Wednesday, December 17, 2008

ஞாநியின் ‘நெருப்பு மலர்கள்’

விலை.55, பக்கங்கள். 144
விகடன் பிரசுரம், சென்னை - 2

ஞாநி அவர்களின் பேட்டியை கேட்ட அளவிற்கு அவருடைய எழுத்துக்கள் எனக்கு அதிகம் பரிச்சயமில்லை. அவருடைய சில தொலைக்காட்சி தொடர்களை பார்த்து இருக்கிறேன். நான் வாசித்த ஞாநியின் முதல் நூல் என்றால் அது ‘நெருப்பு மலர்கள்’ தான். அடிக்கடி கலைஞரை தாக்கி பேசுவதாலு ஞாநி மீது அந்த அளவிற்கு ஈடுபாடு வந்ததில்லை. ( எத்தனை பேர் தான் ஆளும் கட்சியை திட்டுவார்கள்). ஆனால், ஒரு பெண்ணியவாதியாக எனக்கு ஞாநியை பிடிக்கும். 'நெருப்பு மலர்கள்' புத்தகத்தை படித்து முடித்த பிறகு ஞாநி எப்பேர் பட்ட பெண்ணியம் சிந்தனை கொண்டவர் என்பதை உணர முடிந்தது.



“ஆங்கிலத்தில் வரலாற்றை குறிக்கும் சொல்லான ' History ' என்பது His Story '. அவன் கதை என்பதியிலிருந்து உருவானது. வரலாற்றில் ‘Her Story’ களுக்கு இடமில்லை.” முன்னுரையில் முதல் வாக்கியத்திலே அசத்திவிட்டார்.

நம் சரித்திர பக்கங்கள் பெண்களுக்கு இடம் அளிக்காமல் மறைந்து, மறந்து போன பெண்களை ‘நெருப்பு மலர்கள்’ நூலின் மூலம் அவர்களை பதிவு செய்தியிருக்கிறார். அவர் இதில் எழுதிய எழுதிய (சொல்லிய) பதினான்கும் கதைகள் அல்ல. உண்மையாக நடந்த நிகழ்வுகள்.

விடுதலை புரட்சி இயக்கங்கள் போராளிகளுக்கு சமைத்துப் போடுவதே பெண்களின் வேலையாக காலத்தில், அதை மாற்றி கையில் தூப்பாக்கி ஏந்தி போராடிய ப்ரீதி, பீனா அவர்கள் குறிப்பிட வேண்டியவர்கள். அதுவும் ப்ரீதி நமது துணை கண்டத்தின் முதல் 'சயனைட்' பெண் என்ற பெயரிலாவது விடுதலை போராட்டங்களில் குறிப்பிட மறந்துவிட்டோம்.

முவலூர் ராமாமிர்தம் அம்மையார் அவர்கள் தாசி குலத்தில் பிறந்து, தேவதாசி முறையை ஒழித்ததை படிக்கும் மெய் சிலிர்க்க வைக்கிறது. ஒரு இடத்தில் புகழ் பெற்ற காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, 'தேவதாசி முறையை ஒழித்தால் கலையும், சங்கீதமும் அழிந்துவிடும்' என்று வாதாடினார். 'தேவதாசியாக இருப்பதற்காக அந்த பெண்கள் பெருமைப்பட வேண்டும்' என்றார். ( அப்போதே காங்கிரஸ் இப்படி தான் யோசிக்கும் போல). அதற்கு முத்துலட்சுமி 'எங்கள் குலத்துப் பெண்கள் இத்தனை காலமாக தேவதாசிகளாக இருந்து அலுத்துப் போய்விட்டார்கள். கனம் உறுப்பினர் வேண்டுமானால் அவர் குலத்துப் பெண்களை இனி இந்தக் கௌரவமான பணியில் ஈடுபடுத்திக் கொள்ளட்டும். எனக்கு ஆட்சேபனை இல்லை' என்று ஒரு போடு போட்டார்.

நம் இந்திய சிவில் சட்டத்தை மாற்றிய ருக்மாவின் திருமணம், வேதம் ஓதிய ராமாபாய், பாலுணர்ச்சியை பற்றி எழுதிய முத்துப்பழநி என்று பல வித்தியாசமான, சரித்திரத்தில் நாம் கேள்வி படாத பெண்களை 'நெருப்பு மலர்கள்' புத்தகத்தில் ஞாநி பதிவு செய்கிறார்.

விஜசாந்தி, ரோஜா வடிவில் தெலுங்கு படத்தில் பார்த்த 'தெலுங்கானா போராட்டத்தை' தனது இறுதி அத்தியாயத்தில் எழுதியிருக்கிறார். தெலுங்கு படத்தை பார்க்கும் போது அவர்களது போராட்டம் எரிச்சலாக இருந்தது. ஆனால், படிக்கும் போது இன்னும் ஆந்திராவில் இப்படி நடக்கிறதா என்று நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. தெலுங்கானா போராட்டத்தை பற்றி தனி புத்தகமே எழுத வேண்டும் என்று நினைக்கிறேன்.

பின்னைரையில் 'வாசலில் போடப்பட்டிருக்கும் பால் பையை எடுத்து போய் அம்மாவிடமும், செய்திதாளை அப்பாவிடமும் கொடுக்கக் குழந்தைக்கு யார் கற்றுக் கொடுத்தார்கள்.' என்று கவிஞர் வெண்ணிலாவின் கவிதை வரிகளை மேற்க்கொள் காட்டியிருப்பது நல்ல அழகு.

'நெருப்பு மலர்' படித்த பிறகு நான் விரும்பி படிக்கும் எழுத்தாளர்களில் 'ஞாநி'யும் இருக்கிறார்.

2 comments:

gnani said...

நன்றி.அன்புடன் ஞாநி

குகன் said...

நன்றி ஞாநி சார்..

என் பதிவு உங்கள் பார்வைக்கு வரும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.

 
Website Hit Counter
வந்தவர்கள்