Saturday, March 8, 2008

யூதர்கள்


முகில்.
விலை ரூ.100, கிழக்கு பதிப்பகம்.

5000 வருட வரலாற்றில் இரத்ததால் எழுதப்பட்ட சரித்திரம். உலகின் மிக பழைமையான மதம் தான் - யுதமதம். ஆனால் அவர்களுக்கு என்று இஸ்ரேல் நாடு உருவானது நவம்பர் 29,1947ல் தான். அதற்கு முன்பு வரை அவர்கள் நாடோடியாக தான் வாழ்ந்தார்கள். தனி நாடு கிடைத்த பின்பும் அவர்கள் பிரச்சனை ஓய்ந்த பாடுடில்லை. இன்றும் பாலஸ்தீனத்துடன் யுத்தம் நடத்திக் கொண்டு தான் இருக்கிறது.

இஸ்லாம் மதம் முன்பே யூதர்கள் தான் கடவுளுக்கு உருவம் இல்லை என்று வழிப்பட்டவர்கள். கிறித்துவ மதத்தினர் வணங்கும் இயேசு ஒரு யூதர். உலகில் எல்லா மூலை முடுக்குகளிலும் இஸ்லாம், கிறித்துவம் பறவிவிட்டது. ஆனால், யூதன் என்றால் கொலை செய்யப்பட வேண்டியவர்கள் என்று தான் சரித்திரம் காட்டியுள்ளது.

'யுதர்கள்' - இந்த நூல் நான்கு பாகங்களாக எழுதியுள்ளார் முகில் அவர்கள். யூதாஸ் இயேசுவை காட்டிக் கொடுத்த கதையில் இருந்து நூல் துவங்குகிறது. அந்த ஒருவன்(யூதாஸ்) காட்டிக் கொடுத்ததால் சரித்திரம் யூதர்கள் என்றால் காட்டிக் கொடுப்பவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டது. அதன்பின் பைபிள் காலத்தின் தேவ தூதரான மோசஸ், தாவீத், சாலமோன் ஆலயம் பற்றி மிக அழகாகவும் தெளிவாகவும் கூறியுள்ளார்.

நிகழ்காலத்தில் இஸ்ரேல் - பாலஸ்தீன் பிரச்சனை இருந்தாலும், வரலாற்று சுவடுகளில் நபி அவர்கள் " யூதர்களும் இஸ்லாமியர்களுக்கு இணையாக உரிமை படைத்தவர்களாகவே நடத்தப்படுவர். யூதர்களின் மதச் சுதந்திரத்துக்கு எந்த விதத்திலும் தடையில்லை. அவர்கள் தங்கள் எண்ணப்படி வழிபடலாம். இந்த தேசம் இஸ்லாமியர்கள் யூதர்களோடு கைகோர்த்து உருவாக்கும் தேசம்' என்று தான் கூறியுள்ளார்.

இந்த நூல் யூதர்கள் வரலாற்றூ கதையோடு நிர்க்கவில்லை. அவர்களின் மத நம்பிக்கை, பண்டிக்கைகள், சமூகம், சடங்குகள், இந்தியாவில் யூதர்கள் என்று நான்காவது பாகத்தில் கூறியுள்ளார்.

யூதர்கள் பற்றீய நூல் என்பதால் முழுக்க முழுக்க ஆசிரியர் முகில் அவர்கள் வக்காளத்து வாங்கவில்லை. ஏன் யூதர்களை எல்லா காலத்திலும் வெருக்கப்படுகிறார்கள் ? என்பதையும் இடை இடையே கூறியும் இருக்கிறார். உலகில் உள்ள எல்லா மதங்களை விட தங்கள் மதம் தான் சிறந்தது என்ற எண்ணம் யூதருக்கு உண்டு. உலகத்திற்கு 'வட்டி' என்பதை அறிமுகம் படுத்தியவர்கள் யூதர்கள். 'இருக்க இடம் படுக்க பாய் கேட்கும் குணம்' யூதர்களுக்கு உண்டு. அப்படி தான் ஒவ்வொரு நாட்டிலும் குடி புகுந்து அதன் பிறகு விரட்டப்பட்ட காரணமும் இது தான். 'ஹமாஸ்' தாக்குதலை மிகைப்படுத்தி அமெரிக்க ஆதரவு பெற்றுக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் கெட்ட குணங்கள் சொல்லும் முகில், நல்ல குணங்களையும் சொல்லியிருக்கிறார். ஒரு யூதனுக்கு வாய்ப்பு வந்தால் அதை சரியாக பயன்படுத்தி கொள்வார். தான் முன்னேறுவதோடு தன்னுடன் மற்ற யூதர்களை முன்னேற்றும் குணம் யூதர்களுக்கு உண்டு.

இத்தனை யூதர்கள் கொலை செய்ய வேண்டும் டார்கெட் வைத்துக் கொண்டு தான் இன்றும் ஹமாஸ் இயக்கத்தில் சேருகிறார்கள். அன்று முதல் இன்று வரை யாராவது ஒருவர் யூதர்களை அழிபதை லட்சியமாக கொண்டவர்கள் பிறந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த நூல் யூதர்களுக்கு ஆதரவாகவுமில்லை, எதிராகவுமில்லை. அவர்களை நமக்கு புரிய வைத்திருக்கிறார்கள்.

2 comments:

Anonymous said...

தங்கள் விமரிசனத்துக்கு நன்றி.

முகில்.

Bee'morgan said...

any indian தளத்தில் உங்களின் கருத்தினைக் கண்டுதான் இங்கு வந்தேன்.. படிக்கும் ஆவலைத் தூண்டும் படி சிறப்பா எழுதியிருக்கீங்க..

 
Website Hit Counter
வந்தவர்கள்