது. தன் கணவரை கொன்ற மன்னரிடம் 'தேரா மன்னா செப்புவ துடையேன்..' என்று கேட்கும் பெண்ணில் மன உறுதியை காட்டுகிறது. இன்று அரசியல் எடுத்துக் கொண்டால், பதவியில் இருக்கும் ஒரு ஆண் செய்யும் தவறை துணிச்சலாக கேட்கும் மனம் பெண்ணுக்கு இருக்கிறது என்றால் ‘சிலப்பதிகாரம்’ காட்டிய வழி தான் என்று சொன்னால் மிகையாகாது.

சிலப்பதிகாரம் பெண்களுக்கு மட்டும் தான் நன்நெறி கூறுகிறதா... ஆண்களுக்கு இல்லையா என்று இன்னொரு கேள்வி எழும். வாழ்நாள் முழுக்க தன்னை நம்பி வரும் பெண்ணை கை விட்டு வாழ்ந்தால் பொன், பொருள் இழந்து நாடோடியாக திறிய வேண்டியது தான் என்பதை கோவலன் வாழ்க்கை மூலம் இளங்கோவடிகள் கூறுகிறார். பழி, பாவங்களுக்கு உட்பட்டு ஊழ்வினையால் கொல்லப்படுவான் என்பதற்கு கோவலன் வாழ்க்கை ஆண்களுக்கு முன் உதாரணம்.

பதவியில் இருக்கும் ஆண் எந்த நிலையிலும் மனம் தளரக் கூடாது, தீர்ப்பு அளிக்கும் முன் பல முறை யோசிக்க வேண்டும். அனுபவம் உள்ளவர்களிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும். கோப்பெருஞ் சோழன் அவசர தீர்ப்பால் கோவலனை கொன்றதோடு மட்டுமில்லாமல் மதுரை எரிவதற்கு காரணமாகவும் இருந்தது. எந்த விஷயத்தை பேசுவதாக இருந்தாலும், காலம் அறிந்து சொல்ல வேண்டும். அந்தப்புரத்தில் அவசரமாக சென்றுக் கொண்டு இருந்த மன்னனிடம் வழக்கு எடுத்து சென்ற காவலாளி மீதும் தவறு இருக்கிறது. காலம் அறிந்து சொல்ல வேண்டும் என்பதற்கு 'சிலப்பதிகாரம்' நீதி நூலாய் திகழ்கிறது.

சந்தர்ப்பம் வந்தால் சாந்தமாக இருந்த கன்னகி கூட கோபம் கொண்டு மதுரை எரிப்பாள். மனம் இருந்தால் எந்த சூழ்நிலையிலும் மாதவிப் போல் 'ஒருவனுக்கு ஒருத்தி' என்று வாழலாம். இரண்டு மனைவி வைத்திருப்பது வீரமாய் சொன்ன காவியங்கள் மத்தியில், இரண்டு மனைவியிடம் வாழ்ந்தால் கோவலன் போல் நாடோடியாக திரிந்து இறக்க வேண்டியது வரும். மன்னர் செய்யும் சிறு தவறு கூட மக்கள் வாழ்க்கையை பாதிக்கும். இப்படி பல நன்நெறிகள் சிலப்பதிகாரத்தில் உண்டு.

2 comments:

Unknown said...

Nice

calcitecaden said...

Casino Restaurants & Fine Dining | MapyRO
Casino Restaurants & Fine Dining in 부산광역 출장마사지 Las Vegas, NV. 16.3 mi (21.7 km) from 여수 출장샵 Main 목포 출장샵 St. and Main St. Experience. 논산 출장안마 24 Restaurants, 18 Barbeque/Dining & Lounge, 18 영주 출장안마 Barbeque

 
Website Hit Counter
வந்தவர்கள்