Sunday, December 28, 2008

ஷேக்ஸ்பியரின் 'ஒதெல்லோ'

தமிழில் : வை. சண்முகசுந்தரம் M.A.,B.L

ஆங்கில நாடக இலக்கியங்களில் மறக்க முடியாத முக்கிய நபர் ஷேக்ஸ்பியர். இன்று வரை , ஆங்கில நாடக இலக்கியங்கள் எடுத்துக் கொண்டால் ‘ஷேக்ஸ்பியர்’ போன்ற எழுத்தாளரை நாம் தேடிக் கொண்டு இருக்கிறோம். அவர் எழுதிய நாடக கதாப்பாத்திரங்கள் காலம் கடந்து வாழ்ந்துக் கொண்டு இருக்கிறார்கள். ரோமியோ, ஜூலியட், ஹெம்லெட், ஒதெல்லோ போன்ற கதாப்பாத்திரங்கள் இன்று வரை வாழ்கிறார்கள். இன்னும் எத்தனை நூற்றாண்டானாலும் ‘ஷேக்ஸ்பியர்’ தன் கதாப்பாத்திரங்கள் உருவத்தில் வாழ்வார்.

ஷேக்ஸ்பியரின் 'ஒதெல்லோ' வும் காதல் கதை தான். படிக்காத பாமரன் கூட ரோமியோ, ஜூலியட் கதாப்பாத்திரங்கள் பற்றி சொல்லுவான். இந்த இரண்டு கதாபாத்திரங்களும் மிக பிரபலம். அந்த அளவிற்கு 'ஒதெல்லோ' கதை பெரும்பாலனவர்களிடம் சென்று அடையவில்லை. இரண்டு கதைகளிலும் காதலர்கள் இறந்து விடுகிறார்கள். மற்றப்படி இந்த இரண்டு கதைகளிலும் எந்த வித ஒற்றுமையும் இல்லை.

நீக்ரோ கதாப்பாத்திரத்தை கதாநாயகனாக ஷேக்ஸ்பியர் அவர்கள் எழுதியிருக்கிறார். கருப்பு, வெள்ளை நிற பிரச்சனை இக்காலாத்தில் இருக்கும் போது அப்போது நீக்ரோவை கதாநாயகனாக வைத்து எழுதியிருக்கிறார். ( அவர்க்கு எத்தனை மிரட்டல் வந்ததோ யாருக்கு தெரியும்). இந்த துணிச்சல் தான் பல நூற்றாண்டுகள் கடந்தும் அவர் புகழ் உள்ளது.

'ஒதெல்லோ' நாடகம் வெனிஸ் நகரம், சைப்ரஸ் தீவை சுற்றி கதை நடக்கிறது. துருக்கியர்களுடன் போரில் வெற்றி பெற்று, யுத்த கலைப்பாற தன் காதல் மனைவி டெஸ்டிமோனாவுடன் சைப்ரஸ் தீவில் ஒதெல்லோ தங்கிறார். துணை படைத்தலைவன் கேஸ்ஸியோ மற்றும் அவர் அடுத்த பதவியில் உள்ள இயாகோ ஒதெல்லோவுக்கு உதவியாக தங்கிறார்கள். கேஸ்ஸியோ பதவியை அடைய நினைக்கும் இயாகோ டெஸ்டிமோவுக்கும், கேஸ்ஸியோவுக்கும் கள்ள தொடர்ப்பு இருப்பதாக ஒதெல்லோவிடம் கூறுகிறான். முதலில் நம்ப மறுக்கும் ஒதெல்லோ சிறுக சிறுக இயாகோ வார்த்தை வலையில் விழுகிறான். ஒதெல்லோ பரிசாக கொடுத்த கை குட்டையை டெஸ்டிமோனா தவறுதலாக தொலைத்து விட அதை கேஸ்ஸியோ அறையில் போடுகிறான். ஒதெல்லோவுக்கு மேலும் சந்தேகம் ஏற்படுகிறது.

சந்தேகத்தின் உச்சத்தை தொட்ட ஒத்தெல்லோ தனது காதல் மனைவி டெஸ்டிமோனாவை கொலை செய்து விடுகிறான். கேஸ்ஸியோ மூலம் இயாகோவின் சூழ்ச்சி தெரிய வர தன் மனைவி கொன்ற பாவத்திற்கு தன் உயிரை மாய்த்துக் கொள்கிறான்.

ஷேக்ஸ்பியர் பெரும்பாலான நாடகங்கள் சோகத்தில் முடிவது போல் இந்த நாடகமும் சோகத்தில் தான் முடிகிறது. காலத்தால் அழியாத 'ஒதெல்லோ' நாடகத்தை வை. சண்முகசுந்தரம் அவர்கள் நன்றாக மொழிபெயர்த்துள்ளார். 'தையல் வெளியீடு' இந்த நூலை வெளியிட்டுள்ளது. பல உலக இலக்கிய நூல்களை 'தையல் வெளியீடு' தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருவது குறிப்பிடதக்கது.

முகவரி :

தையல் வெளியீடு
E- 4, முதல் தளம்,
252, செல்லப்பா தெரு,
குயப்பேட்டை, சென்னை - 12.
தலைப்பேசி : 98414 49529 / 93826 77312

No comments:

 
Website Hit Counter
வந்தவர்கள்