Monday, September 15, 2008

எழுத்தாளர் சுஜாதாவை பற்றி தெரிந்தால் சொல்லுங்கள் !

சுஜாதா அவர்கள் உயிருடம் இருக்கும் வரை நான் அவர் எழுதிய ஒரு கதைக் கூட படித்ததில்லை. அவர் உயிருடன் இருக்கும் வரை என் கண்ணுக்கு வெறும் சினிமாக்காரராக தான் தெரிந்தார். 'பாய்ஸ்' படத்தின் வசனத்தை கேட்டதும் அவர் எழுத்தை படிக்க வேண்டும் என்ற எண்ணமே தோன்றவில்லை. ஆனால், அவர் இறந்த தினத்தில் வலைப்பதிவர்கள் பலர் இறங்கள் தெரிவித்ததும், பலர் அவர் படைப்பை பற்றி பேசியதும் எனக்கு அவர் ஒரு ஈர்ப்பு ஏற்ப்பட்டது. ஒரு சிலர் பார்ப்பனன் மரணத்திற்கு ஏன் வருந்துகிறீர்கள் என்று எழுதியிருந்தனர். பார்ப்பனியத்தை எதிர்ப்பது தான் பெரியார் வகுத்த பகுத்தறிவு, ஒரு பார்ப்பன்னை தாக்கி பேசி எழுதுவதால் எந்த பயனுமில்லை. பார்ப்பன்னியம் மாறிவிட்டால் பார்ப்பனன் மாறிவிடுவான். சரி... நான் சொல்ல வருவதை விட்டு வேறு எதோ பேச விரும்பவில்லை. நான் சொல்ல விரும்புவது எழுத்தாளர் சுஜாதாவை மட்டும் தான். 'பார்ப்பன’ சுஜாதாவோ அல்லது 'சினிமா' சுஜாதாவோ இல்லை.

என் நண்பர் ஒருவர் 'ஆ...!' மற்றும் 'கற்றதும் பெற்றதும்' நூலை மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். நாவலில் எனக்கு ஆர்வம் இல்லாத்தால் நான் பெரும்பாலும் தமிழ் நாவல் படிப்பதில்லை. அன்றைய தினம் பலர் சுஜாதா புகழ் பாடியதில் 'ஆ..!' நாவலை எடுத்து படித்தேன். ஒரு திரில் திரைப்படத்தை பார்த்த திருப்தி ஏற்ப்பட்டது. 'கற்றதும் பெற்றதும்' நூலில் பல தகவல்களை தேகட்டாமல் கதை எழுதுவது போல் எழுதியிருந்தார். அதன் பிறகு அவர் புத்தகங்களை தேடி பிடித்து படிக்க தொடங்கினேன்.

என் இன்னொரு நண்பர் வீட்டில் சுஜாதாவின் 'விஞ்ஞான சிறுகதைகள்' வைத்திருந்தார். 460 பக்கங்கள் கொண்ட நூலை முழு மூச்சில் நான்கு நாளில் படித்து முடித்தேன். அதில், 'ஆகாயம்' என்ற ஒரு சிறுகதை படித்து முடித்த பிறகு அதை பாதியிலையே விட்டுவிட்டதாக எனக்கு தோன்றியது. ஆனால், அவர் எழுதிய இன்னொரு நூலான 'பாரதி இருந்த வீடு' படிக்கும் போது 'ஆகாயம்' கதையின் முடிவை தெரிந்துக் கொண்டேன். இந்த சிறுகதை வானொலி நாடகமாக அரங்கேறியது என்பது இன்னொரு குறிப்பு. 'பாரதி இருந்த வீடு' நூலை படிக்கும் போது சுஜாதாவின் நாடக்கதை ஆசிரியர் உருவத்தை பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.

அடுத்து கணேஷ், வஸந்த் கதாப்பாத்திரங்கள் கொண்ட 'விபரீதக் கோட்பாடு' (குறுநாவல்) நூல் என்று சுஜாதாவின் படைப்புகளை ரசித்து படித்ததை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். திடீர் ஈடுபாடு வந்த எனக்கே அவர் நூல் மீது இவ்வளவு ஈர்ப்பு வரும் போது அவர் வாசகர்கள் பற்றி கேட்டால் இன்னும் பல செய்திகள் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

அவரை பற்றி தொகுப்பு நூலே போடலாம் என்ற ஆசை வந்துவிட்டது. சுஜாதாவின் சீனியர் வாசகர்கள் இருக்கும் போது திடீர் வாசகன் என்னால் முடியுமா என்ற பயமும் உள்ளது. சுஜாதாவை பற்றி உங்களுக்கு தெரிந்த சில குறிப்புகளை சொல்லுங்கள்.

1 comment:

விருபா - Viruba said...

குகன்,

வெங்கட்ரமணன் என்ற ஒரு சுஜாதாவின் வாசகர் ஒருவர் சுஜாதா மறைவு பற்றிய பல இணைப்புகளை ஒரே இடத்தில் Sujatha Tributes என்று திரட்டி வைத்திருக்கிறார். பார்க்கவும்

 
Website Hit Counter
வந்தவர்கள்