எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம் அதிகம் புத்தகம் படித்தேன். இந்த வருடத்தில் நான் படித்த புத்தகங்கள்.
சுஜாதா -
- ஆ...
- விஞ்ஞான சிறுகதைகள்
- விபரீத கோட்பாடு
- பாரதி இருந்த வீடு
- 24 ரூபாய் தீவு
- நேனோ டெக்னாலஜி
பாக்கியம் ராமசாமியின்
- 'நகைச்சுவை சிறுகதைகள்'
- கமான் அப்புசாமி கமான் !
எஸ்.ராமகிருஷ்ணனின்
- அரவான்
-துணையெழுத்து
- நெடுங்குருதி
முகில்
- லொள்ளு தர்பார்
- லொள்ளு காப்பியம்
- யூதர்கள்
- அக்பர்
- ஔரங்கசீப்
மருதன்
- லெனின் : முதல் காம்ரேட்
- மோதிப் பார் ! : ஹியூகோ சாவேஸ்
- விடுதலை புலிகள்
- திப்பு சுல்தான்
- பவுத்த மதம்
'சோலை' தமிழினியன்
- கதைசோலை
- காதல் சொல்ல வந்தேன்
- அன்புள்ள அப்பா ( முதல் பாகம்)
'கலைமாமனி' விக்கிரமன்
- சிறுகதை களஞ்சியம் (5வது தொகுதி)
- சோமதேவரின் உயில்
சுப்பிரமனியன் சந்திரன்
- அசரீரி
பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தின் ‘அறிவியல் அறிஞர்’
- ஆல்ப்ரெட் நோபல்
- சர் வாட்ஸன் வாட்
- மைக்கேல் ஃபாரடே
ஞாநி - ‘நெருப்பு மலர்கள்’
ஜெயமோகன் - கண்ணீரை பின் தொடர்தல்
சாரு நிவேதா - ஸீரோ டிகிரி
சா. கந்தசாமி - 'விசாரணைக் கமிஷன்'
நாகூர் ரூமி - HIV : கொல்லப் பிறந்த கொடுங்கோலன்
அருமையார் - திராவிடம் கண்ட தேய்பிறை
பி.எஸ்.ஆர்.ராவ் - கோர்ட் மார்ஷியல்
'முனைவர்' கு. ஞானசம்ந்தன் - பரபரப்பு... சிரிசிரிப்பு...
பா.ராகவன் - என் பெயர் எஸ்கோபர்
'மயிலாடுதுறை' இளையபாரதி - அரங்க மின்னல்கள்
என்.சொக்கன் - அஸிம் கம்ப்யூட்டர்ஜி
ஜி.எஸ்.எஸ் - என் நாடு, என் மக்கள், உன் ரத்தம் !
அ.கருணாந்தன் - வரலாறு என்றால் என்ன ?
சிபி கே. சாலமன். - 6 (சிக்ஸ்) சிக்மா
வெ.சாமிநாத சர்மா - முசோலினி
'லிவிங் ஸ்மைல்' வித்யா - நான் வித்யா
அக்னிஹோத்ரம் ராமானிஜ தாத்தாச்சாரியர் - சடங்குகளின் கதை
பாலு சத்யா - மேரி க்யூரி
க.குணசேகரன் - இருளர்கள்:ஒர் அறிமுகம்
எம்.ஜி.ஆர். முத்து - வள்ளல் எம்.ஜி.ஆர் வரலாறு
நல்லமூர் கோவி.பழனி - அறிவியல் கணித அறிஞர்கள்
ஷேக்ஸ்பியர் – ஒதெல்லோ (தமிழ்)
சிவன் - ஹோமரின் இலியட் (தமிழ்)
சிங்காரவேலு – டால்ஸ்டாய்
சிறு புத்தகங்கள்
தாய் வீட்டில் கலைஞர் - தி.க வெளியீடு
நான் நாத்திகன் ஏன் - பகத்சிங்
ஜாதி ஒழிய வேண்டும் ஏன் ? - 'தந்தை' பெரியார்
இது தான் மகாமகம் - 'தந்தை' பெரியார்
Why I do not belive in God – K.Veermani
Harry Potter and the Deathly Hallows (7th part) - J.K.Rowling
True Story of Jesus
(Bold இருப்பது வாங்கிய புத்தங்கள்
மற்றவை இரவல் மற்றும் நூலகத்தில் வாங்கி படித்த புத்தகங்கள்)
‘மனசாட்சி சொன்னது' (சிறுகதை) - நம் உரத்தசிந்தனை போட்டியில் வெற்றி பெற்றது.
புத்தக வாசகர்களுக்காக உருப்படியான ‘Tamibookreview.blogspot.com’ - ஒரு வலைப்பதிவை தொடங்கினேன்.
வலைப்பதிவை நல்ல முறையில் பயன் படுத்தி 'குண்டக்க மண்டக்க' என்ற நகைச்சுவை தொடரை எழுதினேன்.என் நகைச்சுவைக்கு வரவேற்பு உள்ளதை பின்னூட்டத்தில் மூலம் உணர முடிந்தது.
‘நடைபாதை’ (சிறுகதை) நூலை வனிதா பதிப்பகம் மூலம் வெளியிட்டேன்.
கலீலியோ கலிலி, ரைட் சகோதரர்கள், இலங்கை - மூன்று சிறு நூல்களை எழுதி முடித்தேன்.
'எழுதி முடித்துவிட்டேன்' என்று நினைத்த நூல்களை, தகவல் குறைவாக இருப்பதால் மீண்டும் எழுதிக் கொண்டு இருக்கிறேன்.
எட்டையப்புரத்தில் நடந்த இலக்கிய சந்திப்பும், நடேசன் பார்க்கில் பதிவர் சந்திப்பும், கிழக்கு பதிப்பகத்தின் மொட்டை மாடி கூட்டம் போன்ற நிகழ்ச்சிகள் என்னால் மறக்க முடியாதவை.
மறக்க நினைக்கும் நிகழ்ச்சிகளை பதிவில் போட்டு ஞாபகத்தில் வைத்துக் கொள்ள விரும்பவில்லை.
அடுத்த வருடம் ஆங்கில புத்தகங்களும் அதிகமாக படிக்க வேண்டும் என்று முடிவு எடுத்திருக்கிறேன். நல்ல படைப்புகளை படைக்க வேண்டும், குறிப்பாக நகைச்சுவை கட்டுரையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பத்திரிக்கையில் எழுதும் வாய்ப்பை தேட வேண்டும். இது தான் என் புது வருடத்தின் முயற்சி...
அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !!
Wednesday, December 31, 2008
இந்த வருடம் நான் உருப்படியாய் செய்தது
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
குகன்.. லைட்டா பொறாமையாத்தான் இருக்கு... :) நிறைய படைப்புக்களை உருவாக்க வாழ்த்துக்கள்...
// Natty said...
குகன்.. லைட்டா பொறாமையாத்தான் இருக்கு... :) நிறைய படைப்புக்களை //
Thanks Natty
Post a Comment