Monday, September 15, 2008

'நடைபாதை' நூல் வெளியீட்டு விழா !

செப் 14 (நேற்று), ஞாயிறு மாலை 6:00 அளவில் ‘நாடைபாதை’ நூல் வெளியீட்டு விழா இக்சா மையத்தில் (எழும்பூர்) சிறப்பாக தொடங்கியது. தமிழ் தாய் வாழ்த்து பாடலை ஜெகதீஸ்வரன் பாடி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். முதல் நிகழ்ச்சியாக ‘கவிதை போட்டி’ நடைப்பெற்றது. இதில், கவிஞர்.சுப சந்திரசேகர் அவர்கள் வெற்றி பெற்றார். 'கலைமாமனி' விக்கிரமன் அவர்கள் அவருக்கு 100 ரூபாய் பரிசு வழங்கினார்.

கவிதை போட்டி முடிந்தது, விக்கரமன் அவர்கள் 'நடைபாதை' நூலை வெளியிட முதல் பிரதியை ராஜ ரத்தினம் அவர்கள் பெற்றுக் கொண்டார். 'போதிகை' உதயராம், துருவன், ‘இதயகீதம்’ ராமானுஜம் அவர்கள் நூலை பெறு வாழ்த்துரை வழக்கினர். 'முனைவர்' கஸ்தூரி ராஜா அவர்கள் நூலை திறனாய்வு செய்து பேசினார். நிகழ்ச்சியின் சில செலவுகளை ஏற்றுக் கொண்ட 'Bigtop Travels' நிறுவத்திற்கும், நூலை வெளியிட்ட வனிதா பதிபக்கத்திற்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. ‘Bigtop Travels’ சார்பில் உரிமையாளர் ஜெ.ரமேஷ் அவர்களும், 'வனிதா பதிப்பகத்தின்' சார்பில் பேராசிரியர் டாக்டர். பெரியண்ணன் அவர்களும் பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் விக்கிரமன் அவர்கள் எழுதிய இரண்டு நூல்களை எனக்கு பரிசாக அளித்தார்.

நெற்றைய நூல் வெளியீட்டு நிகழ்ச்சி என் வாழ்க்கையில் மறக்க முடியாத பொண்ணான நாளாக கருதுகிறேன்.

1 comment:

குகன் said...

நடைப்பாதை நூல் வெளியிட்டு விழாவை உயிர்மை பதிப்பகம் விமர்சித்துள்ளது. பார்க்கவும்.

http://uyirmmai.com/Uyirosai/contentdetails.aspx?cid=189

 
Website Hit Counter
வந்தவர்கள்